மேலும் அறிய

வரதட்சணை புகார்: பொய் வழக்கா? காவலரின் பெற்றோருக்கு முன்ஜாமீன்! பரபரப்பு திருப்பம்

அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி முன் ஜாமீன் வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின் - முன் ஜாமின் வழங்கப்பட்டது.

பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை முன் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.  

இளம் பெண்ணிற்கு வரதட்சணை கொடுமை
 
மதுரை அழகர்கோயில் சாலையில் உள்ள காதக்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூபாலன். இவர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தங்க பிரியா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பூபாலன் தனது மனைவி தங்க பிரியாவை வரதட்சனை கேட்டு அடித்து உதைத்து துன்புறுத்தியதாக ஆடியோ ஒன்று வெளியானது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்  தங்க பிரியா அளித்த புகாரின் பேரில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பூபாலன் அவரது தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், அவரது மனைவி விஜயா மற்றும் தங்கை அனிதா உட்பட பலபேர் மீது கொலை முயற்சி, பெண் வன்கொடுமை செய்தல், கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல், சித்திரவதை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ்  அப்பன் திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 
 
முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல்
 
பூபாலனின் தந்தை செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி விஜயா ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமின் கோரி‌ மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
 
நீதிபதி விசாரணை  
 
அந்த மனு நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் மோகன்குமார், முத்துக்குமார், மகேஸ்வரி ஆகியோர் ஆஜராகி கைது செய்யப்பட்ட பூபாலனின் தந்தை போலீஸ் இன்ஸ்பெக்டராக கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாமல் பணிபுரிந்து வருகிறார். அவர் கோவில்பட்டியில் வசித்து வருகிறார்.  இதற்கிடையில் வரதட்சணை கேட்டு தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது தவறானது.  திருமணம் முடிந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது.  இதுவரை எவ்வித புகார் இல்லாத நிலையில் வேண்டுமென்றே பொய்யாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுபடி வரதட்சனை சம்பந்தப்பட்ட வழக்குகளை சமூக நலத்துறை மட்டுமே விசாரிக்க வேண்டும்.  அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்ற தங்க பிரியா அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆகி விடு திரும்பிவிட்டார். வழக்கு பதிவு செய்வதற்காகவே அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக எவ்வித மருத்துவ அறிக்கையும் இல்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட அவர்கள் தனது மகனின் பிறந்த நாளை கொண்டாடி உள்ளதற்கான புகைப்பட ஆதாரங்கள் வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்தனர். பூபாலன் தரப்பில் எவ்வித வரதட்சணையும் தங்க பிரியாவிடம் கேட்கவில்லை. என்பதே உண்மை. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளதாக கூறி அரசின் சலுகைகளை பெற்ற தங்க பிரியாவின் தந்தை குடும்பத்தினர் 60 பவுன் வரதட்சனை நகைகள் போட்டிருப்பதாகவும் சீர் வரிசைகள் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுவது நம்ப முடியாத ஒன்றாக உள்ளது. ஆகவே தங்க பிரியா அடுத்த பொய் புகாரின் பேரில் பதியப்பட்ட வழக்கில் மாமனார் மற்றும் மாமியாரை முன் ஜாமினில் விடுவிக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.  
 
முன் ஜாமின் வழங்கி உத்தரவு
 
அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி ஆஜராகி முன் ஜாமீன் வழங்குவதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட முதன்மை மாவட்ட அமர்வு  நீதிபதி சிவகடாட்சம் போலீஸ்காரர் பூபாலனின் தந்தை மற்றும் தாய்க்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
New Year and Christmas special train: 12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
12 நாள் தொடர் விடுமுறை.! நாகர்கோவில், ஈரோடு, வேளாங்கண்ணி, பெங்களூருக்கு சிறப்பு ரயில் அறிவிப்பு
South Africa Gun Shoot: தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
தென் ஆப்பிரிக்காவில் கொடூரம்; மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு; 9 பேர் உயிரிழப்பு - 10 பேர் காயம்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
Bahubali Rocket: இந்தியாவின் பாகுபலி ராக்கெட் தெரியுமா? ப்ளூபேர்ட் என்றால் என்ன? டவரே இல்லாமல் சிக்னல்...
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
TN WEATHER ALERT: மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
மீனவர்களே அலர்ட்... 65 கி.மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று- வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
Embed widget