மேலும் அறிய

South Korea President Ousted: பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபர்.. யார் நீக்கியது.. எதற்காக தெரியுமா.?

தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோல் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எதற்காக இந்த பதவி நீக்கம்.? பார்க்கலாம்.

தென் கொரி அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எதனால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்.

அவசரநிலை ராணுவ சட்தத்தை அறிவித்த தென் கொரிய அதிபர்

தென் கொரிய அதிபராக இருந்த யூன் சுக் யியோல், எதிர்க்கட்சிகள் நாட்டின் நிர்வாகத்தில் குறுக்கீடு செய்வதாகவும், வட கொரியாவுக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கப் பார்ப்பதாகவும் குற்றம்சாட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3-ம் தேதி இரவு திடீரென அவசரநிலை ராணுவ சட்டத்தை அறிவித்தார்.

அவரது இந்த நடவடிக்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, அச்சட்டத்தை திரும்பப்பெறுவதாக அதிபர் யூன் அறிவித்தார். எனினும், அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திய மக்கள், தொடர்ந்து போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, அதிபர் யூன் சுக் பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில், அதிபர் சதித்திட்டம் தீட்டியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ராணுவ அவசர நிலை உத்தரவு என்பது கிளர்ச்சிக்கு சமம் என்று பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அதிபர் யூன் சுக் கைது செய்ய சியோல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார்.

பதவி நீக்கம் செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்நிலையில், அவசரநிலை ராணுவ சட்டத்தை அமல்படுத்தியதற்காக, யூன் சுக் யியோல் மீதான வழக்கு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் இன்று(04.04.25) தீர்ப்பளித்த நீதிமன்றம், தென் கொரிய அதிபர் யூன் சுக் யியோலை பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ராணுவ சட்டத்தை அறிவித்ததன் மூலம், அவர் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டிலும், நாடாளுமன்ற பதவி நீக்க தீர்மானத்தை உறுதி செய்தும் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிபர் யூன் சுக் யியோல் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, தீர்ப்பை வரவேற்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர். அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் அரசியலமைப்பின்படி, இரண்டு மாதங்களுக்குள் அதிபர் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
மகனின் கல்லறையில் படுத்து கதறி, கதறி அழுத தந்தை.. மனதை உலுக்கும் ஆர்சிபி கொண்டாட்ட துயரம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
வாகன ஓட்டிகளே! டாடா நடத்தும் சிறப்பு மழைக்கால முகாம் - எப்போது? உடனே வண்டியை செக் பண்ணுங்க!
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
Embed widget