கரூர் ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் தை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
அருள்மிகு வாராகி அம்மன் ஆலயத்தில் தை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் தை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராகி அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை அருகே குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு வாராகி அம்மன் ஆலயத்தில் தைமாத பஞ்சமி திதியை முன்னிட்டு சுவாமி வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய் இளநீர் எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பெடி, அரிசி மாவு, பன்னீர், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பக்தர்கள் வழங்கிய வண்ண பூக்களால் அலங்காரம் நடைபெற்று பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறினார். தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
கரூர் மினி பேருந்து கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு தை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
தை மாத பஞ்சமி திதியை முன்னிட்டு வாராகி அம்மன்களுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தைமாத பஞ்சமி திதி அபிஷேகத்தை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணைக்காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தொடர்ந்து சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் மினி பேருந்து நிலையம் கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் வாராகி அம்மனுக்கு நடைபெற்ற தை மாத பஞ்சமி திதி அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் கார்த்திக் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

