மேலும் அறிய

திருச்சி சிவா வீடு தாக்குதல் விவகாரம்: காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட 5 பேர்

நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா வீடு  மற்றும் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேர் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டனர்.

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ காலனி பகுதியில் கடந்த 15ஆம் தேதி நவீன இறகுபந்து உள் விளையாட்டு அரங்கத்தை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் திருச்சி சிவா எம்.பி அவர், இல்லத்தை தாண்டி தான் செல்லவேண்டும். இந்நிலையில் நிகழ்ச்சியில் வைக்கபட்ட கல்வெட்டு, பேனர்களில் திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லை என அவருடைய ஆதரவாளர்கள் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியும், வீட்டில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகன மற்றும் நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனை தொடர்ந்து கருப்புக்கொடி காட்டிய 10க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் பிடித்து திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.


திருச்சி சிவா வீடு தாக்குதல் விவகாரம்: காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட  5 பேர்

இதனை தொடர்ந்து  காவல் நிலையத்திற்குள் புகுந்து திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்களை அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் தாக்கினர். இதில் பெண் காவலர் தாக்கபட்டு அருகில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். மேலும் இந்த தாக்குதல் சம்பவம்  குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்கள் வைரலாக பரவியது. இதனையடுத்து தாக்குதலில் நடத்திய அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் 5 பேரை காவல்துறையினர் கைது செய்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.


திருச்சி சிவா வீடு தாக்குதல் விவகாரம்: காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட  5 பேர்

இதனைத்தொடர்ந்து 5 பேருக்கும் நீதிமன்றம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்பட 5 பேரும் மறு உத்தரவு வரும் வரை மதுரை மாவட்டம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி  உத்தரவிட்ட நிலையில், இன்று மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஐந்து பேரும் கையெழுத்திட்டனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட 5 பேருடன் மதுரை திமுகவினரும் காவல்நிலையத்திற்கு வந்திருந்தனர். தொடர்ந்து காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு புறப்பட்டு சென்றனர்.


 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | கேள்வி கேட்டா அசிங்க படுத்துவீங்களா? நான்வருவேன் அப்போ தெரியும்! நாள் குறித்த ராகுல்!Thrissur ATM Robbery | GUNSHOT.. CHASING.. ஹரியானா கொள்ளையர்கள் சிக்கியது எப்படி? Namakkal ContainerThiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
ரூ.9 ஆயிரம் கோடியில் டாடா கார் ஆலை; 5 ஆயிரம் பேருக்கு வேலை- அடிக்கல் நாட்டிய முதல்வர்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
Breaking News LIVE 28th Sep 2024: கூகுள் மேப்பை பயன்படுத்தி ஏடிஎம் தேர்வு செய்த மேவாட் கொள்ளையர்கள்: வெளியான தகவல்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
2000 போலீஸ் பாதுகாப்பு; 30,000 பேர் பங்கேற்பு - களைகட்டப்போகும் திமுக பவள விழா பொதுக்கூட்டம்
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
ஒடிசாவில் வெடித்த மதக்கலவரம்.. பேஸ்புக் பதிவால் வந்த வினை.. தொடரும் பதற்றம்!
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால்  வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
பூர்வீக சொத்தில் பங்கு தராத ஆத்திரம்: மாமியாரை அரிவாளால் வெட்டி கொன்ற மருமகனுக்கு ஆயுள் தண்டனை
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
October Launch Cars: அக்டோபரில் வெளியாக உள்ள புதிய கார்கள், எஸ்யுவிக்கள்..! லிஸ்ட் இதோ, உங்க சாய்ஸ் எது?
Fire cracker Accident: சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
சாத்தூர் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து - ஆட்கள் சிக்கியுள்ளனரா?
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Hosur Fire Accident: ஓசூரில் டாடா செல்போன் உற்பத்தி ஆலையில் பயங்கர தீ விபத்து - பதறி ஓடிய தொழிலாளர்கள்
Embed widget