மேலும் அறிய

Supreme Court: "இந்த நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம்…" இந்தியில் பேசிய மனுதாரரிடம் கூறிய உச்ச நீதிமன்றம்!

"நாங்கள் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகளை படித்தோம். இது மிகவும் சிக்கலான விஷயம், ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று நீதிபதி ஜோசப் சர்மாவிடம் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இந்தியில் வழக்கை வாதிட்ட மனுதாரரிடம், இந்த நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம் என்று நீதிமன்றம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்ற அலுவல் மொழி

உச்சநீதிமன்றத்தின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். ஆங்கிலத்திலேயே அங்குள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் பேசிக்கொள்வார்கள். நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் அவர்கள் பேசுவது பதிவாகும். எனவே அங்கு ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் அலுவல் மொழி கிடையாது. பல நீதிமன்றங்களில் தனக்கான நீதியை கேட்டு அலைந்து எங்கும் கிடைக்காததால் மேல்முறையீடு செய்து உச்ச நீதிமன்றம் வந்துள்ளார் ஒரு முதியவர்.

பெரிதாக படிக்காத அவர் ஆங்கிலம் தெரியாததாலும், ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்று தெரியாததாலும், இந்தியில் பேசியுள்ளார். அங்கிருந்த நீதிபதிகளுக்கு இந்தி தெரியாததால் அவர் பேசுவதை புரிந்து கொள்ள முடியாமல் இருந்துள்ளனர். நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மனுதாரர் சங்கர் லால் ஷர்மா என்ற முதியவருக்கு, நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், அவருக்கு சட்ட உதவி ஆலோசனை வழங்கினர். அவரது வழக்கு அழைக்கப்பட்டவுடன், சர்மா இந்தியில் வாதிடத் தொடங்கியதால் நீதிபதிகள் குழப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை

அவரது வழக்கு உச்ச நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களுக்குச் சென்றது, ஆனால் தனக்கு எங்கும் நிவாரணம் கிடைக்கவில்லை என்று கூறினார். "நாங்கள் வழக்கு சம்மந்தப்பட்ட கோப்புகளை படித்தோம். இது மிகவும் சிக்கலான விஷயம், ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று நீதிபதி ஜோசப் சர்மாவிடம் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: BCCI: இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு கூண்டோடு நீக்கம் - பி.சி.சி.ஐ. அதிரடி...! என்ன காரணம்..?

நீதிமன்ற மொழி ஆங்கிலம்

"இந்த நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலம். நீங்கள் விரும்பினால், உங்கள் வழக்கை வாதாடும் ஒரு வழக்கறிஞரை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்" என்று நீதிபதி கூறினார். மற்றொரு நீதிமன்றத்தில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மாதவி திவான், சர்மாவின் உதவிக்கு விரைந்து வந்து பெஞ்ச் சொல்வதை அவருக்கு மொழிபெயர்த்தார்.

Supreme Court:

சட்ட உதவி வழக்கறிஞர்

சர்மாவுடன் பேசிய பிறகு, மாதவி திவான், மனுதாரர் தனது வழக்கை வாதிடக்கூடிய ஒரு சட்ட உதவி வழக்கறிஞர் வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராக இருப்பதாக கூறினார். சர்மாவுக்குப் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு வழக்கறிஞரிடம், அவர் மனுதாரருக்கு உதவ முடியுமா? என்று பெஞ்ச் கேட்டது. அதற்கு அவர் ஒப்புக்கொண்ட பிறகு, பெஞ்ச் வழக்கறிஞரிடம், "இதனை நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்று நம்புகிறோம்," என்றனர். அதற்கு வழக்கறிஞரும் உத்தரவாதம் அளித்தார். வழக்கை டிசம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த பெஞ்ச், வழக்கை விசாரிக்குமாறு வழக்கறிஞரைக் கேட்டுக் கொண்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget