மேலும் அறிய

குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்

குஜராத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 5 வாகனங்கள் பாலத்தில் விழுந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

இடிந்து விழுந்த பாலம்:

குஜராத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 5 வாகனங்கள் பாலத்தில் விழுந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி, விசாரணையானது நடந்து வருகிறது

பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சாலை மற்றும் கட்டிடங்கள் துறை செயலாளர் பி.ஆர். படேலியா கூறுகையில், "காம்பிரா பாலம் சேதமடைந்ததால் இந்த விபத்து நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

எச்சரிக்கை இருந்தும் பாலத்தில் போக்குவரத்து:

இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்த 5 வாகனங்களில், இரண்டு லாரிகள் முழுமையாக ஆற்றில் மூழ்கின, ஒரு டேங்கர் லாரி பாதி தொங்கிக் கொண்டிருந்தது. பாலம் இடிந்து விழுந்தவுடன், மக்கள் அலறி அடித்து ஓடினர், மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. இந்தப் பாலம் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, ஆனால் காலப்போக்கில் அதன் நிலை மிகவும் மோசமாகிவிட்டது . உள்ளூர் எம்எல்ஏ சைதன்யா சிங் ஜாலா ஏற்கனவே இந்தப் பாலம் குறித்து எச்சரித்து புதிய பாலம் கட்டக் கோரினார் இருந்த போதிலும், பாலத்தில் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்படவில்லை. இப்போது ரூ.212 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இதற்காக ஒரு கணக்கெடுப்பும் செய்யப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழுவை விசாரணை 

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த உடனேயே, அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, ஆற்றில் விழுந்த வாகனங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. மேலும், நீச்சல் வீரர்கள் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த விபத்து தற்போது அங்கு பேசுப்பொருளாகியுள்ளது. வாகனங்களின் இயக்கம் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியிருந்தால், ஒருவேளை இந்த துயர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். விசாரணை அறிக்கையின் முடிவில் தான் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
33 ஆண்டுகள் நிலுவை.. இந்திய அரசியலையே உலுக்கும் ஒற்றை மசோதா - அப்படி என்ன இருக்கு?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
மதுரை டூ சென்னை 4 ஆயிரம்.. தனியார் பேருந்துகள் நடத்தும் கட்டண கொள்ளை - தடுக்கப்போவது யார்?
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
அமைச்சர் அன்பில் மகேஷை கலாய்த்த ஜீவாவுக்கு கடும் எதிர்ப்பு...விளக்கம் கொடுத்த ஜீவா
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துகள்: ஏன் தேவை? பாயிண்ட் பாயிண்டாக பட்டியலிட்ட பாமக!
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
TN Power Shutdown: சென்னை முதல் திருநெல்வேலி வரை! தமிழ்நாட்டில் நாளை(19.01.2026) மின் தடை ஏற்படும் இடங்கள்.. முழு விவரம்
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
Mumbai Mayor: கூட்டணிக்கே விபூதி அடிக்கும் பாஜக? ரிசார்ட் பாலிடிக்ஸை தொடங்கிய ஏக்நாத் - மும்பை யாருக்கு?
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
TN TRB: நட்டாற்றில் 4 லட்சம் ஆசிரியர்கள்; தேர்வு அட்டவணையை டிஆர்பி உடனே வெளியிடக் கோரிக்கை!
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
அரசு ஊழியர்கள் பிப்.3 முதல் தொடர் வேலை நிறுத்தம்; சூளுரைத்த அமைப்பு! அதிர்ச்சியில் அரசு
Embed widget