மேலும் அறிய

Scholarship: அம்மாடியோவ்.. மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை; என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?

முழுநேர முனைவர்‌ பட்டப்படிப்பு மேற்கொள்ளும்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்த ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இன மாணாக்கர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்‌.

முழுநேர முனைவர்‌ பட்டப்‌ படிப்பு மேற்கொள்ளும்‌ ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இன மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.1,00,000,- வீதம்‌ 2000 மாணாக்கர்களுக்கு வழங்கப்படும்‌ என அரசு ஆணையிட்டுள்ளது.

2024- 2025ஆம்‌ கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இனத்தைச்‌ சார்ந்த முழுநேர முனைவர்‌ பட்டப்படிப்பு (பிஎச்டி) பயிலும்‌ மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

என்னென்ன விதிகள்?

1) தமிழ்நாட்டில்‌ உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்‌ முழுநேர முனைவர்‌ பட்டப்படிப்பு மேற்கொள்ளும்‌ தமிழ்நாட்டைச்‌ சார்ந்த ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம்‌ மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ இன மாணாக்கர்கள்‌ மட்டும்‌ விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்‌. பகுதி நேர ஆராய்ச்சி மாணவர்கள்‌ பயன்‌ பெற இயலாது.

2) இத்திட்டத்தின்கீழ்‌ பயனடைய நிர்ணயிக்கப்பட்டுள்ள சூடும்ப ஆண்டு வருமான வரம்பான ரூ.8.00 இலட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌.

3) வயது வரம்பு

ஆண்களுக்கு 50 மிகாமலும்‌ மற்றும்‌ பெண்களுக்கு 55 மிகாமலும்‌ இருக்க வேண்டும்‌.

4) முனைவர்‌ ஆராய்ச்சி பட்டப்படிப்பு மேற்கொள்ளும்‌ மாணாக்கருக்கு பல்கலைக்‌கழகத்தால்‌ அனுமதிக்கப்பட்ட படிப்புப்பிரிவு கால அளவிற்குள்‌ அல்லது அதிகப்பட்சமாக ஐந்தாண்டுகளுக்கு மட்டும்‌ (Prescribed Duration of Course) ஊக்கத்‌ தொகை வழங்கப்படும்‌.

5) புதுப்பித்தல்‌ மாணாக்கர்‌ (Renewal students) தங்கள்‌ ஆராய்ச்சி திருப்திகரமாக தொடர்வ்தற்கான உறுதி சான்றிதழை ஒவ்வொரு வருடமும்‌ சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக பதிவாளரிடம்‌, அலுவலரிடம்‌ பெற்று, விண்ணப்பத்துடன்‌ இணைத்து அனுப்பப்பட வேண்டும்‌.

6) பல்கலைக்‌ கழகம்‌ / கல்லூரிகளில்‌ ஊக்கத்தொகை / ஊதியத்துடன்‌ கூடிய படிப்பினை மேற்கொள்ளும்‌ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது.

7) கல்வி நிறுவனங்கள்‌ மற்றும்‌ அரசு நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ அரசு ஊழியர்கள்‌ (ஊதியமில்லா விடுப்பில்‌ இருந்தாலும்‌ கூட) ஊக்கத்தொகை பெற தகுதியற்றவராவர்‌.

மாணவர்களுக்கு எச்சரிக்கை

8) தவறான தகவல்களுடன்‌ விண்ணப்பித்து கல்வி ஊக்கத்தொகை பெற்ற மாணாக்கர்கள்‌ இத்திட்டத்தின்‌ கீழ்‌ நீக்கப்படுவர்‌. மேலும்‌ அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி ஊக்கத்தொகையை அரசுக்கு திரும்ப செலுத்த வேண்டும்‌.

9) மாணவரின்‌ ஆராய்ச்சி திருப்திகரமாக இல்லை என தெரிய வந்தால்‌, அம்மாணாக்கருக்கு கல்வி ஊக்கத் தொகை நிறுத்தப்படும்‌.

10) விண்ணப்ப படிவத்தில்‌ எவ்வித விவரமும்‌ விடுபடாமல்‌, முழுமையாக பூர்த்தி செய்து இவ்வலுவலகத்திற்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ 31.01.2025 அன்று மாலை 5.45 மணி.

11) 2024- 2025 ஆம்‌ ஆண்டு கல்வி ஊக்கத்‌ தொகை பெற மாணாக்கர்கள்‌ தற்போது வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்‌. முந்தைய ஆண்டு விண்ணப்பங்கள்‌ மூலம்‌ கல்வி ஊக்கத்‌ தொகை பெற மாணாக்கர்கள்‌விண்ணப்பித்திருப்பின்‌ கல்வி ஊக்கத்‌ தொகை வழங்கப்பட மாட்டாது. விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

12) கல்வி நிறுவன முதல்வரது கையொப்பம்‌ மற்றும்‌ பல்கலைக்கழக பதிவாளரின்‌ பரிந்துரையுடன்‌ விண்ணப்பம்‌ வரப்பெற வேண்டும்‌. தவறும்‌ பட்சத்தில்‌ விண்ணப்பம்‌ நிராகரிக்கப்படும்‌.

13) பயனாளிகள்‌ முனைவர்‌ ஆராய்ச்சி முடிக்கும்‌பொழுது அதற்கான அறிக்கையினை அரசுக்கு அனுப்பிட வேண்டும்‌.

14) 31.01.2025-க்கு பிறகும்‌, விளம்பரம்‌ வெளியிடுவதற்கு முன்னரும் பெற்ற விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு ஏற்றுக்‌ கொள்ளப்பட மாட்டாது.

அதேபோல ஆதிதிராவிடர்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர்‌ மாணாக்கர்கள்‌ எனில்‌ விண்ணப்பங்கள்‌ அனுப்ப வேண்டிய முகவரி, இயக்குநர்‌, ஆதிதிராவிடர்‌ நலத இயக்குநரகம்‌, எழிலகம்‌, சேப்பாக்கம்‌, சென்னை - 600005.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP vs OPS | மீண்டும் கூட்டணியில் OPS? நிராகரித்த பி.எல். சந்தோஷ்! தூது போன அண்ணாமலை!
Independence Day 2025: சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஜொலிக்கும் சென்னை 10,000 போலீசார் குவிப்பு
வகுப்பறைக்கு வந்த மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு பதற வைக்கும் CCTV காட்சி | Student Died Classroom
முதல் மனைவியுடன் மாதம்பட்டி 2-வது மனைவியின் நிலைமை? | Joy Crizildaa | Madhampatti Rangaraj Marriage
Independence Day Rehearsal : 79-வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு ஒத்திகை தயாராகும்  கோட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Warning: போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
போடு சக்க.! “வசூல் வேட்டை நடத்தினா, வரி வசூல் செய்வோம்“ - ஆம்னி பேருந்துகளுக்கு அரசு எச்சரிக்கை
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
''அதிர்ச்சியூட்டும் அரசுப்பள்ளி சூழல்; ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்வில் சமரசம்- வெளியான உண்மை'' ஆளுநர் சொன்னது என்ன?
US Tariff Warning: “ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
“ட்ரம்ப்-புதின் பேச்சுவார்த்தை சரியா போகலைன்னா இந்தியாவுக்கு இருக்கு“ - அமெரிக்கா எச்சரிக்கை
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி மாற்றம் - தேர்வு வாரியம் கூறும் காரணம் என்ன.? விவரம் இதோ
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
தமிழகத்தில் தற்கொலைகள் உச்சம்! பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு! அதிர்ச்சி தரும் ஆளுநர் உரை
J&K Cloudburst: ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளம்; 38 பேர் பலி - மீட்புப் பணியில் இணைந்த ராணுவம்
SC on Aadhar Card: அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
அப்படி சொல்லுங்க ஜட்ஜ் ஐயா.! ஆதாரை அடையாள ஆவணமாக ஏற்க EC-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
எழுந்த விமர்சனம்; ’’தூய்மைப் பணியாளர்களின் மாண்பை..’’ முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Embed widget