பள்ளப்பட்டியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை; 5000 பேர் பங்கேற்பு..வாழ்த்துகளை பகிர்ந்த இஸ்லாமியர்கள்
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நகர ஐக்கிய ஜமாத் சார்பில் ஈத்கா திடல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

பள்ளப்பட்டியில் நகர ஐக்கிய ஜமாத் சார்பில் நடைபெற்ற ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் 5000க்கும் மேற்பட்ட ஆண்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
ஆண்டு தோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நகர ஐக்கிய ஜமாத் சார்பில் ஈத்கா திடல் மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் 5000-க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து கைகொடுத்தும், ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டி சார்பில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருமாநிலையூரில் உள்ள தனியார் திடல் ஒன்றில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பறிமாறிக் கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

