மேலும் அறிய

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள்; ஆக.1-ல் கணக்கெடுப்பை தொடங்கும் தமிழக அரசு!

கட்டாயத்தின்‌ பேரிலும்‌, வறுமையின்‌ காரணமாகவும்‌ வேலைக்கு அனுப்பப்படும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ கொத்தடிமை குழந்தைகளை மீட்டு அவர்களை பள்ளியில்‌ சேர்க்க உரிய துறையுடன்‌ இணைந்து செயலாற்ற வேண்டும்‌.

தமிழ்நாடு முழுவதும் இடைநின்ற, பள்ளிக்கு செல்லாமல் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களை ஆகஸ்ட் 1 முதல் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை கணக்கெடுக்க உள்ளது. 6 முதல் 18 வயதுடைய மாணவர்கள், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

அனைத்து குழந்தைகளும்‌ ஆரம்பப் பள்ளியில்‌ சேர்வதை

அங்கன்வாடியில்‌ இருந்த அனைத்து குழந்தைகளும்‌ ஆரம்பப் பள்ளியில்‌ சேர்வதை, அங்கன்வாடி மைய பணியாளர்களுடன்‌ இணைந்து உறுதிப்படுத்த வேண்டும்‌.

உள்ளடக்கிய கல்விக்கான செயல்பாட்டின்‌ மூலம்‌ மாற்றுத் திறனுடைய குழந்தைகளின்‌ உடல்‌ கூறுகளின்‌ நிலையை கணக்கில்‌ கொண்டு உதவ வேண்டும்‌. இதன்‌ வழியாக மாற்றுத்திறனுடைய குழந்தைகளையும்‌ பள்ளியில்‌ சேர்ப்பதை உறுதி செய்ய முடியும்‌.

காடுகள்‌ நிறைந்த மலைப்‌ பகுதிகள்‌, பாதுகாப்பற்ற சாலை வசதி, வன விலங்குகளின்‌ அச்சுறுத்தல்‌ இவைகளால்‌ பாதிக்கப்படும்‌ மாணவர்களை கண்டறிந்து, அவர்கள்‌ பள்ளியில்‌ சேர்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள துணை நிற்க வேண்டும்‌.

குழந்தைத்‌ திருமணம்‌ நடைபெறும்‌ வாழிடப்‌ பகுதிகளை கண்காணித்து ஆலோசனை வழங்கி, பிற சமூக கலாச்சார நம்பிக்கைகளால்‌ பாதிப்பிற்கு உள்ளாகும்‌ மாணவர்களையும்‌ பள்ளியில்‌ சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

கொத்தடிமை குழந்தைகள் மீட்பு

கட்டாயத்தின்‌ பேரிலும்‌, வறுமையின்‌ காரணமாகவும்‌ வேலைக்கு அனுப்பப்படும்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ கொத்தடிமை குழந்தைகளை மீட்டு அவர்களை பள்ளியில்‌ சேர்க்க உரிய துறையுடன்‌ இணைந்து செயலாற்ற வேண்டும்‌.

கடந்த ஆண்டின்‌ கணக்கெடுப்பின்‌ படி, இடம்பெயர்தலின்‌ காரணமாக இடைநின்ற மாணவர்களே அதிகம்‌ உள்ளனர்‌. எனவே, இடம்பெயர்தலால்‌ பாதிப்பிற்கு உள்ளாகும்‌ மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும்‌ பள்ளியில்‌ சேர்க்க சரியான திட்டமிடல்‌ வேண்டும்‌.

திருவிழா மற்றும்‌ கலாச்சார நிகழ்வுகளில்‌ வேலை செய்ய மாணவர்கள்‌ இடம்‌பெயராதவாறு பள்ளியில்‌ தக்க வைக்க ஆலோசனைகள்‌ வழங்குதல்‌ வேண்டும்‌.

யாரெல்லாம் இடைநின்ற குழந்தை?

தொடர்ந்து 30 வேலை நாட்கள்‌ எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல்‌ இருந்தால்‌ அக்குழந்தையை இடைநின்ற (Dropout) குழந்தையாகக்‌ கருத வேண்டும்‌.

பள்ளியே செல்லாத குழந்தைகள்‌ இதுவரை பள்ளியில்‌ சேராத பள்ளி வயது குழந்தைகளை மாற்றுத்திறனுடைய குழந்தைகள்‌ மற்றும்‌ இடம்பெயர்ந்து வரும்‌ தொழிலாளர்களின்‌ குழந்தைகள்‌ உட்படக் கணக்கெடுப்பின்‌ மூலம்‌ கண்டறிய வேண்டும்‌. அக்குழந்தைகளை வயதுகேற்ற வகுப்பில்‌ அருகமை பள்ளிகளில்‌ சேர்க்க வேண்டும்‌.

8ஆண்டுகள்‌ தொடக்கக்‌ கல்வியை முழுமையாக முடிக்காத மாணவர்கள்‌.

ஒரு மாதத்தில்‌ 15 நாட்களுக்கு மேல்‌ பள்ளிக்கு வராமல்‌ இருக்கும்‌ குழந்தைகள்‌ இடைநிற்றலுக்கு வாய்ப்பு அதிகம்‌ உள்ள குழந்தைகளாக (Potential Dropouts) கருதப்படுவர்‌.

ஒரு மாணவர்‌ 30 நாட்களுக்கு மேல்‌ பள்ளிக்கு வரவில்லை எனில்‌அம்மாணவரின்‌ விவரங்கள்‌ பொதுத்தரவுத்‌ தளத்தில்‌ பதிவேற்றப்படும்‌.

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள்‌ கணக்கெடுப்பு:

பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை குறிப்பிட்ட வழிமுறைகளைப்‌ பின்பற்றி, 6 – 18 வயதுடையவர்களை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு நடத்துமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.

இக்கல்வியாண்டிற்கான கணக்கெடுப்பு களப்பணி 01.08.2025 முதல்‌ நடைபெற வேண்டும்‌ என்று பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுறுத்தி உள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
புதுச்சேரி நீட் ரேங்க் லிஸ்ட் வெளியானது! முதலிடம் யார்? நெகட்டிவ் மார்க் பெற்றவர்களுக்கு வாய்ப்பா?
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget