மேலும் அறிய

Invalid Marriages: சட்டப்படி செல்லாத திருமணத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர் சொத்தில் உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம்

இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்களில் அவர்கள் உரிமை கோரலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டப்படி செல்லாத திருமணம் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கும் பெற்றோர் சொத்தில் பங்கு உண்டு என உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. அத்தகைய குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்து வாரிசுச் சட்டத்தின்படி பெற்றோரின் சொத்துக்களுக்கு அவர்கள் உரிமை கோரலாம் என கூறியுள்ளது.

சட்டப்படி செல்லாத திருமணங்கள்:

கடந்த 2010ஆம் ஆண்டு, வழக்கு ஒன்றில், இரண்டு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகள், தங்கள் பெற்றோரின் சொத்துக்களைப் பெறுவதற்கு மட்டுமே உரிமை இருக்கிறது. மூதாதையர் சொத்தை பெறுவதற்கு இத்தகைய குழந்தைகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு நடந்த மற்றொரு வழக்கில், சட்டப்படி செல்லாத திருமணங்களின் வழியாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூதாதையர் சொத்திலும் சரி, பெற்றோர் சொத்திலும் சரி, உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் வேறு விதமான தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு:

இந்த விவகாரம் தொடர்பாக, 2011ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை, இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்கு எடுத்தது. 

இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில், "சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்கள், சட்டப்படி செல்லாத திருமணங்கள் வழியாக பிறக்கும் குழந்தைகள், பெற்றோரின் மூதாதையர் சொத்தில் உரிமை கோரலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து திருமணச் சட்டத்தின் (HMA) பிரிவு 16(1) மற்றும் பிரிவு 16(2) இன் கீழ் வரும் குழந்தை, இந்து வாரிசுச் சட்டத்தின் (HSA) கீழ் சட்டப்பூர்வ குழந்தையாக கருதப்படும் என உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம் சொல்வது என்ன?

இந்து திருமண சட்டப்பிரிவு 16(1) மற்றும் (2) இன் கீழ் வரும் குழந்தைக்கு அவர்களின் பெற்றோரின் சொத்தில் உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காக  இந்து வாரிசு சட்டத்திற்கு ஏற்ப விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், 1955, பிரிவு 16(3)இன் கீழ், செல்லாத திருமணங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால், பிரிவு 16(3)இன்படி, அத்தகைய குழந்தைகள் தங்கள் பெற்றோரின் சொத்தை மட்டுமே உரிமை கோர முடியும். மூதாதையர் சொத்தில் உரிமை கோர முடியாது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம், வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Gingee Fort: ”இதுக்கு பேர் தான் திருட்டு” வாழ்த்து சொல்றதுலாம் நியாயமா மோடி சார்? செஞ்சிக்கோட்டை யாருக்கு சொந்தம்?
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Ramadoss vs Anbumani: மகனுக்கு எதிராக மகளை இறக்கும் ராமதாஸ்! கட்சியை கன்ட்ரோல் எடுக்க ஐயாவின் புது ரூட்டு!
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Gingee Fort: வேலைன்னா இப்படி இருக்கணும் - செஞ்சிக் கோட்டைக்கு UNESCO அங்கீகாரம், வாவ் சொன்ன சிவாஜி
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: தமிழ்நாடு முழுவதும் குரூப் 4 தேர்வு.. டிஜிபியிடம் ராமதாஸ் புகார் - தமிழகத்தில் இதுவரை
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
புதுச்சேரியில் அதிர்ச்சி! டெல்லி போலீஸ் போல் நடித்து பேராசிரியரிடம் ரூ.9.69 லட்சம் மோசடி!
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
PM Modi: ”செஞ்ச வரைக்கும் போதும், நீங்க கிளம்புங்க” பிரதமர் மோடிக்கு செண்ட் ஆஃப் கொடுக்க RSS தீவிரம்?
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Diabetes: சர்க்கரை வியாதியா? யூகலிப்டஸ் எண்ணெய் மசாஜே போதும் - சென்னை மருத்துவர்கள் கண்டுபிடிப்பு
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து -  ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Air Flight Crash Report: 270 பேரை காவு வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து - ”32 விநாடிகளில்..” காரணம் இதுதான் - அறிக்கை
Embed widget