மேலும் அறிய

’திமுக மாவட்ட செயலாளர்கள் மாற்றம்’ அதிரடி காட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சென்னையை அமைப்பு ரீதியாக 7 மாவட்டங்களாக பிரிக்கவும், டெல்டாவில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்கவும் திமுக தலைமை தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் ஆறு மாவட்ட செயலாளர்கள் மாற்றப்படவுள்ளனர்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து வரலாற்று சாதனை படைக்க திமுக திட்டமிட்டு வருகிறது. அதற்காக, ஓரணியில் தமிழ்நாடு, உங்களுடன் ஸ்டாலின் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், உடன்பிறப்பே வா – என்ற செயல்திட்டத்தின் மூலம் கட்சிக்குள் மிகப் பெரிய கட்டமைப்பு மாறுதலை செய்யத் தொடங்கியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இதனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகளே கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மாவட்ட செயலாளர்கள் மாற்றம் – அடுத்தடுத்து வரும் அதிரடி

குறிப்பாக, உடன்பிறப்பே வா மூலம் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த மாவட்டச் செயலாளர், நகர செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகளை தனித் தனியாக சந்தித்து பேசினார் மு.க.ஸ்டாலின். அதில், அவர்கள் குறிப்பிட்ட நிர்வாகிகள் மீதான  குற்றச்சாட்டுகள், புகார்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில், உண்மையான புகாருக்கு உள்ளான மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட சரியாக செயல்படாத மாவட்ட நிர்வாகிகளை அந்த பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்க உத்தரவிட்டார் ஸ்டாலின். அதற்கான பணிகள் தொடர்ச்சியாக அறிவாலயத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது புகாருக்குள்ளான, தேர்தல் நெருங்கும் நேரத்தில் மெத்தனமாக, சரியாக செயல்படாத நிர்வாகிகளை நீக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. தேர்தல் முடியும் வரை தாங்களே மாவட்டத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் எனவும், தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்டத்தில் சீட் பெற்றுக் கொடுத்துவிட முடியும் என்றும் நம்பிக்கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் தலைமீது இந்த உடன்பிறப்பே வா திட்டம் இடியாய் வந்து இறங்கியிருக்கிறது.

கோவை மாவட்டச் செயலாளர் நீக்கம்

அதன் முதற்கட்டமாக, கோவை மாநகர் மாவட்ட செயலாலராக பல ஆண்டுகளாக இருந்த நா. கார்த்தி அதிரடியாக அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுகவை இந்த தேர்தலில் பின்னுக்குத் தள்ளி கொங்கை தங்களது கோட்டையாக மாற்ற, முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை தேர்தல் பொறுப்பாளராக திமுக நியமித்திருக்கும் நிலையில், நா.கார்த்தி நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. செந்தில்பாலாஜிக்கு உரிய ஒத்துழைப்பு தராதது, தன்னைத் தாண்டி மாநகர் திமுகவில் எதுவும் செய்ய முடியாது என்று வாய்த் துடுக்காக பேசி வந்தது உள்ளிட்ட புகார்களில் அவர் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதே மாதிரி, தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் கல்யாணசுந்தரம் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பனிடம் இருந்த தொகுதிகள் பறிக்கப்பட்டு அவரை மேற்கு மாவட்ட செயலாராக நியமித்து, கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டது என திமுகவில் மாவட்ட வாரியாக அதிரடி மாற்றங்கள் தொடங்கியுள்ளன.

ஆறு  மாவட்டச் செயலாளர்கள் பதவி பறிப்பு?

மேலும், சரியாக செயல்படாமலும் தொடர் புகார்களுக்கும் உள்ளாகியுள்ள ஆறு மாவட்டச் செயலாளர்களிடமிருந்து அந்த பொறுப்பை பறிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்பதால், திமுக மாவட்டச் செயலாளர்கள் பலரும் பதற்றத்தில் இருந்து வருகின்றனர்.  குறிப்பாக, சென்னையில் அமைப்பு ரீதியாக உள்ள 6 மாவட்டங்களை ஏழாக பிரித்து சென்னை தெற்கு என்ற புதிய மாவட்டத்தை உருவாக்குவது குறித்தும் டெல்டா மாவட்டத்தில் உள்ள ஒரு மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடமாவட்ட அமைப்புகளிலும் விரைவில் மாற்றங்கள் நடைபெறவுள்ளன.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
PUD TVK Vijay Roadshow: புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
புதுச்சேரியும் போச்சா.! விஜய் ரோடு ஷோ; அனுமதி மறுத்த காவல்துறை; சபாநாயகர் கொடுத்த ஐடியா
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget