மேலும் அறிய

தேனி: ஊராட்சிக்கு நிதியிழப்பு... ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

தேனி மாவட்டம்  சுருளிப்பட்டியில் கடமையிலிருந்து தவறியதாகவும், ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் கூறி ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சுருளிப்பட்டி ஊராட்சி. இதன் ஊராட்சி மன்ற தலைவராக நாகமணி வெங்கடேசன் என்பவர் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நாகமணி வெங்கடேசன் பொறுப்பேற்றதிலிருந்து இவருக்கும் வார்டு உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகள் நிலவி வந்துள்ளது. மேலும் இவர் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் வந்ததால் நாகமணி வெங்கடேசன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரை பதவி விலக கோரி தொடர்ச்சியாக வார்டு உறுப்பினர்கள் அழுத்தம் கொடுத்து வந்துள்ளனர். மேலும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கொடுத்துள்ளனர்.


தேனி: ஊராட்சிக்கு நிதியிழப்பு...  ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

அதனைத் தொடர்ந்து வார்டு உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் கொடுத்தது தொடர்பாகவும் உயர் அதிகாரிகள் ஊராட்சி மன்றத்தில் சிறப்பு தணிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த தணிக்கையில் ரூபாய் 4 லட்சத்து 67 ஆயிரம் ரூபாய்க்கு உரிய அனுமதி பெறாமல் வளர்ச்சிப் பணிகளில் செலவு செய்தது தெரியவந்துள்ளது. அதன் காரணமாக அரசுக்கு நிதி இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தத் தொகையினை மீண்டும் ஊராட்சி மன்ற தலைவரே செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் அந்தத் தொகையை செலுத்தாததால் அவரது செக் பவர் பறிக்கப்பட்டது.

Cyclone Dana: தீவிர புயலாக மாறிய டாணா; 200 ரயில்கள் ரத்து! மூடப்படும் கொல்கத்தா விமான நிலையம்
தேனி: ஊராட்சிக்கு நிதியிழப்பு...  ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

செக் பவரை மீண்டும் பெறுவதற்காக தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் முயற்சி செய்து வந்த நிலையில் இன்னும் அவரின் பதவி காலம் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள சூழலில் தேனி மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்வதாக அறிவித்து அதனை வெளியிட்டார். மேலும் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது குடும்பத்தார் யாரும் வீட்டில் இல்லாமல் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நேற்று காலை வரை ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொள்ள முடியாததால் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு அரசாணையினை ஊராட்சி மன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் வீட்டின் முன்பாக கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் சென்று வீட்டின் முன்பு சுவரில் உத்தரவு ஆணையினை ஒட்டிச் சென்றனர்.

இந்தியாவுக்கு வழிகாட்டும் தென்னிந்தியா.. நாளை, ஏபிபி நெட்வொர்க்கின் ‘தி சதர்ன் ரைசிங் மாநாடு 2024’


தேனி: ஊராட்சிக்கு நிதியிழப்பு...  ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்

Rasipalan Today Oct 24:மேஷத்துக்கு அனுசரிப்பு தேவை; ரிஷபத்திற்கு தன்னம்பிக்கை - உங்கள் ராசிக்கான பலன்?

அதில் கடமையிலிருந்து தவறியதாகவும் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாகவும் அதன் காரணமாக பதவி நீக்கம் செய்யப்படுவதாக வாசகங்கள் அடங்கியிருந்தது. மேலும் அரசுக்கு இழப்பு செய்த தொக தொகையினை அரசுக்கு செலுத்துமாறு அதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்ச்சியாக பல்வேறு புகார்கள் ஊராட்சி மன்ற தலைவர் மீது எழுந்து வந்த சூழலில் தற்போது அவர் பதவி நீக்கம் செய்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக சுருளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய செயலர் சந்திரசேகர் என்பவர் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajini fans vs TVK: விஜய் சுற்றுப்பயணம்” அழுகிய முட்டை வீசுவோம்” ரஜினி ரசிகர்கள் சதி திட்டம்?மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நான் புலி.. நான் பெரியாரை ஏத்துக்கவே மாட்டேன்" மீண்டும் சீறிய சீமான்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
TNPSC Controversy: தமிழ்நாட்டின் தாயுமானவர் யார்? டிஎன்பிஎஸ்சி குரூப் 2 வினாத்தாளால் வெடித்த சர்ச்சை! விவரம்
Minister Raghupathi on EPS: கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
கட்சியை கட்டுப்படுத்தவே படாத பாடு படுகிறார்.? எடப்பாடி பழனிசாமியை விளாசிய அமைச்சர்...
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
தைப்பூச விழா.. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூக்கள் விலையை தெரிஞ்சுக்கோங்க
ADMK EPS Discussion: செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா.? முக்கிய ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி...
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
Annamalai: திமுக அரசு.. நம்பர் ஒன் அமைச்சர் இவர் தான், பாஜக தூக்குவது உறுதி - ஸ்கெட்ச் போட்ட அண்ணாமலை
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
NEET UG Exam: நீட் இளங்கலைத் தேர்வு கட்டணம், மையம்..விண்ணப்பிப்பது எப்படி? ஸ்டெப் பை ஸ்டெப் விளக்கம்!
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Sengottaiyan : ”சசிகலாவோடு பேசினாரா செங்கோட்டையன்?” எடப்பாடி பழனிசாமி அதிருப்திக்கு என்ன காரணம்..?
Embed widget