பள்ளி மாணவர்களே.. காலாண்டு, அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு - லீவு எப்போது?
தமிழ்நாட்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டுத் தேர்வுக்கு முன்பு அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக காலாண்டு, அரையாண்டுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில், நடப்பு கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
காலாண்டுத் தேர்வு எப்போது?
அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதியான வியாழக்கிழமை ( 18.09.2025) காலாண்டுத் தேர்வுகள் தொடங்குகிறது. அன்று தொடங்கும் காலாண்டுத் தேர்வு அடுத்த ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. செப்டம்பர் மாதம் 26ம் தேதி காலாண்டுத் தேர்வு முடிகிறது.

இதையடுத்து, காலாண்டுத் தேர்வுக்கான விடுமுறை செப்டம்பர் மாதம் 27ம் தேதியான சனிக்கிழமை தொடங்குகிறது. பின்னர், வழக்கம்போல ஒரு வாரத்திற்கு விடுமுறை அளிக்கப்படும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆலோசனையின்படி, கடந்தாண்டு போலவே 2025-2026ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும்.
— Anbil Mahesh (@Anbil_Mahesh) July 29, 2025
இத்துடன் பள்ளிக் கல்வித்துறையின்(2025-2026) நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள காலாண்டு/அரையாண்டுத்… pic.twitter.com/9D0uV89OGk
அரையாண்டுத் தேர்வு எப்போது?
இதையடுத்து, 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் மாதம் 15ம் தேதியான திங்கள் கிழமை ( 15.12.2025) தொடங்குகிறது. இந்த தேர்வுகள் ஒரு வார காலத்திற்கு நடக்கிறது. பின்னர், அதே டிசம்பர் மாதம் 23ம் தேதி அரையாண்டுத் தேர்வுகள் முடிகிறது.
பின்னர், டிசம்பர் மாதம் 24ம் தேதி அரையாண்டுத் தேர்வுக்கான விடுமுறை தொடங்குகிறது. அவ்வாறு தொடங்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை புத்தாண்டு வரை நீடிக்கும்.
பொதுத்தேர்வு எப்போது?

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தொடங்கும் மற்றும் முடியும் தேதிகளை தமிழ்நாடு அரசு இன்று அறிவித்துள்ளது. தற்போது பள்ளிகளில் பருவத் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், விரைவில் மாணவர்களின் காலாண்டுத் தேர்வுக்கான முழு அட்டவணையும் வெளியாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையும் அதற்கான பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும், அமைச்சர் அன்பில் மகேஷ் நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார். மாணவர்கள் மகிழ்ச்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






















