மேலும் அறிய

ராணிப்பேட்டையில் கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் உயிரிழப்பு

’’மாமனார் மணி கிணற்றில் விழுந்ததை பார்த்த மருமகன் சுபாஷ், அவரை காப்பாற்ற உடனே அவரும் கிணற்றில் இறங்கியுள்ளார்’’

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம், கரிவேடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மணி. இவர் அதே பகுதியை சேர்ந்த சிவா என்பவரின் விவசாய நிலத்தை 6 ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை தனது மூத்த மருமகனுடன் நிலத்திற்குச் சென்றுள்ளார். விவசாயி மணிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் முதல் மகள் நிர்மலா அவருடைய கணவர் அதே பகுதியை சேர்ந்த சுபாஷ், இவர் சென்னை ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
 

ராணிப்பேட்டையில் கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் உயிரிழப்பு
 
கடந்த போகம் அறுவடை செய்த நிலையில் தற்போது பெய்து வரும்  தொடர் மழையால் மீண்டும் விவசாயம் செய்ய நிலத்த்தை சீர் செய்ய மணி தனது மருகன் சுபாஷுடன் நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் இருந்து தண்ணீர் போட மின்மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது நீர் குறைவாக வருவந்துள்ளது. நீர்மூழ்கி மோட்டார் என்பதால் மோட்டாரில் சேறு சிக்கி இருக்கலாம் என்று எண்ணிய மணி முதலில் கயிற்றைக் கட்டி கிணற்றின் உள்ளே இறங்கி உள்ளார். 12 ஆழமும் 6 அடி அகலம் கொண்ட உரை கிணற்றில் முதலில் இறங்கிய மணி திடீரென தவறி உள்ளே விழுந்துள்ளார். மாமனார் கிணற்றில் விழுந்ததை பார்த்த மருமகன் சுபாஷ், அவரை காப்பாற்ற உடனே அவரும் கிணற்றில் இறங்கியுள்ளார்.
 
இந்நிலையில் நிலத்திற்கு சென்ற தந்தையும், கணவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சுபாஷின் மனைவி நிர்மலா நிலத்துக்கு சென்று பார்த்தபோது இருவரின் உடைகள் கிணற்றுக்கு மேலே இருந்ததை கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த அவலூர் காவல் துறையினர் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் இருவரும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆய்வு செய்த போது இருவரும் கிணற்றில் சடலம் இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பாதலகொலுசு உதவியுடன் இருவரின் சடலங்களையும் கிணற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கா வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

ராணிப்பேட்டையில் கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருமகன் உயிரிழப்பு
 
விவசாயம் செய்யச் சென்ற விவசாயி மணி மற்றும் மருமகன் சுபாஷ் ஆகிய இருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டது குறித்து சுபாஷின் மனைவி நிர்மலா அளித்த புகாரின் அடிப்படையில் அவலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் கிணற்றில் விஷவாயு தாக்கி மாமனார், மருகன் என இருவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. விவசாய கிணற்றில் மாமனார், மருகன் என இருவரும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் காவேரிப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi Vs Lakshmanan : ’அமைச்சர் MRK-க்கு தடை – லஷ்மணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..! திமுகவில் பரபரப்பு
’அமைச்சர் MRK-க்கு தடை – லட்சுமணனுக்கு எதிராக சதி’ பொன்முடி செய்யும் உள்ளடி வேலை..!
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
தமிழ் சினிமாவில் இருந்து முதல் குரல்; அஜித் லாக்கப் கொலை- மவுனம் கலைக்குமா திரையுலகம்?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
ரகசியமாக வைக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் வருகைக்கு பின்னணி என்ன?
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
தோண்டத் தோண்ட கிளம்பும் பூதம்; பணியிடத்திலும் வம்பு செய்த நிகிதா- எதிர்ப்பு தெரிவித்த மாணவிகள்!
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
சினிமாவில் நடிப்பதால் மட்டும் சூப்பர் ஹீரோ கிடையாது - நடிகை குஷ்பூ
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
Parandhu Po Twitter Review: பறந்து போ குழந்தைகளுக்கான  படமா?.. கலகல காமெடி படமா?.. ராம் சார் கலக்கிட்டாரு
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
3 BHK Twitter Review: கஷ்டப்பட்டு வீடு வாங்கி இருக்கீங்களா?.. சித்தாவுக்கு 3 BHK எப்படி இருக்கு?.. எமோஷனல் ஆன ரசிகர்கள்
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Manual Vs Automatic Car: மேனுவலா? ஆட்டோமேடிக்கா? அதிக செலவு வெக்காத கார் எது? பராமரிப்பு எதில் ஈசி? ஏன்?
Embed widget