TVK Protest: அழைப்பு விடுத்த விஜய்... ஓடி வந்த தொண்டர்கள்... தவெகவின் முதல் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் வக்ஃபு மசோதா திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களுக்கு சொந்தமான வக்ஃபு நிலங்களை அரசு கையகப்படுத்தும் வக்ஃபு சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வக்ஃபு சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்களும் வக்ஃபு மசோதா சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் வக்ஃபு மசோதா சட்டதிருத்தத்தை திரும்ப பெறகோரி தமிழக முழுக்க இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று சேலம் மாநகர் கோட்டை மைதானத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் தலைமையில் கட்சித் தொண்டர்கள், இஸ்லாமிய பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வக்ஃபு மசோதா திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். மேலும் இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் வக்ஃபு மசோதா சட்ட திருத்தம் கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன், வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வக்ஃபு சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறவிட்டால் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தவெக தயாராக உள்ளது என்றார். மேலும், இந்தக் கூட்டம் காசு கொடுத்து வந்த கூட்டம் அல்ல. தவெக தொண்டர்கள் தானாக முன்வந்து முதல் ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளனர். தவெகவினர் பேசத் தெரியவில்லை என கூறுகிறார்கள். தலைவர், பொதுச் செயலாளர் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அனைவரும் அமைதியாக இருக்கிறோம் என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

