மேலும் அறிய

‛ஏசு நாதர் இருக்க வேண்டிய இடத்தில் மகாலட்சுமி எப்படி வந்தார்?’ ஜெய்பீம் மீது எச்.ராஜா பாய்ச்சல்!

‛‛மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்’’ -எச்.ராஜா

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான பின்  ஆண்டாள் கோயிலில் ஜீயரை சந்தித்த பிஜேபி மூத்த தலைவர்  H.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்..


‛ஏசு நாதர் இருக்க வேண்டிய இடத்தில் மகாலட்சுமி எப்படி வந்தார்?’ ஜெய்பீம் மீது எச்.ராஜா பாய்ச்சல்!
‛‛சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரியிலும் மிக மோசமான மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருக்கும் போது சென்னையை சிங்காரச் சென்னையாக ஆக்குவேன் என கூறினார்.ஆனால் தற்போது மழை பெய்தால் மூழ்கிற சிங்க் சென்னையாக உள்ளது. 

கருணாநிதி காலத்தில் கட்டபட்ட வள்ளுவர் கோட்டம், நீர் நிலையை மூடி அதன் மீது கட்டப்பட்டது. சட்டத்திற்க்கும் நியாயங்களுக்கும் மரியாதை கிடையாது. சென்னையில் மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு வீட்டிற்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கு மூலம் கொடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்கள் கடலூர் கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எந்த ஒரு வேலையும் நடைபெறவில்லை. கோயிலில் தங்கம் எடுக்கின்ற வேலையை  மட்டும் செய்தது.அது நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு செயல்பட ஆரம்பிக்க வேண்டும் இல்லையென்றால் மக்கள் ஹனிமூன் செல்வது மாதிரி ஆறு மாதத்தில் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் இரண்டு முடிந்து போய்விட்டது. மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்க இந்த அரசு கவனம் செலுத்த வேண்டும்.

திமுக அரசு, கோயிலை கொள்ளை அடிக்க கூடாது. உண்டியல் நிரம்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ... கோயில் பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். அறநிலையத்துறை அசுரக் கூட்டம், அரக்கர்கள் கூட்டம் கோயில்களை பூட்டுவதற்க்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் உள்ளது. கோயில்களை பூட்டுவதற்க்கு நீங்கள் யார்?


‛ஏசு நாதர் இருக்க வேண்டிய இடத்தில் மகாலட்சுமி எப்படி வந்தார்?’ ஜெய்பீம் மீது எச்.ராஜா பாய்ச்சல்!

கோயில் விஷயங்களை தலையிடுவதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரம் கிடையாது கோயிலில் அத்துமீறி செயல்பட்டால், ஒவ்வொரு அதிகாரிகளையும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க நிர்பந்தம் செய்ய என்னால் முடியும். இதனால் என் மீது தமிழ்நாடு முழுவதும்  எத்தனை பொய் வழக்குகள் போடட்டும். அதை சந்திக்க தயார்.


கோயம்புத்தூர் பள்ளி மாணவி பாலியல் தொல்லை தற்கொலையில், தப்பு செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். போஸ்கோ சட்டம் உள்ளது. யாராக இருந்தாலும் பரவாயில்லை. பள்ளி தாளாளர் மீரா ஜக்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அதை வரவேற்கிறோம் தவறு செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.


திமுக அரசு செயல்படாத அரசாக கொளத்தூர் தொகுதியில் மக்கள் மிதந்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு திட்டங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கோயிலில் கொள்ளை அடிக்கிற திட்டம் தமிழக அரசால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.


ஜெய்பீம் படத்தில் உண்மை சம்பவம் என்று கூறுகிறார்கள். அந்தோணிசாமி என்ற பெயர் மட்டும் குரு மூர்த்தியாக மாற்றியிருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக் கூடாது.காலண்டர் வைத்தாக வேண்டுமென்றால் இயேசுநாதர் காலண்டரை வைக்கவேண்டும். மகாலட்சுமி காலண்டரை ஏன் வைத்தார்கள்? இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? அந்த மகாலட்சுமி காலண்டரை அப்புறப்படுத்த வேண்டும் இல்லை என்றால் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.


நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்து மக்கள் கோயிலுக்கு போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி பேசி இருக்கலாம், வேளாங்கன்னிக்கு போக வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம் அவர்கள் சொல்லவில்லை ஏனென்றால் அது அவர்கள் மதம்.


ஜெய்பீம் படம் வன்னியர் குல சமுதாயத்தையும் பட்டியல் சமுதாயத்தையும் சண்டைகளை மூட்டி அதன் மூலம் மதமாற்றம் செய்யலாம் என்ற முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவுஅமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fight

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
ரூ.28.15 கோடி மதிப்பில் சாலைப்பணிகள்... தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் பெருமிதம்
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
Sai Sudharsan: பரவால தம்பி.. குஜராத்தை தாங்கிப் பிடித்த தமிழன்.. அனைத்து அணிக்கும் சிம்ம சொப்பனம் சாய் சுதர்சன்!
IPL 2025 MI Vs GT: தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
தமிழ் பாய்ஸின் அதிரடி வீண்; கோட்டை விட்ட குஜராத் - குவாலிஃபயர் 2-க்கு சென்ற மும்பை
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
போதை ஏறாமல் கமல்ஹாசனுக்கு போன் பண்ணுன ரஜினிகாந்த் - ஏன்? எதுக்கு?
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
அன்புமணியால் ராமதாஸ் உயிருக்கு ஆபத்து - வி.ஜி.கே.மணிகண்டன் பரபரப்பு பேட்டி
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு  போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Minister Mano Thangaraj: ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்... மாடு வாங்க கடன்! ஏபிபி நிகழ்வில் ஸ்வீட் செய்தி சொன்ன அமைச்சர் மனோ தங்கராஜ்
Impact Makers Conclave: ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
ரூ.1000-க்கு கரண்ட் யூஸ் பண்றதுக்கு, எவ்ளோ கார்பன் உமிழ்வு ஏற்படுது தெரியுமா.? அதிர்ச்சித் தகவல்
Embed widget