மேலும் அறிய

தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே புதிய ரயில்: மத்திய அமைச்சகம் அதிரடி அறிவிப்பு: எப்போது?

Tambaram - Rameswaram New Train: தாம்பரத்திலிருந்து திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்ல புதிய ரயில் சேவை தொடங்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

Tambaram - Rameswaram Train: தாம்பரத்திலிருந்து சிதம்பரம், திருவாரூர் வழியாக ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவையானது தொடங்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழ்நாடு மாநில பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த ரயில் சேவையானது, பாம்பன் புதிய பாலத்தை பிரதமர் தொடங்கி வைக்கப்படும் நாளில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம்-தாம்பரம் புதிய ரயில்:

ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் இடையிலான புதிய ரயில் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளதாவது “ நமது  ரயில்வே அமைச்சர்  ரயில்வே அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவை, நமது இணை அமைச்சர் எல்.முருகனுடன் சேர்ந்து சந்தித்தேன். அவரை, இன்று   சந்தித்து கூட்டு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறோம். 

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜகவினரும், மாவட்ட அளவிலான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மக்கள் அளித்த கருத்துகள் மற்றும் இது தொடர்பாக அளித்த பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், நமது  ரயில்வே அமைச்சர் தாம்பரத்திலிருந்து சிதம்பரம், திருவாரூர் மற்றும் திருத்துரைப்பூண்டி வழியாக ராமேஸ்வரத்திற்கு ஒரு புதிய ரயிலுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்த புதிய ரயில்  சேவையானது வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பயணத்தை தொடங்கும்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை:

பிரதமர் மோடி, இந்தியாவின் புதிய முதல் செங்குத்து லிப்ட் பாம்பன் பாலத்தின் திறப்பு விழாவுடன் இணைந்து, தாம்பரம்-ராமேஸ்வரம் புதிய ரயிலானது,  தனது பயணத்தைத் தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் இடையே இந்தியாவின் முதல் கடலுக்கு மேல் அமைந்த ரயில் பாலமான பாம்பன் பாலம் 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்நிலையில், காலப்போக்கில் பழைய பாலம் பயன்பாடுக்கு தகுதியற்றதாக மாறியதால், இந்திய அரசு புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. பாம்பன் புதிய ரயில் பாலமானது,  மண்டபம் நகரத்தையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. புதிய பாலத்தின் திறப்பு விழாவானது, கடந்த பிப்ரவரி மாதமே திறக்க திட்டமிடப்பட்டது. எனினும், சில பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களா திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, புதிய பாம்பன் பாலத்தின் சில பிரச்னைகள் அனைத்து சரி செய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில், புதிய செங்குத்து பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இந்த நாளில், ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில் சேவையானது தொடங்கப்படுகிறது.

புதிய ரயில் எந்த பாதையில் பயணிக்கும்

தற்போது, சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு இரண்டு ரயில்கள் பயணிக்கின்றன. ராமேஸ்வரம் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ( RMM SF Express - Train No.22661 ) மற்றும் எம்.எஸ் ஆர்.எம்.எம் எக்ஸ்பிரஸ் ( Train No. 16751 ) ஆகிய இரண்டு ரயில்களும், எக்மோரிலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் சென்றடைகிறது.  இந்த இரண்டு ரயில்களும், வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும் திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி வழியாக பயணிக்கவில்லை. இதனால், இப்பாதைகளின் வழியாக பயணிக்க வேண்டும் என மக்கள கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், இந்த புதிய ரயிலானது தாம்பரத்தில் புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை சந்திப்பு மற்றும் ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: டிட்வா புயல் வேகம் அதிகரிப்பு, தேர்தல் ஆணையர் அட்வைஸ், விடுமுறை - 11 மணி வரை இன்று
Embed widget