மேலும் அறிய
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு 2026 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு என்பது, சில வாக்காளர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அவர்களின் பதில்களின் அடிப்படையில் எந்தக் கட்சி அல்லது வேட்பாளர் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்பதைப் புரிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் ஒரு கணக்கெடுப்பாகும். தேர்தலின் கடைசி நாளில், வாக்குப்பதிவு முடிந்து வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளிலிருந்து வெளியே வரும்போது இந்தக் கருத்துக் கணிப்புகள் நடைபெறுகின்றன. இதன்மூலம், உள்ளூர் மற்றும் தேசிய அளவில் தேர்தல் முடிவுகள் கணிக்கப்படுகின்றன. தேர்தல் போக்குகளைப் புரிந்துகொள்ள, கட்சிகளுக்கும் அரசியல் ஆய்வாளர்களுக்கும் இந்தக் கருத்துக் கணிப்புகள் உதவுகின்றன. இந்தக் கணக்கெடுப்பின் அடிப்படையில், செய்தி நிறுவனங்கள் தேர்தல் முடிவுகள் குறித்த முன்கணிப்பு அறிக்கைகளை வெளியிடுகின்றன. இந்தக் கருத்துக் கணிப்புகளை நடத்தும் ஏஜென்சிகள், தங்களின் செயல்முறையைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன. இது பொதுவாக இறுதித் தேர்தல் முடிவுகள் குறித்த ஒரு முன்னோட்டத்தை அளிக்கிறது. சில நேரங்களில் இந்தக் கணிப்புகள் துல்லியமானவை என நிரூபிக்கப்பட்டாலும், பல நேரங்களில் இந்தக் கணிப்புகள் தவறாகவும் அமைந்துள்ளன.

Latest News

FAQ

கருத்துக் கணிப்பின் துல்லியத் தன்மை எப்படி?

எனினும் பெரும்பாலான நேரங்களில் கருத்துக் கணிப்பு முடிவுகள் தவறாக இருந்திருக்கின்றன. சில நேரங்களில் இவை துல்லியமாக இருப்பது உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்பது தேர்தலில், வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று பலதரப்பட்ட மக்களிடம் கேட்கும் சர்வே ஆகும். இது தேர்தலுக்கு முன்பு நடைபெறும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புடன் (opinion poll) வேறுபடும். எந்தக் கட்சி எவ்வளவு வெல்லும் என்பது குறித்த ஓர் அறிமுகத்தை அளிக்கவே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது.

எப்படி நடத்தப்படுகிறது?

பெரும்பாலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், சாம்பிள்களைச் சேகரித்தே நடத்தப்படுகின்றன. இவை, ஒரு குறிப்பிட்ட கட்சி குறித்தோ அதன் கடந்தகால செயல்பாடுகள் பற்றியோ ஒரு குடிமகன் என்ன நினைக்கிறார் என்ற கேள்விகளை உள்ளடக்கி இருக்கும்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன?

முதன்முதலில் இந்தியாவில் 1957ஆம் ஆண்டு இந்திய பொதுமக்கள் கருத்து நிறுவனம் (Indian Institute of Public Opinion) சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இரண்டாவது மக்களவைத் தேர்தலின்போது இது நடத்தப்பட்டது. எனினும் தொலைக்காட்சிக்கான வரவேற்பு அதிகரித்தபிறகு, முதல்முறையாக1980களில் முறையான ’எக்ஸிட் போல்’ நடத்தப்பட்டது.

தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் என்றால் என்ன? ( pre-poll and post-poll surveys)

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பொதுவாக, வரப்போகும் தேர்தலில், யாருக்கு வாக்காளர்கள் வாக்களிக்கப் போகிறார்கள், ஏன் என்பன உள்ளிட்ட கேள்விகளை முன்வைக்கும். பிந்தைய கருத்துக் கணிப்புகளில் இதே கேள்விகள் தேர்தலுக்குப் பிறகு முன்வைக்கப்படும்.

எக்ஸிட் போல் குறித்த தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகள் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து, கடைசிக் கட்டத் தேர்தல் நடைபெற்று முடியும்வரை, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக் கூடாது. 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 126ஏ பிரிவின்படி, எந்த ஒரு நபரும் அச்சு அல்லது மின்னணு ஊடகத்திலோ, வேறு எந்தவிதமான முறையிலோ தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூடாது.

Sponsored Links by Taboola
Advertisement
Advertisement
Advertisement

தலைப்பு செய்திகள்

ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

ஃபோட்டோ கேலரி

Advertisement

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget