மேலும் அறிய

Gandhi Jayanti 2023: "தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதே பெரிய அவமானம்" - தவிர்க்க முடியாத மகாத்மாவின் பொன்மொழிகள்

Gandhi Jayanti 2023: மகாத்மா காந்தியின் 154 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்தியாவின் தேச தந்தை என்று போற்றப்படும் மகாத்மாக காந்தியின் பிறந்த நாள் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்படும். வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படுபவரின் சிந்தனைகள், அவர் வாழ்வியல் அனுபவங்கள், எளிமையான வாழ்வியல் முறை இன்றளவும் நல்ல பாடமாக உள்ளது.  

காந்தி முதல் மாகாத்மா வரை 

  • மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி குஜராத் பகுதியின் போர்பந்தரில் அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார். 
  • காந்தி அவரது 20-வது வயதில் பகவத்கீதை வாசித்தார். அவரின் மனதை ஈர்த்த புத்தகங்களில் முதன்மையானது பகவத்கீதை. 
  • அகிம்சை, எளிமையான வாழ்க்கை, ஒழுக்கம், நேர்மை ஆகிய நல் அறங்கள் காந்தியின் சிறுவயதில் இருந்தே தீவிரமாக கடைப்பிடித்து வந்திருக்கிறார். 
  • 1893-ல் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்பட்ட காந்தி, ரயில் பயணத்தில் நிறம் காரணமாக அவனமானப்படுத்தப்பட்டார். பிறகு, தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடினார். 
  • நாட்டில் விவசாயிகள் நலன், அநீதிக்கு எதிராக பல அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார்.
  • குஜராத்தி மொழியில் ‘நவஜீவன்’ ஆங்கில மொழியில் ‘யங் இந்தியா’ ஆகிய பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 
  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா சுதந்திரம் அடைய அகிம்சை வழியில் பல்வேறு போராட்டங்களை நடத்தியது அந்தக் காலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 
  • வழக்கறிஞராக தன் வாழ்வை தொடங்கியவர் நாட்டு மக்களின் துன்பங்கள், அவர்களுக்கு நடக்கும்  அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து தன் வாழ்க்கையை மக்களின் நலனுக்கான, உரிமைக்கான போராட்டங்களுக்கு அர்ப்பணித்தார். 
  • கோபல கிருஷ்ண கோகலே காந்தியின் அரசியல் ஆசானாக கருதப்படுகிறார். 
  • நாட்டின் சுதந்திரத்திற்கும், மக்களின் நலவாழ்வுக்கும் காந்தியின் அயராத பங்களிப்பினைப் போற்றும்விதமாக அவருக்கு ‘மகாத்மா’ என்ற பட்டத்தை ரவீந்திரநாத் தாகூர் வழங்கினார்.
  • சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ் மகாத்மா காந்தியை ‘ தேசத் தந்தை’ என சுட்டி அழைத்தார். 
  • காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடித்தங்களில் அவரை ‘ அன்பு நண்பருக்கு...’ என்று குறிப்பிட்டு அழைத்தார். 
  • காந்தி தன் வாழ்நாளில் 40 ஆண்டுகளாக நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 18 கி.மீ. தூரம் நடந்தார்.
  • 2007-ம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, காந்தியின் பிறந்தநாளை 'அகிம்சைக்கான சர்வதேச தினம்' என அறிவித்தது.

 மாகாத்மா காந்தி பொன்மொழிகள்

  • நேரான பாதையிலிருந்து விலகியவன் ஒருபோதும் தன் இலக்கை அடையமாட்டான். 
  • எல்லா நீதிமன்றங்களையும் விட மேலானது மனசாட்சி!
  • ஒரு நாட்டின் கலாச்சாரம் அங்கு வாழும் மக்களின் மனங்களில் இருக்கிறது. 
  • ஏதோ ஒன்றை அடைவதில் திருப்தி இல்லை; அதற்கான முயற்சிகளே ஒருவரை திருப்தியடையச் செய்யும். ஒரு செயலின் வெற்றி அதற்கான முயற்சிகளிலேயே உள்ளது. 
  • தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பதே பெரிய அவமானம்.
  • இந்த உலகில் நீ மாற்றத்தை காண வேண்டுமானால், உன்னிலிருந்து தொடங்கு!
  • மற்றவர்களை கெட்டவர்கள் என்று செல்வதன் மூலம் நான் நல்லவர்களாகிவிட முடியாது. 
  • துக்கமும் தூக்கமும் எப்போது குறையுமோ அப்போது அவன் மேதையாகிறான். 
  • பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அதுபோலவே நீ மாறு..
  • குறிக்கோளை அடையும் முயற்சிதான் மகத்துவமானது அந்த குறிக்கோளை அடைவதில் இல்லை..
  • பொறுமையும் விடாமுயற்சியுடனும் சிரமங்களை வென்றுவிடலாம். 
  • என் வாழ்க்கை என் அறிவுரை

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget