மேலும் அறிய

தமிழ்நாட்டின், மேற்கு மண்டலத்தில் கவனிக்கவேண்டிய முக்கிய பத்து செய்திகள்..!

கோடநாடு வழக்கு விசாரணை, பள்ளிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ...

  1. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என குற்றவாளிகள் தரப்பு வழக்கறிஞர் விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் அதிகரிக்கும் கொரொனா தொற்று பரவல் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி, ஜித்தின் சாய் ஆகியோரை வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தக்கோரி, மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகரிடம் மனு அளித்த அவர் இதனை தெரிவித்தார்.
  2. கோவை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த விமல்ராஜ், திடீரென காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற இரண்டே மாதங்களில் ஊழல் புகார்கள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  3. கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்துள்ளது. அதேசமயம் நீலகிரியில் தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.
  4. கோவையில் பெரியார் குறித்து அவதூறாக சுவரொட்டி ஒட்டிய பாரத் சேனா அமைப்பை சேர்ந்த முத்துகிருஷ்ணன், தமிழரசன் ஆகிய இருவரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்தனர். நேற்று பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் காந்திபுரம் நூறடி சாலை, டாடாபாத் பகுதிகளில் பெரியார் குறித்து அவதூறாக சுவரொட்டிகளை அவ்வமைப்பினர் ஒட்டியிருந்தனர்.
  5. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை அம்பலமூலா பகுதியில் பசு மாட்டினை புலி அடித்துக் கொன்றதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலிகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதகாவும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 6 மாடுகளை புலி அடித்துக் கொன்றுள்ளது என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
  6. கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, காரமடை, கூடலூர் கவுண்டம்பாளையம் ஆகிய பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்துவது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் சில பகுதிகளை நகராட்சியாக மாற்ற பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  7. கோவை மாவட்டத்தில் இரண்டாவது முறையாக நாளை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் 1 இலட்சத்து 20 ஆயிரம் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1500 தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
  8. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள சேவூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த மாணவர்கள் பயிலும் வகுப்பறை, பள்ளி வளாகம் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யப்பட்டது.
  9. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள தனியார் பள்ளி மாணவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
  10. திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் பிரகதீஸ் என்பவரை, தெருநாய்கள் கடித்துக் குதறின. படுகாயமடைந்த சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget