BREAKING
NEWS
2019 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தேர்தல் FAQ's
மக்களவை என்பது நாட்டை ஆளும் மன்றத்தின் அதாவது நாடாளுமன்றத்தின் கீழ் அவையாகும். நாடாளுமன்றத்தில் செயல்படும் இரு அவைகளில், கீழவை மக்களவை என்றும் மேலவை மாநிலங்களவை எனவும் அழைக்கப்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள், நேரடியாக மக்களால் மக்களவைத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். மாநிலங்களவை உறுப்பினர்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.
பொதுவாக மக்களவை தொடங்கிய நாளில் இருந்து சரியாக 5 ஆண்டுகளுக்கு செயல்படும். எனினும் தேவை ஏற்பட்டால், குடியரசுத் தலைவர் முன்கூட்டியே மக்களவையைக் கலைக்க முடியும்.
550. மக்களவைக்கு அதிகபட்சம் 550 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அரசியலமைப்புச் சட்டத்தின் 81ஆவது பிரிவின்படி, மாநிலங்களில் இருந்து 530 உறுப்பினர்களுக்கு மிகாமலும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 20 உறுப்பினர்களுக்கு மிகாமலும் மக்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். தற்போது 543 தொகுதிகள் நாடு முழுவதும் உள்ளன.
மக்களவையில் பட்டியல் இனத்தவருக்கும் (எஸ்சி), பழங்குடி இனத்தவருக்கும் (எஸ்டி) இட ஒதுக்கீடு உண்டு. நாடு முழுவதிலும் இருந்து 84 பட்டியல் இனத்தவரும், 47 பழங்குடி இனத்தவரும் மக்களவைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்குப் பல கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம், நாகலாந்து, சிக்கிம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக, சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லட்சத்தீவு மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் தலா ஒரு தொகுதியை மட்டுமே கொண்டுள்ளன.
1951- 52ஆம் ஆண்டில் நாட்டின் முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது 489 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்தல் ஆணையம் வெளியிடும் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். அந்த பட்டியலிலேயே வாக்குச் சாவடி மையம், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள், தேர்தல் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்களைப் பெற முடியும்.
வாக்களிக்க விரும்புவோர் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து அறியலாம். அல்லது 1950 என்ற எண்ணை (எஸ்டிடி கோடு அவசியம்) அழைத்துத் தெரிந்துகொள்ளலாம். அல்லது ECI என்று டைப் செய்து ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் பதிவிட்டு, 1950-க்கு குறுஞ்செய்தி அனுப்பவும். உதாரணத்துக்கு ECI 12345678 என்று டைப்பிட்டு 1950-க்கு செய்தி அனுப்பலாம். Voter Helpline App செயலியைப் பதிவிறக்கம் செய்தும் அறிந்துகொள்ளலாம்.
உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர்கள் குறித்து ஏற்கெனவே நீங்கள் அறிந்திருக்கக்கூடும். இல்லாவிட்டால், Voter Helpline App செயலியைப் பயன்படுத்தி அறிந்துகொள்ளலாம். அல்லது https://affidavit.eci.gov.in/ என்ற இணைப்பை பயன்படுத்தியு வேட்பாளர்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
* முதல் வாக்குச்சாவடி அதிகாரி, வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்ப்பார். * இரண்டாவது வாக்குச்சாவடி அதிகாரி, இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்து, ஸ்லிப் கொடுப்பார். அதேபோல Form 17A-ல் கையொப்பம் இடச் சொல்வார். * 3ஆவது அதிகாரியிடம் ஸ்லிப்பைக் கொடுத்துவிட்டு, மையிட்ட விரலைக் காண்பித்து வாக்களிக்கலாம். * இவிஎம் இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு எதிரில் உள்ள சின்னத்துக்கான பொத்தானை அழுத்தி வாக்களிக்க வேண்டும். வாக்களித்ததும் பீப் என்ற ஒலி தோன்றும். அருகில் உள்ள விவிபாட் இயந்திரத்தில், வாக்களித்த வேட்பாளரின் வரிசை எண், வேட்பாளர் பெயர், சின்னம் ஆகிய விவரங்கள் 7 விநாடிகளுக்குத் திரையில் தோன்றும். * யாருக்குமே அதாவது எந்தக் கட்சி வேட்பாளர்களுக்கும்/ சுயேச்சைகளுக்கும் வாக்களிக்கத் தோன்றவில்லை எனில், நோட்டாவுக்கு வாக்களிக்கலாம். இவிஎம் இயந்திரத்தில் கடைசியாக இந்த பொத்தான் இருக்கும். * மொபைல் போன்கள், கேமராக்கள் அல்லது பிற எந்த மின்னணு உபகரணங்களும் வாக்குச்சாவடி மையத்துக்குள் அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு: ecisveep.nic.in
வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள், கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச்செல்ல வேண்டியது முக்கியம். * வாக்காளர் அடையாள அட்டை * பாஸ்போர்ட் * ஓட்டுனர் உரிமம் * மத்திய/ மாநில அரசு/ பொதுத்துறை நிறுவனங்கள்/ பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் * வங்கி/ அஞ்சல் அலுவலகத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பாஸ்புக்குகள் * பான் அட்டை * ரேஷன் ஸ்மார்ட் அட்டை * MNREGA வேலை அட்டை (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதம்) * தொழிலாளர் அமைச்சகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை * புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் * எம்.பி.க்கள்/ எம்எல்ஏக்கள்/ எம்எல்சிகளுக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகள் * ஆதார் அட்டை
இவிஎம் என்பது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் Electronic Voting Machine (EVM) ஆகும். தேர்தல்களில் மக்கள் செலுத்தும் வாக்குகளை மின்னணு முறையில் பதிவு செய்யவும், வாக்குகளை எண்ணவும் பயன்படுத்தப்படும் ஓர் இயந்திரம் ஆகும்.
இதில் ஆரம்பத்தில் வாக்குப்பதிவு அலகு (BU - Ballot Unit ), கட்டுப்பாட்டு அலகு ( CU - Control Unit ) ஆகிய இரண்டும் இருந்தன. பின்னர், விவிபாட் (VVPAT- Voter Verifiable Paper Audit Trail) பிரிவும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் யாருக்கு வாக்களிக்கிறோம் என்று நாம் அறிந்துகொள்ள முடியும்.
வாக்குப்பதிவு அலகு (BU - Ballot Unit ), கட்டுப்பாட்டு அலகு ( CU - Control Unit ) ஆகிய இரண்டும் கொண்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் முதன்முதலில் 1982ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. கேரளாவில் பரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் இவிஎம் அறிமுகம் செய்யப்பட்டது.
விவிபாட் எனப்படும் ஒப்புகைச் சீட்டு முறை (Voter Verifiable Paper Audit Trail) 2013-ல் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. நாகலாந்தில் நோக்ஸன் சட்டப்பேரவைத் தேர்தலில் விவிபாட் கொண்டு வரப்பட்டது. இதன்மூலம் ஒருவர் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்துகொள்ள முடியும்.