TAHDCO: பொறியியல் பட்டதாரிகளே.. தமிழ்நாடு முழுவதும் இலவச தொழில்நுட்பப் பயிற்சி- தனியார் நிறுவனங்களில் வேலை!
இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship) வழங்கப்படவுள்ளது.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளநிலைப் பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship) வழங்கப்பட உள்ளது என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
புத்தாக்க பொறியாளர் பயிற்சி
தாட்கோ நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் இளநிலை பொறியியல் பட்டயப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship) வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியானது கணினி பொறியியல் நிபுணத்துவம் (System Engineering) புதுமைத் திறன்களை வழங்குதல் மேலும் மின்னணு வடிவமைப்பு (Electronics System Design) மற்றும் உற்பத்தித் துறை (Manufacturing), தானியங்கி தொழில்துறை (Industrial Automation) இயந்திரவியல் (Robotics) மற்றும் சேர்க்கை உற்பத்தி (Additive Manufacturing) போன்ற முக்கிய துறைகளில் பயிற்சி பெற அறிவுத் திறன்களை உள்ளடக்கிய பயிற்சி வழங்கி அதி நவீன தொழில் நுட்ப ஸ்டார்ட் அப் (Technology Startup) நிறுவனங்களில் நிபுணராக உருவாக்குவதற்கான பாதையை வழிவகுப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும்.
தாட்கோ மூலம் கடந்த ஆண்டு பயிற்சி பெற்ற 28 இளைஞர்கள் Thermofisher Scientific, Ashok Leyland, G Care India, TCS போன்ற தனியார் முன்னனி நிறுவனங்களில் Mechanical- R&D, Graduate Engineer Trainee wmmitb R & D Business Development Guneétm பதவிகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
என்ன தகுதி?
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் இப்பயிற்சியினை பெற 2022, 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டில் ஏதேனும் ஒரு இளநிலைப் பொறியியல் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- 21 முதல் 25 வயது வரையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இப்பயிற்சியினை பெற தகுதியுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். பயிற்சிக்கான கால அளவு 18 வாரம் ஆகும். இப்பயிற்சியானது கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தங்கும் வசதியுடன் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பயிற்சியனை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் (Technology Startups), மின்னனு உற்பத்தி நிறுவனம் (Electronic Manufacturing Company), Mobility and Automotive Company ஆகிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று மாதம் குறைந்தபட்சமாக ரூ.20,000/- ஊதியமாகப் பெறலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ ஏற்கும்’’.
இவ்வாறு சென்னை ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.






















