மேலும் அறிய

விஸ்வரூபம் எடுக்கும் வேங்கை வயல்! 389 சாட்சிகள்; 196 செல்போன்கள்;  87 டவர் – அரசு முன் வைக்கும் வாதங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை கூட்டியது.

 

 

வேங்கை வயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும் 196 செல்போன்கலும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது என அரசு தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டது பெரும் பரபரப்பை கூட்டியது.

இத்தகைய கொடூர செயல்களை செய்தது யார் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவர்கள் மீதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டதால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன்படி தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. இதன் பிறகு சமீபத்தில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளது. அதில் நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த சம்பவத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 3 பேர் தான் காரணம் என சொல்லப்பட்டது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. விசிக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், வேங்கை வயல் வழக்கில் தீவிர நடவடிக்கை எடுக்கக்கோரி திருமங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவில் வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என கோரிதான் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அகமது ஜின்னா, நேரில் ஆஜராகி வழக்கின் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

 

இந்த வழக்கில் அவர் வாதிடும்போது பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது ”வேங்கைவயல் விவகாரத்தில் எவ்வித அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, ஜாதிய கருத்து மோதலோ கிடையாது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவருக்குள் ஏற்பட்ட தனி மனித பிரச்சினையால் இதுபோன்று நடந்துள்ளது. வேங்கை வயல் வழக்கில் அறியல் பூர்வ சோதனைக்குப் பின்னரே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேங்கை வயல் வழக்கில் மொத்தம் 389 சாட்சிகளும் 196 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 87 டவர் லொகேஷனில் ஆய்வு செய்து அதில் உள்ள விவரங்கள் எடுக்கப்பட்டன. செல்போன் டவர் லொகேஷன் அடிப்படையில் 31 நபர்களிடம் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. வழக்கில் தொடர்புடையவர்கள் 7.35மணிக்கு பின்னர்தான் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறி அங்கிருந்து செல்பி புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் , வீடியோக்கல், ஆடியோக்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. தடவியல் நிபுணர்களால் நவீன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் குரல் மாதிரிகளும் எடுக்கப்பட்டன. இத்தனை பரிசோதனைக்கும் பின்னர்தான் 3 குற்றவாளிகளை கண்டு பிடித்துள்ளோம். இது தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டது. எனவே ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்கு அனுமதி தேவையில்லை”  எனத் தெரிவித்தார்.

அரசு தரப்பின் விரிவான வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல் குமார் உத்தரவுக்காக வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
திருப்பரங்குன்றம் போராட்டம்: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உட்பட 113 பேர் மீது வழக்கு!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Maruti Suzuki Discount: 2.15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி.. Fronx முதல் Baleno வரை - மாருதி சுசுகியின் சலுகை எப்படி?
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
Erode Power Shutdown: ஈரோட்டில் நாளை (06-12-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! மின் வாரியம் அறிவிப்பு
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
Embed widget