மேலும் அறிய

தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules

நகை மதிப்பில் அதிகபட்சமாக 85 சதவிகிதம் வரை கடனாக வழங்க, இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. கடன்பெறும் தொகை அடிப்படையில் நகையின் மதிப்பு சதவிகிதத்தை கணக்கில் கொள்ள, ரிசர்வ் வங்கி வலியுறுத்த்தியுள்ளது.

அண்மையில் தங்க நகை கடன்களுக்கு, பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது. இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தொடர்ந்து, புதிய விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, அந்த விதிகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. அதைதொடர்ந்து தான், தற்போது நகை கடன்களை ஊக்குவிக்கும் விதமாக, நகை மதிப்பு அடிப்படையிலான கடன் வரம்பை உயர்த்தி அறிவித்துள்ளது. 

நகைகளின் மதிப்பிற்கு ஈடான கடன் வரம்பை உயர்த்தி இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.2.5 லட்சம் வரையிலான கடனுக்கு நகையின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரம் மாதம் வெளியான வரைவு விதிமுறைகளில் முன்மொழியப்பட்டு இருந்த 75 சதவிகிதத்தை காட்டிலும், 10 சதவிகிதம் அதிகமாகும். ஒரு நபருக்கு ஒரு முறை மட்டுமே, தங்கத்தின் மதிப்பில் 85 சதவிகிதம் வரை கடன் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், நடுத்தர மக்கள் அதிகளவில் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக குறைந்த வட்டியில் நகைக்கடன் வாங்க, கூட்டுறவு வங்கிகளை நாடும் விவசாயிகளுக்கு இந்த திட்டம் அதிகளவில் பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஆர்பிஐ அறிவிப்பின்படி, ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு, நகையின் மதிப்பில் 80 சதவிகிதம் வரையிலும், ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் வரையிலும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய விதிமுறைகளானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையால், கடன் வழங்கல் அதிகரிக்கும், கடன் வாங்குபவர்கள் அதிகரிக்கலாம் மற்றும் தங்க நிதியாளர்களின் வருவாய் வளர்ச்சி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக ரூ.1 லட்ம் மதிப்பிலான தங்க நகை அடகு வைக்கப்பட்டால், இதுவரை 75 ஆயிரம் மட்டுமே நிதியுதவி கிடைத்தது. ஆனால், இனி அந்த நிதியுதவி 85 ஆயிரமாக இருக்கும்.

நகைக் கடனில் ரூ.2.5 லட்சத்திற்கும் அதிகமான கடன்களுக்கு மட்டுமே விரிவான கடன் மதிப்பீடு தேவைப்படும். அதேநேரம் வணிகம், விவசாயம் அல்லது உற்பத்தி சொத்துகளை வாங்குவதற்கு பயன்படுத்தப்படும் ரூ.2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு அத்தகைய ஆய்வு தேவையில்லை என ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. தற்போதைய சூழலில் பொதுத்துறை வங்கிகள் மட்டுமே, நகை மதிப்பில் 75 சதவிகிதம் கடன் என்ற விதிமுறை பின்பற்றி வருகின்றன. அதேநேரம், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய வங்கிகள்  தங்க நகையின் மதிப்பில் 88 சதவிகிதம் அளவிற்கு கடன் வழங்குகின்றன. ஆனால், அவற்றிற்கு கூடுதல் வட்டியை வசூலிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: உலக யோகா தினம் கொண்டாட்டம்.. வெளுத்து வாங்கிய சூர்யவன்ஷி.. 11 மணி செய்திகள் இதோ!
Erode power cut: ஈரோட்டில் நாளை (22-06-2026) எங்கெல்லாம் பவர் கட்? - லிஸ்டை வெளியிட்ட மின் வாரியம்
ஈரோட்டில் நாளை (22-06-2026) எங்கெல்லாம் பவர் கட்? - லிஸ்டை வெளியிட்ட மின் வாரியம்
தவெக ஆதரவு வாபஸ்.. யார் யாருக்கு அட்வைஸ் கொடுக்கிறது? - பொம்மையை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
தவெக ஆதரவு வாபஸ்.. யார் யாருக்கு அட்வைஸ் கொடுக்கிறது? - பொம்மையை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Weather Update: இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
இன்றும் சென்னையில் மழையா? 6 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - தமிழக வானிலை
Embed widget