மேலும் அறிய

தஞ்சாவூர்: சீரமைக்கப்படாத வாய்க்கால் கரை - கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை - விவசாயிகள் வேதனை

அறுவடை நேரத்தில் டிராக்டர், உழவு இயந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை அருகே கரம்பை பகுதியில் பாசன வாய்க்கால் கரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள், அறுவடை நேரத்தில் டிராக்டர், உழவு இயந்திரம் ஆகியவற்றை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தஞ்சை அருகே கரம்பை பகுதியில் 7ம் நம்பர் சக்கரா வாய்க்கால் ஓடுகிறது. இது சிவகாமிபுரம், கரம்பை, சீராளூர் வரை பாசன வாய்க்காலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பாசன வாய்க்காலை நம்பி இப்பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறுவை, சம்பா, தாளடி என்று விவசாயிகள் தொடர்ந்து சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பாசன வாய்க்கால் கரை வழியேதான் செல்ல வேண்டும். ஆனால் இந்த கரையை பொதுப்பணித்துறையினர் சரியான முறையில் பராமரிக்காமலும், தார் சாலையாக மாற்றம் செய்யாமலும் உள்ளனர். இதனால் தற்போது இந்த சாலையின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. இந்த கரையில் வழியேதான் அறுவடை இயந்திரங்கள், பைக்குகளில் உர மூட்டைகள், டிராக்டர்கள் செல்ல வேண்டும்.


தஞ்சாவூர்: சீரமைக்கப்படாத வாய்க்கால் கரை - கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை - விவசாயிகள் வேதனை

ஆனால் கரை மிகவும் மோசமான நிலையில் பள்ளம், படுகுழியாக உள்ளது. மேலும் மழைக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.சேறும் சகதியுமாக மாறி நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. களைப்பறித்தல், உரம், பூச்சிக் கொல்லி மருந்து அடித்தல் போன்ற பணிகளை கூட விவசாயிகள் மேற்கொள்ள மிகுந்த சிரமப்படுகின்றனர். 1500 ஏக்கருக்கும் மேல் சாகுபடி நிலங்கள் உள்ளது. ஒரு வயலில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தால் அடுத்த வயலுக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது.  நடந்து செல்லவே முடியாத நிலையில் வாகனத்தில் செல்வது என்பதும் பெரும் பிரச்னைதான். டிராக்டர் சென்றால் கூட சகதியில் சிக்கிக் கொள்ளும். கடந்த குறுவை அறுவடையின் போது இதுபோன்று பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் சந்தித்தனர்.

குறுவை சாகுபடியின் போது ஒருசில விவசாயிகள் முன் கூட்டியே நாற்று பறித்து நட்டனர். சில விவசாயிகள் ஒரு சில நாட்களுக்கு பின்னர் சாகுபடி செய்தனர். முன்கூட்டியே சாகுபடி செய்த விவசாயிகளின் வயலுக்கு இதனால் அறுவடை இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. வேறு வழியின்றி சேறும் சகதியுமான பாசன வாய்க்கால் கரையிலேயே அறுவடை இயந்திரத்தை விவசாயிகள் கொண்டு சென்றனர். தற்போது ஒரு போக சம்பா, தாளடி பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 2 கி.மீ. தூரம் வரை உள்ள இந்த பாசன வாய்க்கால் கரையை பொதுப்பணி துறை அதிகாரிகள் உடன் சீரமைத்து தரமான சாலையாக போட்டு தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
America Texas Flood: டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
டெக்சாஸ் வெள்ளம்; பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டியது - எவ்வளவு பேர் மிஸ்ஸிங் தெரியுமா.?
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
உயிர்கள் விளையாட்டா போயிடுச்சா? போன் அழைப்பை ஏற்காமல் உறங்கிய கேட் கீப்பர்- அதிர்ச்சி பின்னணி!
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
EV Charging Bill: மின்சார வாகனங்களுக்கு வந்த சோதனை! எகிறிய சார்ஜிங் ஸ்டேஷன் கட்டணம் - புது பில் எவ்ளோ?
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
RCB Stampade: 11 பேர் மரணத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலியா? சிஐடி விசாரணையில் அதிர்ச்சி - ஷாக்கில் ஆர்சிபி ரசிகர்கள்
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
மதுரையில் ஆடு, மாடுகளுடன் மாநாடு... முன்னேற்பாடு பணிகள் நேரில் ஆய்வு செய்த சீமான் !
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
Bharat Bandh: இன்று ஸ்டிரைக்.. நாடே ஸ்தம்பித்தது! தமிழ்நாட்டில் பஸ் ஓடுமா? வங்கி இயங்குமா?
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Roundup 09.07.2025 : சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் கேட்கீப்பர்.. மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget