![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலய தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்
மேல தாளங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கல்யாண வெங்கட்ரமண சுவாமியின் திரு தேரோட்டத்தில் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
![தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலய தேரோட்டம் - குவிந்த பக்தர்கள் karur puratasi month chariot at sri kalyana venkataramana swamy temple TNN தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமி ஆலய தேரோட்டம் - குவிந்த பக்தர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/05/9f20c6a2513e30efc09f999ad1cd89b51664947752692183_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் கல்யாண வெங்கட்ரமண சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சுவாமிகளுக்கு திருக்கல்யாண வடிவம் நடைபெற்றது. பின்னர் புரட்டாசி மாத தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு, அதிகாலை நடை திறக்கப்பட்டு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் மணக்கோலத்தில் தேரில் ஒலிபெருக்க செய்தனர்.
அதைத்தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் கல்யாண வெங்கட்ரமண சுவாமியின் திரு தேரோட்டத்தில் கலந்துகொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் பக்தர்கள் ஆர்வத்துடன் தேரை இழுத்த நிலையில் தேரானது ஆலயத்தில் இருந்து புறப்பட்டு ஆலயம் பலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக புரட்டாசி மாதம் தேரோட்டம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற புரட்டாசி மாத தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருத்தேர் 4 மாட வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது. அங்கு வீற்றிருந்தவாறு தொடர்ந்து பக்தர்களுக்கு பெருமாள் சேவை சாதித்தார். சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கரூர் தான்தோன்றிமலை அருள்மிகு வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் இன்று நடைபெற்ற புரட்டாசி தேரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மலை வீதியை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருவதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)