மேலும் அறிய
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (exit poll) என்பது, தேர்தல் நடந்து முடிந்தபிறகு சில வாக்காளர்களிடம் யாருக்கு / எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள், ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்டு, தகவல்களைத் திரட்டுவது ஆகும். பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தேர்தலின் கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்து, தேர்தல் மையத்தில் இருந்து வாக்காளர் வரும்போது சில கேள்விகள் முன்வைக்கப்படும். இந்த கருத்துக்கணிப்பு மூலம் உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கலாம். அதேபோல கட்சிகளும் அரசியல் ஆலோசகர்களும் தேர்தல் ட்ரெண்டை அறிந்து, முடிவுகளைக் கணிக்க உதவும்.

Latest News

FAQ

கருத்துக் கணிப்பின் துல்லியத் தன்மை எப்படி?

எனினும் பெரும்பாலான நேரங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் இவை துல்லியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் கேட்கும் சர்வே ஆகும். இது தேர்தலுக்கு முன்பு நடைபெறும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புடன் (opinion poll) வேறுபடும். எந்தக் கட்சி எவ்வளவு வெல்லும் என்பது குறித்த ஓர் அறிமுகத்தை அளிக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

எப்படி நடத்தப்படுகிறது?

பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், சாம்பிள்களைச் சேகரித்தே நடத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட கட்சி குறித்தோ அதன் கடந்தகால செயல்பாடுகள் பற்றியோ ஒரு குடிமகன் என்ன நினைக்கிறார் என்ற கேள்விகளை உள்ளடக்கி இருக்கும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன?

முதன்முதலில் இந்தியாவில் 1957ஆம் ஆண்டு இந்திய பொதுமக்கள் கருத்து நிறுவனம் (Indian Institute of Public Opinion) சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மக்களவைத் தேர்தலின்போது இது நடத்தப்பட்டது. எனினும் தொலைக்காட்சிக்கான வரவேற்பு அதிகரித்தபிறகு, முதல்முறையாக1980களில் முறையான ’எக்ஸிட் போல்’ நடத்தப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்றால் என்ன? ( pre-poll and post-poll surveys)

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பொதுவாக, வரப்போகும் தேர்தலில், யாருக்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கும். பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இதே கேள்விகள் தேர்தலுக்குப் பிறகு முன்வைக்கப்படும்.

எக்ஸிட் போல் குறித்த தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து, கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று முடியும்வரை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126ஏ பிரிவின்படி, எந்த ஒரு நபரும் அச்சு அல்லது மின்னணு ஊடகத்திலோ, வேறு எந்தவிதமான முறையிலோ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது.

Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

தலைப்பு செய்திகள்

US India Trade Deal: ஃப்ரண்ட போல யாரு மச்சா..! டீல் ஓகே, இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த ட்ரம்ப்..
US India Trade Deal: ஃப்ரண்ட போல யாரு மச்சா..! டீல் ஓகே, இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த ட்ரம்ப்..
Chennai Metro Rail: ஜனவரியில் மட்டும் 1 கோடியாம்! சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் அடுத்த அப்டேட்.. முழு விவரம்
Chennai Metro Rail: ஜனவரியில் மட்டும் 1 கோடியாம்! சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் அடுத்த அப்டேட்.. முழு விவரம்
Ind vs Pak: 4500 கோடி போச்சு..  இந்தியா உடனான போட்டியில் விலகல்... பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்
Ind vs Pak: 4500 கோடி போச்சு.. இந்தியா உடனான போட்டியில் விலகல்... பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்
15 ஆண்டுகால காத்திருப்பு: 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா பிப்ரவரி 5 அமைச்சரவை கூட்டம்?
15 ஆண்டுகால காத்திருப்பு: 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா பிப்ரவரி 5 அமைச்சரவை கூட்டம்?

ஃபோட்டோ கேலரி

Advertisement

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US India Trade Deal: ஃப்ரண்ட போல யாரு மச்சா..! டீல் ஓகே, இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த ட்ரம்ப்..
US India Trade Deal: ஃப்ரண்ட போல யாரு மச்சா..! டீல் ஓகே, இந்தியா மீதான வரியை 18% ஆக குறைத்த ட்ரம்ப்..
Chennai Metro Rail: ஜனவரியில் மட்டும் 1 கோடியாம்! சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் அடுத்த அப்டேட்.. முழு விவரம்
Chennai Metro Rail: ஜனவரியில் மட்டும் 1 கோடியாம்! சென்னை மெட்ரோவில் விரைவில் வரும் அடுத்த அப்டேட்.. முழு விவரம்
Ind vs Pak: 4500 கோடி போச்சு..  இந்தியா உடனான போட்டியில் விலகல்... பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்
Ind vs Pak: 4500 கோடி போச்சு.. இந்தியா உடனான போட்டியில் விலகல்... பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்
15 ஆண்டுகால காத்திருப்பு: 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா பிப்ரவரி 5 அமைச்சரவை கூட்டம்?
15 ஆண்டுகால காத்திருப்பு: 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்குமா பிப்ரவரி 5 அமைச்சரவை கூட்டம்?
TN Rain alert: தென் தமிழகத்தில் மழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை இதோ!
தென் தமிழகத்தில் மழை எச்சரிக்கை! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை இதோ!
TVK Vijay: அதிமுக ஊழல் கட்சியா?.. விஜய் ஏன் பாஜகவை பேசல.. சரமாரியாக விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்!
TVK Vijay: அதிமுக ஊழல் கட்சியா?.. விஜய் ஏன் பாஜகவை பேசல.. சரமாரியாக விமர்சித்த திண்டுக்கல் சீனிவாசன்!
Migraine: மண்டை காயவைக்கும் மைக்ரேன் தலைவலி; உணவு மூலமே சரிசெய்யலாம்! மருத்துவர் டிப்ஸ்!
Migraine: மண்டை காயவைக்கும் மைக்ரேன் தலைவலி; உணவு மூலமே சரிசெய்யலாம்! மருத்துவர் டிப்ஸ்!
செங்கோட்டையன் 'செல்லா காசு'  முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சரமாரி தாக்கு !
செங்கோட்டையன் 'செல்லா காசு' முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் சரமாரி தாக்கு !
Embed widget