மேலும் அறிய
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு (exit poll) என்பது, தேர்தல் நடந்து முடிந்தபிறகு சில வாக்காளர்களிடம் யாருக்கு / எந்தக் கட்சிக்கு வாக்களித்தீர்கள், ஏன் வாக்களித்தீர்கள் என்று கேட்டு, தகவல்களைத் திரட்டுவது ஆகும். பொதுவாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், தேர்தலின் கடைசி நாளன்று மேற்கொள்ளப்படும். தேர்தல் முடிந்து, தேர்தல் மையத்தில் இருந்து வாக்காளர் வரும்போது சில கேள்விகள் முன்வைக்கப்படும். இந்த கருத்துக்கணிப்பு மூலம் உள்ளூர் அளவிலும் தேசிய அளவிலும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைக் கணிக்கலாம். அதேபோல கட்சிகளும் அரசியல் ஆலோசகர்களும் தேர்தல் ட்ரெண்டை அறிந்து, முடிவுகளைக் கணிக்க உதவும்.

Latest News

FAQ

கருத்துக் கணிப்பின் துல்லியத் தன்மை எப்படி?

எனினும் பெரும்பாலான நேரங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் இவை துல்லியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் கேட்கும் சர்வே ஆகும். இது தேர்தலுக்கு முன்பு நடைபெறும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புடன் (opinion poll) வேறுபடும். எந்தக் கட்சி எவ்வளவு வெல்லும் என்பது குறித்த ஓர் அறிமுகத்தை அளிக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

எப்படி நடத்தப்படுகிறது?

பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், சாம்பிள்களைச் சேகரித்தே நடத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட கட்சி குறித்தோ அதன் கடந்தகால செயல்பாடுகள் பற்றியோ ஒரு குடிமகன் என்ன நினைக்கிறார் என்ற கேள்விகளை உள்ளடக்கி இருக்கும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன?

முதன்முதலில் இந்தியாவில் 1957ஆம் ஆண்டு இந்திய பொதுமக்கள் கருத்து நிறுவனம் (Indian Institute of Public Opinion) சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மக்களவைத் தேர்தலின்போது இது நடத்தப்பட்டது. எனினும் தொலைக்காட்சிக்கான வரவேற்பு அதிகரித்தபிறகு, முதல்முறையாக1980களில் முறையான ’எக்ஸிட் போல்’ நடத்தப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்றால் என்ன? ( pre-poll and post-poll surveys)

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பொதுவாக, வரப்போகும் தேர்தலில், யாருக்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கும். பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இதே கேள்விகள் தேர்தலுக்குப் பிறகு முன்வைக்கப்படும்.

எக்ஸிட் போல் குறித்த தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து, கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று முடியும்வரை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126ஏ பிரிவின்படி, எந்த ஒரு நபரும் அச்சு அல்லது மின்னணு ஊடகத்திலோ, வேறு எந்தவிதமான முறையிலோ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது.

Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்

ஃபோட்டோ கேலரி

Advertisement

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
திமுக கூட்டணியில் திருமாவளவன் கூனிக் குறுகி நிற்கிறார்...! அன்புமணி ராமதாஸ் அதிரடித் தாக்கு!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
Parthiban: சீமானுக்கு தொண்டை காயும்.. மண்டை காயாது.. ரைமிங்கில் பேசிய பார்த்திபன்!
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
TN Election: தேர்தல் நேரத்தில் மட்டும் தினம் தினம் வர்றீங்க? டெய்லியும் மக்களை பாக்க வரலாமே?
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
வாய்ப்பு கொடுத்தும் கோட்டைவிட்ட தவெக! அதிருப்தியில் தொண்டர்கள்.. ரத்தான கடலூர் பிரச்சாரம்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
கம்பம் தவெக வேட்பாளருக்கு நடிகர் பொன்னம்பலம் வாக்கு சேகரிப்பு – விஜய் குறித்து பேசிய வீடியோ வைரல்
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
Chennai New Commissioner: அருண் மாற்றம்! சென்னைக்கு புது காவல் ஆணையர் - யார் இந்த அபின் தினேஷ் மோடக்?
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
கோடை விடுமுறைக்கு கூடுதல் ரயில்கள் – திருநெல்வேலி முதல் எழும்பூர், தாம்பரம் வரை சிறப்பு சேவை
US Iran Peace Talk:
US Iran Peace Talk: "எங்ககிட்ட விளையாடாதீங்க!" - ஈரானுக்கு ஜே.டி. வேன்ஸ் கொடுத்த 'வெயிட்டான' வார்னிங்!
Embed widget