மேலும் அறிய

மாணவர்களுக்கு குட் நியூஸ்... ! விரைவில் வெளியாகிறது அரசாணை; உயர்கல்வி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு

உயர்கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை விரைவில்  வெளியாக உள்ளது.

புதுச்சேரி: உயர்கல்வியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணை விரைவில்  வெளியாக உள்ளது. மாநிலத்தில், அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கு சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

விரைவில் 10 சதவீத இட ஒதுக்கீடு

மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு, அரசு பள்ளி மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதா உள்ளிட்ட நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். அதனை அனைத்து கட்சிகளும் வரவேற்றபோதிலும், இந்த இட ஒதுக்கீட்டை இந்தாண்டு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. இதற்கிடையே அரசு பள்ளிகள் CBSC சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டு முதல் முறையாக கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதினர். தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் அதிக அளவில் இல்லாததால், உயர் கல்வி சேர்க்கையில் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

நீட் அல்லாத படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை

இதனால், அனைத்து உயர்கல்வியிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனையேற்று அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து படிப்புகளுக்கும் 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். ஆனாலும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது. அதே நேரத்தில், நீட் அல்லாத படிப்புகளுக்கு சென்டாக் விண்ணப்பம் பெற்று, தரவரிசை வெளியிட்டுள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அரசாணை வெளியிடாததால், நீட் அல்லாத படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படாமல் உள்ளது.

தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உயர்கல்விக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சென்டாக் நிர்வாகம் மவுனம் காத்து வந்ததால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் பெரும் தவிப்பிற்கு உள்ளாகினர். அதனையறிந்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கடந்த வாரம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு இந்தாண்டே அமல்படுத்த உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இதுதொடர்பான துறை செயலர் வழியாக அனுப்பிய கோப்பிற்கு சட்டத்துறை, தலைமைச் செயலர் நேற்று ஒப்புதல் அளித்து, துறை அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வார இறுதிக்குள் அரசாணை வெளியிட நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து துறை அமைச்சரின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவையை கூட்ட முதல்வர் நேற்று மாலை உத்தரவிட்டார். அதனால், இன்று அல்லது நாளை அமைச்சரவை கூடி, கோப்பிற்கு ஒப்பதல் பெற்று, லண்டன் சென்றுள்ள ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்பி, ஓப்புதல் பெற்று, இவ்வார இறுதிக்குள் அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கலந்தாய்வு

அரசாணை வெளியானவுடன் சீட் மேட்ரிக்ஸ் மற்றும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு பணியை துவங்க சென்டாக் நிர்வாகம் ஆயத்தமாகி வருகிறது. மேலும், பி.டெக் படிப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்றதால், அதற்காக சிறப்பு கலந்தாய்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
பள்ளி திறந்த நாளே மாணவர்கள் கையில் புத்தகம்: மலரும் புன்னகைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
பள்ளி திறந்த நாளே மாணவர்கள் கையில் புத்தகம்: மலரும் புன்னகைக்கு ஏற்பாடுகள் தீவிரம்
சிபிஎஸ்இ புதிய மொழிக் கொள்கையால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து; கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்
சிபிஎஸ்இ புதிய மொழிக் கொள்கையால் புதுச்சேரியில் பிரெஞ்சு மொழிக்கு ஆபத்து; கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள்
CBSE 12th Result 2026: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்; எப்போது பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? எப்படி காண்பது?
CBSE 12th Result 2026: எதிர்பார்த்து காத்திருக்கும் மாணவர்கள்; எப்போது பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? எப்படி காண்பது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
Exit Polls 2026: எதிர்பார்ப்பை எகிறவைக்கும் எக்ஸிட் போல்ஸ்; தூர்தர்ஷன் 1996 கருத்துக்கணிப்பு முதல் இன்று வரை- ஒரு பார்வை!
ADMK Report : 'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் எடப்பாடி பழனிசாமி..!
'மாஜி உளவுத்துறை அதிகாரி கொடுத்த ரிப்போர்ட்' உற்சாகத்தில் EPS..!
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
JEE Main 2026: ஜேஇஇ மெயின் 2026 தேர்வு முடிவுகள்; டிஜிலாக்கரில் மதிப்பெண் அட்டை வெளியீடு- பெறுவது எப்படி?
TN Exit Poll Results : ”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
”அதிமுகவிற்கு சாதகமாகும் Exit Poll?” எடப்பாடியிடம் கிடைத்த ரகசிய சர்வே..!
GOLD SILVER RATE: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை; ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.!
நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை; ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.!
Annamalai : ‘அண்ணாமலையை விடாத மோடி, அமித் ஷா’ விரைவில் மத்திய அமைச்சர்..?
'மத்திய அமைச்சராகும் அண்ணாமலை?’ இதுதான் காரணமா..?
Donald Trump: “இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்“; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!
“இனி நான் நல்லவனா இருக்க மாட்டேன்“; துப்பாக்கியை கையில் எடுத்த ட்ரம்ப்; என்ன இப்படி கிளம்பிட்டாரு.!
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
TNEB: டிரான்ஸ்பார்மர் கொள்முதல் சர்ச்சை... சிபிஐ-க்கு மாற்றப்பட்ட விசாரணை! தமிழக அரசுக்கு சிக்கலா?
Embed widget