மேலும் அறிய

Watch Video: சிவகங்கையில் செய்தியாளரை தாக்க முயன்ற அமைச்சர் பெரிய கருப்பன் - வீடியோவால் பரபரப்பு

இளைஞர்களின் திறன் விழாவில்  அமைச்சருக்காக 3 மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட செய்தியாளரை அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டும் வீடியோ வைரலாக பரவுகிறது.

சிவகங்கை மாவட்டம், ராஜா துரைசிங்கம் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக  வாழ்வாதார இயக்கம் சார்பில் படித்து, வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி அளிப்பதற்கான  இளைஞர் திறன் திருவிழாவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் காலை 10 மணிக்கு துவக்கி வைப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்காக படித்த இளைஞர்கள் விழா அரங்குக்குள் விரைவாகவே அழைத்து வந்து அமர வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 
இதனை தொடர்ந்து அங்குள்ள செய்தியாளர்கள் மூன்று மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டதாக செய்தியினை வெளியிட்டனர். அதன்பின் காலை 11 மணிக்கு மேல் விழா நடைபெறும் கல்லூரிக்கு வருகை தந்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் அங்கு நின்று கொண்டிருந்த  தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களை காரில் இருந்து அடிப்பது போல் இறங்கி வந்து மிரட்டியுள்ளார். அதை  வீடியோ எடுப்பது தெரிந்து கொண்டவுடன் சுதாரித்த அமைச்சர் அங்கிருந்து நழுவிச் சென்றார். தற்போது செய்தியாளர்களை மிரட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Watch Video: சிவகங்கையில் செய்தியாளரை தாக்க முயன்ற அமைச்சர் பெரிய கருப்பன் -  வீடியோவால் பரபரப்பு
இதுகுறித்து சிவகங்கை செய்தியாளர்கள் சிலர்..,” தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலைப்பு தொடர்பாக பயிற்சி அளிப்பதற்கான திறன் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நிரலில் 10 என மணி போடப்பட்டிருந்தது. ஆனால் படித்த இளைஞர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு அழைத்து வரப்பட்டு அமரவைக்கப்பட்டிருந்தனர். இதனை செய்தி வெளியிட்ட சக செய்தியாளரை மிரட்டி அமைச்சர் அடிக்க முற்பட்டார். மேலும் தவறான வார்த்தையையும் பேசினார். வீடியோ எடுக்கிறோம் என தெரிந்து கொண்ட பின் சுதாரித்துக் கொண்டார். அதனை வீடியோ எடுத்த எங்களை வசைபாடினார். அமைச்சரை சுற்றி அவரின் ஆதரவாளர்கள் இருந்ததால் அவரிடம் விளக்க முடியவில்லை. அமைச்சர் எங்களை மிரட்டியது மன வேதனை அளிக்கிறது என்றனர்.

Watch Video: சிவகங்கையில் செய்தியாளரை தாக்க முயன்ற அமைச்சர் பெரிய கருப்பன் -  வீடியோவால் பரபரப்பு
இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் பேசினோம், “நடைபெற்ற நிகழ்ச்சி நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி அல்ல. அமைச்சருக்காக காத்திருக்க வேண்டும் என்ற நிகழ்வு அல்ல. காலை முதல் மாலை வரை தொடர்ந்து நடைபெறும் நிகழ்வில் அமைச்சர் இடையே கலந்து கொள்கிறோம் எனக் கூறி கலந்துகொண்டார். ஆனால் மாணவர்கள் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என தவறான செய்தி வெளியாகியுள்ளது. வேலை வாய்ப்பு திறன் குறித்த நிகழ்ச்சி என்பதால் சிலர் முன்கூட்டியே வந்திருக்கலாம். அமைச்சர் 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்தார் என்பது தவறான தகவல்” என தெரிவித்தார்.
 
 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்Rahul Gandhi On Hathras | ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம்..ராகுலின் அதிரடி ACTIONSalem VCK cadre | ”கதையை முடிக்கிறேன் பாரு” மிரட்டும் விசிக நிர்வாகி! பெண் அலுவலருடன் வாக்குவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு: ஆருத்ரா தொடர்பு குறித்து விசாரிக்கவேண்டும் - செல்வபெருந்தகை
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
ஜார்க்கண்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்த ஹேமந்த் சோரன் அரசு!
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
சென்னை மக்கள் கவனத்திற்கு - செல்லப்பிராணி வளர்ப்போர் 3 மாதத்திற்குள் லைசன்ஸ் எடுக்க வேண்டும்
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
Paris Olympics Paris 2024: பாரீஸ் ஒலிம்பிக்..கடந்த முறை பதக்கம் வென்ற எத்தனை வீரர்கள் இந்த முறை களம் இறங்குகிறார்கள்? முழு விவரம்!
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
EPS: சென்னை காவல் ஆணையரை மாற்றியதும் உடனடி ரியாக்‌ஷன் கொடுத்த எடப்பாடி பழனிசாமி! 
Embed widget