Chennai Power Shutdown: சென்னையில ஜூலை 24-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இதோ விவரம்
Chennai Power Cut(24-07-2025): சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை தற்போது தெரிந்துகொள்ளலாம்.

சென்னையில், மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகளுக்காக, நாளை சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஜூலை 24-ம் தேதி, அதாவது நாளை பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நங்கநல்லூர்
வித்யா நகர் 1 முதல் 3-வது தெரு, முத்தியால் ரெட்டி நாகர் 1 முதல் 3 தெருக்கள், கணேஷ் நகர் மெயின் ரோடு 1 மற்றும் 2, கஸ்தூரி பாய் தெரு, ராமகிருஷ்ணன் தெரு, ராதா நகர், அண்ணாநகர் மெயின் ரோடு, கனகவல்லி தெரு, ஈபிஆர் நகர், மண்டபம் இணைப்பு சாலை, உஷா நகர் 2 மற்றும் 3 வது தெரு, பாலாஜி நகர் மெயின் ரோடு, 17,18,19, 24 முதல் 37 வரை தெருக்கள் மற்றும் 3 வது விரிவாக்கம், சப்தகிரி தெரு, கிராம சாலை, காயத்திரி தெரு, கிரி தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















