மேலும் அறிய

தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules

நகை மதிப்பில் அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை கடனாக வழங்க, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடன்பெறும் தொகை அடிப்படையில் நகையின் மதிப்பு சதவிகிதத்தை கணக்கில் கொள்ள, ரிசர்வ் வங்கி வலியுறுத்த்தியுள்ளது.

அண்மையில் தங்க நகை கடன்களுக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, புதிய விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அந்த விதிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதைதொடர்ந்து தான், தற்போது நகை கடன்களை ஊக்குவிக்கும் விதமாக, நகை மதிப்பு அடிப்படையிலான கடன் வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது. 

நகைகளின் மதிப்பிற்கு ஈடான கடன் வரம்பை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரம் மாதம் வெளியான வரைவு விதிமுறைகளில் முன்மொழியப்பட்டு இருந்த 75 சதவிகிதத்தை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகமாகும். ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே, தங்கத்தின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நடுத்தர மக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க, கூட்டுறவு வங்கிகளை நாடும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அதிகளவில் பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஆர்பிஐ அறிவிப்பின்படி, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, நகையின் மதிப்பில் 80 சதவிகிதம் வரையிலும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் வரையிலும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கடன் வழங்கல் அதிகரிக்கும், கடன் வாங்குபவர்கள் அதிகரிக்கலாம் மற்றும் தங்க நிதியாளர்களின் வருவாய் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ரூ.1 லட்ம் மதிப்பிலான தங்க நகை அடகு வைக்கப்பட்டால், இதுவரை 75 ஆயிரம் மட்டுமே நிதியுதவி கிடைத்தது. ஆனால், இனி அந்த நிதியுதவி 85 ஆயிரமாக இருக்கும்.

நகைக் கடனில் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு மட்டுமே விரிவான கடன் மதிப்பீடு தேவைப்படும். அதேநேரம் வணிகம், விவசாயம் அல்லது உற்பத்தி சொத்துகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு அத்தகைய ஆய்வு தேவையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. தற்போதைய சூழலில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே, நகை மதிப்பில் 75 சதவிகிதம் கடன் என்ற விதிமுறை பின்பற்றி வருகின்றன. அதேநேரம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய வங்கிகள்  தங்க நகையின் மதிப்பில் 88 சதவிகிதம் அளவிற்கு கடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றிற்கு கூடுதல் வட்டியை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வீடியோக்கள்

Cauvery Issue :
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
Karur power cut: கரூரில் நாளை (ஆகஸ்ட் 4) எங்கெல்லாம் முழு நேர மின்தடை: பட்டியலில் உங்க பகுதி உள்ளதா?
கரூரில் நாளை (ஆகஸ்ட் 4) எங்கெல்லாம் முழு நேர மின்தடை: பட்டியலில் உங்க பகுதி உள்ளதா?
Kanchipuram Traffic Survey: இனி காஞ்சிபுரத்தில் பார்க்கிங் பிரச்னையே இருக்காது! அதிரடி திட்டம்! என்ன செய்யப்போகிறது CUMTA?
இனி காஞ்சிபுரத்தில் பார்க்கிங் பிரச்னையே இருக்காது! அதிரடி திட்டம்! என்ன செய்யப்போகிறது CUMTA?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
Embed widget