மேலும் அறிய

மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.- அன்புமணி.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் இல்லை என்றும் தணிக்கைத் தடை என்ற பெயரில் ஆசிரியர்களின் உரிமைகளைப் பறிப்பதா எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழக அரசின் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றவர்களில் சுமார் 1000 ஆசிரியர்களுக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, தணிக்கைத் தடை என்ற பெயரில், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 8 வகையான ஊக்க ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய ஊக்க ஊதியத்தை வழங்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

அரசின் முதல் கடமை


அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியாற்றி ஓய்வு பெறும்போது கடைசி பணி நாளில் அவர்களுக்கு உரிய ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும். ஆனால், 2024& 25ஆம் கல்வியாண்டில் ஓய்வுபெற்ற தொடக்கக்கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்களில் 1000 பேருக்கு இன்னும் ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்படவில்லை. அவை அவர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பதும் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்கு மேல் அரசு பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஓய்வுக்காலப் பயன்களை வழங்க வேண்டியது அரசின் முதல் கடமை; அதை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.

ஊக்க ஊதியமும் மறுப்பா?

அதேபோல், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பி.லிட்., பி.எட். பட்டப்படிப்புகளை படித்து முடித்ததற்காக வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை வழங்க தமிழக அரசு மறுக்கிறது. கற்பிக்கும் பாடம் தவிர்த்து பிற பாடங்களில் பட்டம் பெறுதல், நேரடியாக முதுநிலை பட்டம் பெற்றவர்கள் பி.எட் பட்டம் பெறுதல்,  ஆசிரியர்களில் இளையோர் & முதியோர் இடையிலான ஊதிய முரண்பாடுகளைக் களைதல்,  பதவி உயர்வுக்கான ஊதியத்தை நிர்ணயித்தல், 1993ஆம் ஆண்டின் சிறப்புப் படிகளை பெறுதல், கீழ்நிலை, மேல்நிலை பணிக்காலத்தை ஒருங்கிணைத்து தேர்வு நிலை, சிறப்பு நிலை தகுதிகளைப் பெறுதல், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியாக பணியாற்றியதற்கான தேர்வுநிலை தர ஊதியம் பெறுதல் ஆகியவற்றை தணிக்கைத் தடையை காரணம் காட்டி தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 280ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 286இன்படி மேற்குறிப்பிடப்பட்ட 8 உரிமைகளையும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், அரசாணைக்கு முற்றிலும் எதிரான வகையில் தணிக்கைத் துறையும், தொடக்கக் கல்வித்துறை இயக்குனரும் ஆணைகளை பிறப்பித்து ஆசிரியர்களின் உரிமைகளை பறித்து வருகின்றனர். இந்த சிக்கலில் தலையிட்டு தீர்வு காண வேண்டிய தமிழக அரசோ, அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை நினைத்துக் கவலைப் படாத தமிழக ஆட்சியாளர்கள், அதன் மூலம் அரசின் செலவுகள் குறைவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றனர்.

திமுக அரசு பின்வாங்கக்கூடாது


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, அதற்கு தணிக்கைத் துறையின் தடைகள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது. தேவையின்றி விதிக்கப்படும் தடைகளை உடனடியாக அகற்றி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான உரிமைகள் கிடைப்பதை உறுதி செட்ட வேண்டியது அரசின் கடமை ஆகும். அதிலிருந்து திமுக அரசு ஒருபோதும் பின்வாங்கக்கூடாது.

தமிழ்நாட்டில் விடுதலைக்கு பிந்தைய காலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்களுக்கு எதிராக மிக மோசமாக செயல்படும் அரசு என்றால், அது இப்போது ஆட்சி நடத்தும் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு தான். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும், பகுதிநேர ஆசிரியர்களும், தற்காலிக ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளை 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் வழங்கிய திமுக, அவற்றின் ஒன்றைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு திமுக செய்யும் பெருந்துரோகம்.

இந்த துரோகத்திற்கும், ஆசிரியர்களின் மன உளைச்சல் மற்றும் வேதனைகளுக்கும் அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். தணிக்கைத் துறையால் போடப்பட்டுள்ள தேவையற்ற தடைகள் அனைத்தையும் அகற்றி, ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் அரசு உடனே வழங்க வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Annamalai Politics : அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
அரசியலில் இருந்து ஓய்வா.? என்ன சொல்லப்போகிறார் அண்ணாமலை.!பாஜகவினருக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
TVK Vijay: டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
டெல்லி ஷாக், பனையூர் ஹாப்பி..! திமுகவின் முடிவால் செம்ம குஷியில் தவெக - விஜயின் இலக்கு என்ன?
CM Vijay Cabinet: சிஎம் விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
CM விஜயின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள் என்ன? தேர்தல் வாக்குறுதிகள்?
Annamalai: கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டேனா.!! பிராடு அண்ணாமலை ரசிகர்கள் தான் காரணம்- கே.பி.ராமலிங்கம் பகீர் புகார்
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
Udhayanidhi Stalin: நம்ம குடும்பமே ஓட்டு போடாம ஏமாத்திட்டாங்க.. ஆதங்கப்பட்ட உதயநிதி!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
காங்கிரஸ் இல்லாமல் இந்தியா கூட்டணியே இல்லை.. திமுகவை விளாசிய மாணிக்கம் தாகூர்!
Embed widget