Kalpana Suicide Attempt: பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி; மருத்துவனையில் தீவிர சிகிச்சை!
Kalpana Suicide Attempt: தமிழில் ஏராளமான பாடல்களை பாடி பிரபலமான, பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இசை குடும்ப பின்னணியை சேர்த்தவர் பின்னணி பாடகி கல்பனா(Kalpana). இவரின் தந்தை டி.எஸ்.ராகவேந்திரா, திரையுலகில் சிறந்த பாடகர் என்பதை தாண்டி, இசையமைப்பாளர் மற்றும் நடிகராகவும் பிரபலம் ஆனவர். அதே போல் டி.எஸ்.ராகவேந்திராவின் மனைவியும், கல்பனாவின் தாயாருமான சுலோச்சனாவும் ஒரு பின்னணி பாடகி ஆவார்.
தாய் - தந்தை இருவருமே சங்கீத ஜாம்பவான்கள் என்பதால், தங்களின் மகள் கல்பனாவுக்கு சிறு வயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பழகினர். கல்பனாவின் சகோதரியும் ஒரு பாடகி ஆவார். ஆனால் கல்பனாவால் மட்டுமே தன்னுடைய தனித்துவமான குரல் வளத்தால் ரசிகர்களை அதிகம் வசீகரிக்க முடிந்தது.
தமிழில் மட்டும் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை கல்பனா பாடியுள்ள நிலையில், மற்ற தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். மேலும் இதுவரை 3000 மேற்பட்ட இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ள பாடியுள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சில வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்டு மிகவும் நேர்த்தியாக விளையாடினார்.
இவரின் இசை உலகம் வெற்றிகரமானது என்றாலும், சொந்த வாழ்க்கை பல பிரச்சனைகளால் சூழப்பட்டது. இவரின் கணவர், ஒரு சில காரணங்களால் இவரிடம் இருந்து பிரிந்து சென்று வேறு ஒரு திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய மகளுடன் ஹைதராபாத்தில் கல்பனா வசித்து வந்தார். மேலும் சில பாடல்கள் சம்மந்தப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் இவர், ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து தற்போது கல்பனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருவதாக, கூறப்படுகிறது. ஆனால் என்ன காரணத்துக்காக இவர் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

