மேலும் அறிய

திருவண்ணாமலை : வேட்டவலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுப்பு

வேட்டவலத்தில் செங்காவி நிறத்தில் வரையப்பட்டுள்ள 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி குன்று மலைகளின் தொடர்ச்சியாக உள்ள திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே பாப்பாத்திக் கொட்டாய் கிராமத்தில் பெரிய பாறை ஒன்று உள்ளது. இங்கு மாவட்ட வரலாற்று நடுவத்தின் செயலாளர் ச.பாலமுருகன், பேராசிரியர் எ.சுதாகர் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தபோது, அரிய வகை செங்காவி நிறத்தில் ஓவியங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த பெரிய பாறையின் கீழ் புடவு போன்ற பகுதியில் ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளது, அழியாமல் இருந்துள்ளது. மொத்தம் அந்த பாறையில் 5 மான்கள் வரையப்பட்டுள்ளன. இதில் கொம்புகளுடன் விடைத்து நிற்கும் பெரிய மான் ஒன்றும், அதன் எதிர்புறம் கன்றாக இருக்கும் சிறிய மான் ஒன்றும் தெளிவாக பார்வைக்கு புலப்படுகின்றது.


திருவண்ணாமலை : வேட்டவலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுப்பு

இந்த ஓவியங்கள்  செங்காவி நிறத்தைக் கொண்டு வரையப்பட்டள்ளது இவை குறைந்தது 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என பாறை ஓவிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கு முன்னர் வேட்டவலத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் நீலத்தாங்கல் பகுதியிலும் பல நூற்றாண்டுக்கு முந்தைய பாறை ஓவியங்களை மாவட்ட வரலாற்று நடுவத்தின் குழுவினர் கண்டறிந்து ஆவணப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பகுதியில் உள்ள தொல்லியல் தடயங்களைத் தேடி கண்டுபிடித்து வெளிப்படுத்த தொடர் ஆய்வுகளை மேற் கொண்டு வருகின்றனர்.

இது குறித்து வரலாற்று நடுவத்தின் செயலாளர் பாலமுருகனிடம் கேட்டபோது

உலகின் பல நாடுகளில் இத்தகைய பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. உதாரணமாகப் பிரான்சு,  இத்தாலி, ஆப்பிரிக்கா,  ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைக் கூறலாம். இந்நாடுகளில் கிடைத்துள்ள வரலாற்றுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் போலவே இந்தியாவிலும் பல இடங்களில் இப்பாறை ஓவியங்கள் கிடைத்துள்ளன. முதல் முதலாக உலகில் பாறை ஓவியமானது ஸ்பெயின் நாட்டில் அல்டமிரா என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் இந்தியாவில் பீம்பேட்கா என்னுமிடத்திலும், தமிழகத்தில் மல்லபாடி என்னும் இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

திருவண்ணாமலை : வேட்டவலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுப்பு

தமிழகத்தில் இதுவரை ஐம்பது இடங்களுக்கு மேல் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை அறிவதற்கு இதற்கு பாறை ஓவியங்கள் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றுள் பல்வேறு கண்டங்களையும் தாண்டிய சில பொதுவான பண்புகளுடன் விளங்குகின்றன என்பதை அறிஞர்கள் இந்த ஓவியங்களை வைத்து கூறுகின்றது.

பல்வேறு கண்டங்களிலும் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்களில், அவற்றின் தோற்றம், குறியீடுகள், அவை வெளிப்படுத்தும் சிந்தனைகள் ஆகியவை பொதுவானதாக அமைகின்றன. இதன் மூலம் வரலாற்றுக்கு முற்பட்ட மக்கள் ஓவியங்கள் மூலம் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தினர் என்பதை அறிய முடிகிறது. ஜான் காலிங்வுட், ரொனால்டு மோரிஸ் ஆகியோர் இவ்வோவியங்கள் பற்றி ஆராய்ந்துள்ளனர். 

திருவண்ணாமலை : வேட்டவலத்தில் 3,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறை ஓவியம் கண்டெடுப்பு

அதுமட்டும் இன்றி நம் மாவட்டத்தில் பல இடங்களில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் சிறப்புடையதாக வேட்டவலம் பகுதியில் உள்ள பாறை ஓவியங்கள் போன்று தென்மாதிமங்கலம் மலை பகுதியில் வட்ட வடிவில் பாறை ஓவியங்களும் கண்டுள்ளோம் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Cadre Murder  : EPS ஆதரவாளர் படு கொலை! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! பதற்றத்தில் சேலம்!Salem Jail Prisoners  : கைதிகளின் கைவண்ணம் மாளிகையான சேலம் ஜெயில்! ஜம்முனு இருங்க..Rahul Gandhi Slams Rajnath Singh : ”எங்கப்பா 1 கோடி? பொய் சொன்ன ராஜ்நாத் சிங்?World Records : 550 மாணவர்களுக்கு இலவச உடல் பரிசோதனை..ஸ்ரீ ராமச்சந்திரா குழுமம் உலக சாதனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Team India Met PM Modi: கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் - தடபுடலான விருந்து கொடுத்து அசத்திய பிரதமர் மோடி
Breaking News LIVE:  ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: ‘நீங்கள் நலமா’ திட்டம் : பயனாளிகள் கருத்தைக் கேட்டறிந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
இங்கிலாந்து தேர்தல் - களம் கண்டுள்ள 8 தமிழர்கள், ரிஷி சுனக்கிற்கு மீண்டும் அரியணை கிடைக்குமா?
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
2026ல் அண்ணாமலை முதல்வராவது நிச்சயம் - மடாதிபதி ஸ்ரீ சுந்தரவடிவேல் சுவாமிகள் பேட்டி
Salem Prison: சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
சிறை பஜார்.. கல்வியிலும் டாப்..மறுவாழ்வு மையமாக மாற்றம் பெறும் சேலம் மத்திய சிறைச்சாலை.
"கத்தில குத்திட்டாங்க சார்" கதறிய பெண் - போய் கத்தி எடுத்துட்டு வாம்மா என்று சொன்ன காவலர்
ITR Filing: நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
நெருங்கும் டெட்லைன், யாரெல்லாம் கட்டாயம் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்? முழு லிஸ்ட் இதோ..!
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ.10 ஆயிரம்- கலந்துகொள்வது எப்படி?
Embed widget