மேலும் அறிய

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை - மதுரையில் நடந்த சோகம்

கணவன் - மனைவியிடையே இருந்த  சண்டையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாபம்.

குடிப்பழக்கம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியப்பட்டி பகுதியை சேர்ந்தவரான செந்தில்குமார். பட்டதாரியான இவர் கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துவந்துள்ளார். இந்நிலையில், மதுரை பேரையூரை சேர்ந்த வீர செல்வி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில் மதுரை மாநகர் அனுப்பானடியை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்துவந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி பாபுநகர் 4 ஆவது தெரு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் குமார் சில வருடங்களாக வேலைக்கு செல்லமால் வீட்டிலயே இருந்து வந்துள்ளார். அவ்வப்போது வீர செல்வியின் பணத்தை எடுத்துசென்று மது அருந்துவது, வெளியில் தவறான செயல்களில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் செந்தில்குமார் திடீரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்கில்) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் மனைவியிடம் கூறியுள்ளனர். 

குடும்பத்தினர் தற்கொலை 
 
இதனைத்தொடர்ந்து சில நிமிடங்களிலயே செந்தில்குமாரின் மனைவி வீர லெட்சுமி மற்றும் மகள்களான தனுஸ்ரீ (13 ), மேகா ஸ்ரீ (8) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் மாலையில் இருந்து கதவு திறக்கப்படாத நிலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது மூவரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர்.  பின்னர் மூவரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்த நிலையில் கணவன் -மனைவியிடையே ஏற்பட்ட சிறுசிறு தகராறால் எதுவும் அறியாத 8 மற்றும் 4ஆம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்து பெண் குழந்தைகளும் பெற்றோருடன் பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.  ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் - மனைவி 2 பெண் குழந்தைகளுக்கு என நால்வரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Vs Amit Shah : ’கூட்டணி ஆட்சிக்கு இடையூறு!முதல்வர் வேட்பாளரை மாற்றுவேன்’’அமித்ஷா மிரட்டல்?
பல பெண்களுடன் சுற்றிய ஸ்ரீகாந்த்?டாட்டா காட்டிய மனைவி வந்தனா | Vandhana Srikanth Arrested Issue
வெடிக்கும் போதைப்பொருள் வழக்கு சிக்கும் பிரபல நடிகர், நடிகைகள் கலகத்தில் சினிமா வட்டாரம் Krishna Arrested
போர்க்கொடி தூக்கும் MLA-க்கள்!கலக்கத்தில் சித்தராமையா!அடித்து ஆடும் டி.கே.சிவக்குமார் | DK Shivakumar VS Sitharamaiah
பொதுச்செயலாளர் பதவி பறிப்பு?அப்செட்டில் துரைமுருகன் சமாதானம் செய்யும் ஸ்டாலின் | MK Stalin on Duraimurugan | Udhayanidhi stalin | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
அடுத்தது ஐஐடியா? சென்னை ஐஐடி மாணவியிடல் பாலியல் அத்துமீறல்- முடியைப் பிடித்திழுத்து அட்டகாசம்!
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
காஞ்சிபுரம் மாணவி சாதனை! பொறியியல் தரவரிசையில் முதலிடம்! சாதித்தது எப்படி ?
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி  மீது அமித்ஷா குற்றச்சாட்டு
நாங்க நிதி ஒதுக்கலயா? திமுக அரசு தவறாக சித்தரிக்கிறது - ஆளுங்கட்சி மீது அமித்ஷா குற்றச்சாட்டு
LIVE | Kerala Lottery Result Today (27.06.2025): வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
வெள்ளிக்கிழமை வர்ற லட்சுமிய விட்றாதீங்க... லக் அடிச்சாலும் அடிக்கும்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
முதல்வரைத் துரத்தும் தவெக ரசிகர்கள்; இன்றைய நிகழ்வில் விஜய் படம் காட்டிய மாணவர்!
SJ Suriya into Direction: நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
Mahindra: சுதந்திர தினத்திலிருந்து வேற லெவல்; புதிய தளத்தில் வாகனத்தை களமிறக்கும் மஹிந்திரா - அறிவிப்பு டீசர் வெளியீடு
சுதந்திர தினத்திலிருந்து வேற லெவல்; புதிய தளத்தில் வாகனத்தை களமிறக்கும் மஹிந்திரா - அறிவிப்பு டீசர் வெளியீடு
Embed widget