மேலும் அறிய

சிக்கிய கணவன், மனைவி ; அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி

தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.17.50 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி

கடலூர் அருகே எஸ்.புதூர் கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் (வயது 50), இவர் நேற்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் மனு அளித்துள்ளார். புகாரில், எனக்கு அஜித்குமார், அருண்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். எனது மூத்த மகன் அஜித்குமாரும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் முத்தையா நகரை சேர்ந்த கோகுல் என்பவரும் ஒரே பள்ளியில் படித்ததால் நண்பர்களாக பழகி வந்தனர்.

கோகுல், கடந்த 2 வருடங்களுக்கு முன் அஜித்குமாருக்கு போன் செய்து, எனது அப்பா பாஸ்கரன் மூலம் தமிழக அரசு ஊரக வளர்ச்சி துறையில் வேலை வாங்கி தருகிறேன் என கூறினார். அதை எனது மகன் மறுத்துவிட்டதால் என்னை தொடர்பு கொண்ட பாஸ்கரன், நான் ரயில்வேயில் உயர்ந்த பதவியில் இருக்கிறேன். எனது மனைவி அனுசுயாவுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளவர்களை நன்கு தெரியும். என்னை நம்பி வேலைக்கு பணம் கொடுங்கள். கோகுலுக்கும் அரசு வேலை வாங்குவதற்காக ரூ.6 லட்சம் கட்டியுள்ளேன். உங்கள் மகனுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என்றார்.

வேலை வந்துவிடும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் பணத்தை தந்து விடுகிறோம்

அவர் கூறியதை நம்பி ரூ.6 லட்சத்தை பாஸ்கரன் வீட்டில் வைத்து கொடுத்தேன். அதற்கு பிறகு எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. பாஸ்கரனை தொடர்பு கொண்டபோது, வேலை வந்துவிடும், இல்லாவிட்டால் ஒரு மாதத்தில் பணத்தை தந்து விடுகிறோம் என்றார். பின்னர் ரூ.1 லட்சம் கொடுத்தார். மீதி பணத்தை தரவில்லை. பாஸ்கரன் குறித்து விசாரித்தபோது, குணசேகர் என்பவரிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.14 லட்சம் பெற்று கொண்டு ஏமாற்றியுள்ளார்.

மீதி பணம் கேட்டதால் கொலை மிரட்டல்

அவருக்கு ரூ.1.50 லட்சம் மட்டும் திரும்ப கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியுடன் எனது மீதி பணம் ரூ.5 லட்சத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார் என்று கூறியிருந்தார். புகார் குறித்து நடவடிக்கை எடுக்க எஸ்பி உத்தரவிட்டதன் பேரில், கடலூர் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி பாஸ்கரன் (60), அவரது மனைவி அனுசுயா (56) ஆகியோரை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget