மேலும் அறிய

ஒவ்வொரு பொங்கலுக்கும் பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் - சொன்னது யார் தெரியுமா?

பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தலா ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று இண்டியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மகரசங்கராந்தி அன்று பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பீகாரில் வரும் நவம்வர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் இறுதி நாளில் வாக்காளர்களிடம் உரையாற்றிய தேஜஸ்வி யாதவ், ஆட்சிக்கு வந்தால் தனது கட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ள முக்கிய நலத்திட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்றும், காவல்துறையினர் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் சொந்த மாவட்டங்களிலிருந்து 70 கிலோமீட்டருக்குள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளைப் பொறுத்தவரை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை விட குவிண்டாலுக்கு ரூ.300 கூடுதலாகவும், கோதுமைக்கான எம்எஸ்பியை விட குவிண்டாலுக்கு ரூ.400 போனஸாகவும் வழங்குவதாக உறுதியளித்தார்.

#WATCH | #BiharElection2025 | Patna, Bihar: RJD leader and Mahagathbandhan's CM face Tejashwi Yadav says, "...After we form the Government, on Makar Sankranti - 14th January, we will deposit Rs 30,000 for an entire year into the accounts of women under 'Mai Bahin Maan Yojana'..." pic.twitter.com/6lpMJxYOWe

— ANI (@ANI) November 4, 2025

">

பெண்களுக்கு ரூ.30000 உதவித் தொகை

பீகாரில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் என்ற அவர், “நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம், அது நடந்தவுடன், மகர சங்கராந்தி அன்று, மை-பஹின் மான் யோஜனா செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி மகரசங்கராந்தி அன்று செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்கள் தலா ரூ.30,000 பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 நிதி உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மகர சங்கராந்தி அன்று முழுத் தொகையையும் மாற்றுவதாக தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது ஒரு அரசு வேலை கிடைக்கும் என்று முன்னதாக உறுதியளித்திருந்தார். பீகாரில் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், 20 மாதங்களுக்குள், அரசு வேலை இல்லாத ஒரு குடும்பமே இருக்காது என்று  தேஜஸ்வி கூறினார்.

பதவியேற்ற பிறகு தனது முதல் செயல் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்ச்சியான முக்கிய அறிவிப்புகளின் தொடக்கம் மட்டுமே என்று கூறிய தேஜஸ்வி, "இது முதல் அறிவிப்பு, இறுதி அறிவிப்பு அல்ல" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget