மேலும் அறிய

விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை கூட்டியது.

 

 

வேங்கை வயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும் 196 செல்போன்கலும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது என அரசு தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை கூட்டியது.

இத்தகைய கொடூர செயல்களை செய்தது யார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. இதன் பிறகு சமீபத்தில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது. அதில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த சம்பவத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் தான் காரணம் என சொல்லப்பட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. விசிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வேங்கை வயல் வழக்கில் தீவிர நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என கோரிதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அகமது ஜின்னா, நேரில் ஆஜராகி வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த வழக்கில் அவர் வாதிடும்போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது ”வேங்கைவயல் விவகாரத்தில் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, ஜாதிய கருத்து மோதலோ கிடையாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவருக்குள் ஏற்பட்ட தனி மனித பிரச்சினையால் இதுபோன்று நடந்துள்ளது. வேங்கை வயல் வழக்கில் அறியல் பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும் 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள விவரங்கள் எடுக்கப்பட்டன. செல்போன் டவர் லொகேஷன் அடிப்படையில் 31 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்கள் 7.35மணிக்கு பின்னர்தான் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி அங்கிருந்து செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் , வீடியோக்கல், ஆடியோக்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. தடவியல் நிபுணர்களால் நவீன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இத்தனை பரிசோதனைக்கும் பின்னர்தான் 3 குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளோம். இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை”  எனத் தெரிவித்தார்.

அரசு தரப்பின் விரிவான வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல் குமார் உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Instagram Ilakiya | இலக்கியா தற்கொலை முயற்சி ஸ்டண்ட் மாஸ்டர் காரணமா உண்மையில் நடந்தது என்ன?
Vice President Jagdeep Dhankhar | அழுத்தம் கொடுத்த பாஜக? ஜெகதீப் தன்கர் ராஜினாமா!உண்மை பின்னணி என்ன?
ADMK BJP Alliance | கூட்டணி கட்சிகள் போர்க்கொடி.. இபிஎஸ்-க்கு நெருக்கடி! அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்
Mayiladuthurai Womens College | அவசரகதியில் கல்லூரி திறப்பு? ”பெஞ்ச் கூட இல்லை” மாணவிகள் வேதனை
6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை; சிறுமியை சீரழித்த காமுகன் 14 நாளில் கைது- சிக்கியது எப்படி?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
Aadi Pooram 2025 leave: மாணவர்களே.. ஆடிப்பூரத்திற்கு பள்ளி, கல்லூரிகள் லீவு! தமிழ்நாட்டில் யாருக்கு?
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
TN NEET Rank List 2025: வெளியான மருத்துவ படிப்பு தரவரிசைப் பட்டியல்; பொது, 7.5% ஒதுக்கீட்டில் டாப் மாணவர்கள் பட்டியல் இதோ!
Delhi High Court: “பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
“பெண்ணுடன் நட்பு இருந்தாலும் அவள் சம்மதமில்லாமல் உடலுறவு கொள்ள ஆணுக்கு உரிமை இல்லை“-டெல்லி கோர்ட்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ்  ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
Aadi Month Koozh: பக்தர்களே.. ஆடி மாதம் அம்மன் கோயிலில் கூழ் ஊற்றுவது ஏன்? இதுதான் காரணமா!
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Embed widget