மேலும் அறிய

FIFA World Cup 2022: உலககோப்பை கால்பந்து திருவிழா...! கத்தாருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்...

ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில்,  பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்கள் இப்போது முதலே கத்தாருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

ஃபிஃபா உலகக் கோப்பைத் தொடர் நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்க உள்ள நிலையில்,  பிரேசில் நாட்டு கால்பந்து ரசிகர்கள் இப்போது முதலே கத்தாருக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.

உலககோப்பை திருவிழா :

மத்திய கிழக்கு நாடான கத்தாரில் இந்த முறை உலகக் கோப்பை திருவிழா கோலாகலமாக தொடங்கவுள்ளது.
உலகம் முழுவதும் அதிகம் பேரால் பார்த்து ரசிக்கப்படும் விளையாட்டுகளில் ஒன்று கால்பந்து. ஏழைகளின் விளையாட்டு என்று வர்ணிக்கப்படும் கால்பந்து, மேற்கத்திய நாடுகளில் வாழ்வியலோடு இணைந்து ஒன்று போன்றது என்றே கூறலாம். அந்த அளவுக்கு கால்பந்தை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகம். அதிலும், தென் அமெரிக்க நாடான பிரேசில் இதுவரை 5 முறை சாம்பியன் ஆகி அதிக முறை உலகக் கோப்பையில் சாம்பியன் ஆன அணி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், போட்டி தொடங்க இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில்  கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை உலகக் கோப்பை பேரணியை நடத்தினர். அர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, பிரேசில் வீரர் நெய்மர் மற்றும்  இங்கிலாந்தைச் சேர்ந்த ஹாரி கேனின் ரசிகர்கள் தோஹா கடற்கரையில் அணிவகுத்துச் சென்றனர், இது பொதுவாக அனுமதிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் :

கத்தாரில் மொத்தம் 28 லட்சம் மக்கள்தொகை உள்ளது. அதில் சுமார் 7.5 லட்சம் பேர் இந்தியாவிலிருந்து வேலைக்காக சென்றுள்ளவர்கள் ஆவர். அதிலும் கேரளாவில் இருந்து அதிகம் பேர் அங்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

இந்தியாவில் கேரளாவில் தான் கால்பந்து ரசிகர்கள் அதிகம் கொண்ட மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் கால்பந்து கோட்டை என்றும் கேரளாவை அழைப்பார்கள். இவ்வாறாக கேரளத்தைச் சேர்ந்த ரசிகர்கள் உரிய முன் அனுமதி பெற்று உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக அணிவகுத்துச் சென்றனர்.

கத்தாரில் அவ்வளவு எளிதில் இதற்கெல்லாம் அனுமதி கொடுக்க மாட்டார்கள். ஆனால், உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்துவதை முன்னிட்டு இதுபோன்ற நிகழ்வுகளுக்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்கள் கால்பந்து போட்டிகளை காண முன்பதிவு செய்துள்ளனர். இதன் வாயிலாகவும் கத்தாருக்கு அதிக வருவாய் கிடைக்கும். 

இதேபோல், பிரேசில் ரசிகர்களும் கத்தாரை அதிரவைத்து வருகின்றனர். 

ஆசிய நாடு :

முன்னதாக,  32 நாடுகள் பங்கேற்க உள்ள இந்த கால்பந்து தொடர் 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெற இருப்பது இதுவே முதல்முறை.  இந்த உலகக்  கோப்பை தொடரில் 32 அணிகள் பங்கேற்கும் நிலையில், இவை மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கர்த்தாரில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில், 2022 FIFA உலகக் கோப்பைக்கான 26 பேர் கொண்ட அர்ஜென்டினா அணி தற்போது அறிவிக்கப்பட்டது. ஐந்தாவது உலகக் கோப்பையில் பங்கேற்கும் லியோனல் மெஸ்ஸி அர்ஜெண்டினா அணிக்கு கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த அக்டோபரில் இருந்து தொடை காயம் காரணமாக விளையாடாமல் இருந்த முன்கள வீரர் பாலோ டிபாலா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 26 வீரர்களில் 21 பேர் அர்ஜென்டினாவின் 2021 கோபா அமெரிக்கா வெற்றியின் ஒரு பகுதியாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
TN 10th Result 2025: வெளியான 10ஆம் வகுப்பு முடிவுகள்; தொடர்ந்து பின்தங்கும் வட மாவட்டங்கள்- இதுதான் காரணமா? உண்மை என்ன?
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
Virat Kohli: கோலியின் படை.. ரன் மெஷினை கவுரவப்படுத்த ரசிகர்கள் ப்ளான்! சின்னசாமியில் காத்திருக்கும் சம்பவம் என்ன?
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறையாது; கர்ஜிக்கும் ராமதாஸ்
Embed widget