7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளை அதிகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் முடிவடையும் போது 25 மாநகராட்சிகள், 146 நகராட்சிகள், 491 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு அண்மையில் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தான் 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன.
இதற்கான அறிவிப்புகள் ஏற்கெனவே சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.

