மேலும் அறிய

திருவண்ணாமலை சாமியார்கள் போர்வையில் ஆசாமிகளா? பக்தர்கள் அதிர்ச்சி

திருவண்ணாமலையில் சாமியார்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பின்னணி உள்ளதா? என சரிபார்க்கப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னித்தளமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலாகும். கோவிலின் பின்புறம் திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் பல்வேறு ஆசிரமங்களில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் நிரந்தரமாக தங்கியுள்ளனர். அதோடு, பௌர்ணமி கிரிவல நாட்களில் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சாமியார்கள் இங்கு வருகின்றனர்.

அதில், பெரும்பாலானோர் தொடர்ந்து இங்கேயே தங்கிவிடுகின்றனர். பல்வேறு ஆன்மிக அமைப்புகள், ஆசிரமங்கள், தன்னார்வலர்கள் மூலம் சாமியார்களுக்கு தேவையான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. எனவே, சாமியார்களுக்கு உகந்த இடமாக திருவண்ணாமலை மாறியிருக்கிறது.

சாமியார்கள் போர்வையில் ஆசாமிகளா?

இந்நிலையில், ஆன்மிக நோக்கத்துடன் இங்கு தங்கியுள்ள சாமியார்களுக்கு மத்தியில், குற்றப்பின்னணி உள்ள சிலரும் ஊடுருவி உள்ளனர். சாமியார்கள் தோற்றத்தில் இருப்பது தங்களுக்கு பாதுகாப்பானது என கருதுகின்றனர். அதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகி, கிரிவல பக்தர்களிடம் ரகளையில் ஈடுபடும் சாமியார்கள் சிலர் உள்ளனர்.

 


திருவண்ணாமலை சாமியார்கள் போர்வையில் ஆசாமிகளா? பக்தர்கள் அதிர்ச்சி

 

எனவே, சாமியார்களின் விபரங்களையும், கைரேகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி தொடர்ந்து காவல்துறையினர் கண்காணிக்கின்றனர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பௌவுர்ணமிக்காக முகாமிட்ட சாமியார்களின் விபரங்களை கடந்த இரண்டு நாட்களாக சரி பார்த்து விசாரிக்கும் பணியில் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் ஆய்வாளர் ஆனந்தன், துணை ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

சாமியார்களின் அடையாள ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, எதற்காக இங்கு தங்கியுள்ளனர், எத்தனை காலமாக உள்ளனர் போன்ற விபரங்கள் கேட்கப்பட்டன. அதோடு, சாமியார்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பின்னணி உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

 

திருவண்ணாமலை சாமியார்கள் போர்வையில் ஆசாமிகளா? பக்தர்கள் அதிர்ச்சி

 

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினர் உயர் அதிகாரி கூறியதாவது;

பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில், லட்சக்கணக்கான மக்கள் வருகின்றனர். அவர்களோடு, புதிது புதிதாக சாமியார்களும் வந்து, நிரந்தரமாக தங்கி விடுகின்றனர். அவர்களில் கிரிமினல் சாமியார்கள், போலி சாமியார்களும் உள்ளனர். இதனால், பொது மக்கள் பாதுகாப்பில் குறைபாடு ஏற்படுகிறது. போலி சாமியார்களால், சட்டம் ஒழுங்கு பிரச்னையும் ஏற்படுகிறது.

திருவண்ணாமலையில் ஆசிரமங்கள், அன்னதான கூடங்கள், அங்கு தங்கியிருப்போர், வேலைக்கு வந்திருப்போர் என, அனைவரையும் போல, சாமியார்களும் கண்காணிக்கப்படுகின்றனர். அவர்கள் குறித்த விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அவ்வப்போது சரி பார்க்கப்படுகின்றன. பதிவு செய்து தங்கி இருக்கும் சாமியார்களுக்கு, அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. புதிதாக யார் வந்துள்ளனர் என்பது குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. குற்றப்பின்னணி உடையோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் வாயிலாக, குற்றங்கள் நடக்காமல் தடுக்கவும் சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
ABP Premium

வீடியோ

ஏறும் தங்கம்.. எகிறும் பயம் ”இது நடந்தா விலை குறையும்?” நிபுணர்களின் அதிரடி கணிப்பு | Gold Rate Hike
பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
10 லட்சம் தொண்டர்கள்.. திருச்சியில் திமுக பிரம்மாண்ட மாநாடு - எப்போது தெரியுமா?
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
ஆளுநருக்கு ஏதாவது குறை வைத்தோமா ? சபாநாயகர் அப்பாவு கேள்வி
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
திமுக-வா? தவெக-வா? ராகுல் காந்திக்கு ப.சிதம்பரம் தந்த அட்வைஸ் இதுதான்!
Vengaram: மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
மதுரையில் உயிர்பலி வாங்கிய ‘வெங்காரம்‘ என்பது என்ன.? இதை சாப்பிட்டால் மரணம் தானா.?
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
Citroen Basalt Vs Kia Sonet: சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
சிட்ரோன் பசால்ட்-ஆ அல்லது கியா சோனெட்-ஆ.? அம்சங்கள் அடிப்படையில் எந்த SUV சிறந்தது தெரியுமா.?
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
NDA TN Campaign: அதிமுக கூட்டணி அதிரடி! மதுராந்தகத்தில் 2 லட்சம் பேர்! மோடி வருகை: பரபரப்பான ஏற்பாடுகள்!
Realme P4 Power: இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
இது போனா இல்ல பவர்பேங்க்கா.?! முரட்டு பேட்டரியுடன் வரும் ரியல்மியின் P4 பவர் 5ஜி; வெளியீடு எப்போ.?
Embed widget