மேலும் அறிய

ஒவ்வொரு பொங்கலுக்கும் பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் - சொன்னது யார் தெரியுமா?

பீகாரில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு தலா ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று இண்டியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

பீகாரில் ஆட்சிக்கு வந்தால் மகரசங்கராந்தி அன்று பெண்களுக்கு ரூ.30,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவித்தார். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

பீகாரில் வரும் நவம்வர் 6 மற்றும் 11-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் இறுதி நாளில் வாக்காளர்களிடம் உரையாற்றிய தேஜஸ்வி யாதவ், ஆட்சிக்கு வந்தால் தனது கட்சி செயல்படுத்த திட்டமிட்டுள்ள முக்கிய நலத்திட்ட நடவடிக்கைகளையும் குறிப்பிட்டார்.

பழைய ஓய்வூதிய திட்டம்

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசாங்கம் மீண்டும் கொண்டுவரும் என்றும், காவல்துறையினர் உட்பட அனைத்து அரசு ஊழியர்களும் அவர்களின் சொந்த மாவட்டங்களிலிருந்து 70 கிலோமீட்டருக்குள் பணியமர்த்தப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளைப் பொறுத்தவரை, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை விட குவிண்டாலுக்கு ரூ.300 கூடுதலாகவும், கோதுமைக்கான எம்எஸ்பியை விட குவிண்டாலுக்கு ரூ.400 போனஸாகவும் வழங்குவதாக உறுதியளித்தார்.

#WATCH | #BiharElection2025 | Patna, Bihar: RJD leader and Mahagathbandhan's CM face Tejashwi Yadav says, "...After we form the Government, on Makar Sankranti - 14th January, we will deposit Rs 30,000 for an entire year into the accounts of women under 'Mai Bahin Maan Yojana'..." pic.twitter.com/6lpMJxYOWe

— ANI (@ANI) November 4, 2025

">

பெண்களுக்கு ரூ.30000 உதவித் தொகை

பீகாரில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் ஆதரவு மிக முக்கியமானதாக இருக்கும் என்ற அவர், “நாங்கள் எங்கள் அரசாங்கத்தை அமைப்போம், அது நடந்தவுடன், மகர சங்கராந்தி அன்று, மை-பஹின் மான் யோஜனா செயல்படுத்தப்படும். இந்தத் திட்டம் ஜனவரி 14 ஆம் தேதி மகரசங்கராந்தி அன்று செயல்படுத்தப்படும் என்றும், இதன் கீழ் பெண்கள் தலா ரூ.30,000 பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

எதிர்க்கட்சிகள் கடந்த வாரம் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், டிசம்பர் 1 முதல் பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.2,500 நிதி உதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், மகர சங்கராந்தி அன்று முழுத் தொகையையும் மாற்றுவதாக தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பீகாரில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குறைந்தது ஒரு அரசு வேலை கிடைக்கும் என்று முன்னதாக உறுதியளித்திருந்தார். பீகாரில் அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், 20 மாதங்களுக்குள், அரசு வேலை இல்லாத ஒரு குடும்பமே இருக்காது என்று  தேஜஸ்வி கூறினார்.

பதவியேற்ற பிறகு தனது முதல் செயல் முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த திட்டத்தில் கையெழுத்திடுவதாக இருக்கும் என்றும் அவர் கூறினார். இது தொடர்ச்சியான முக்கிய அறிவிப்புகளின் தொடக்கம் மட்டுமே என்று கூறிய தேஜஸ்வி, "இது முதல் அறிவிப்பு, இறுதி அறிவிப்பு அல்ல" என்றார்.

தலைப்பு செய்திகள்

கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Minister Keerthana: கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு கொட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Embed widget