TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே.. மிஸ் பண்ணிடாதீங்க.. குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்!
TNPSC Group 2 Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21-07-2025 முதல் துவங்கப் பெற்று நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த அனைத்துவகை மாற்றுத் திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2, 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் கூறி உள்ளதாவது:
சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் அனைத்து வகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 21-07-2025 முதல் துவங்கப் பெற்று நடைபெற்று வருகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சாந்தோம் நெடுஞ்சாலை, மைலாப்பூர், சென்னையில் உள்ள CSI காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 13 கடைசி
இத்தேர்விற்கான கல்வித் தகுதி பட்டப்படிப்பு ஆகும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.08.2025 ஆகும். சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த அனைத்துவகை மாற்றுத்திறனாளி மாணவ மாணவியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இணைய வழியில் தேர்வுக்கு விண்ணப்பித்த, விண்ணப்பப் படிவ நகலுடன் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு உள்ள புகைப்படத்துடன் இந்தக் கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: https://chennai.nic.in/






















