வெனிஸ் நகரத்திற்கு அருகே உள்ள தீவு ஒன்றில் தமிழ் ஓலைச்சுவடிகள் கண்டறிந்த தமிழ் மாணவர்கள்
ஓலைச்சுவடிகளைப் பார்க்கவும் படிக்கவும் உதவியாக இருந்தே அர்மேனிய நூலகத்தின் துறவிக்குத் திருவள்ளுவர் சிலையை அன்பளிப்பாக அளித்ததோடு, சிலையில் உள்ள எழுத்தாணி ஓலைச்சுவடியின் வழி எழுதுமுறையை எடுத்துரைத்துள்ளார்.

செவ்வியல் மொழியான தமிழ் மொழி இலக்கிய, பண்பாட்டு வளம் செறிந்தததாகும். தமிழ் இலக்கியங்கள், ஆவணங்கள் பலவும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. அவற்றுள் பல சுவடிகள் இன்று இல்லை. இச்சூழலில் இத்தாலியின் வெனீசு நகரத்திற்கு அருகே உள்ள தீவு ஒன்றில் தமிழ் ஓலைச்சுவடிகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன.
புதுதில்லி JNU தமிழ்முனைவர் பட்ட ஆய்வாளர் த.க.தமிழ்பாரதன். தமிழ்-கிரேக்க ஒப்பாய்வு மேற்கொண்டுள்ளார். இவர் கிரேக்கத் தொல்லெழுத்துக் கலை தொடர்பான கருத்தரங்கிற்காக இத்தாலியின் வெனீசுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக வெனீசு சென்றிருந்த அவர் தமிழ் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்துள்ளார் pic.twitter.com/fFRtIZx1Xt
— arunchinna (@arunreporter92) July 31, 2023


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

