மேலும் அறிய

மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக வாழ்க்கையையும் ஸ்தம்பிக்க வைத்தது. 

உலகை உலுக்கிய கொரோனா:

கடந்த 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டை முழுவதும் புரட்டிப்போட்டது இந்த கொரோனா. குறிப்பாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டு முழுவதும் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஊரடங்கு காலத்திலே கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், வேலைகளையும் இழந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட கையில் பணம் இல்லாமல் நாடு முழுவதும் மக்கள் அவதிக்கு ஆளாகினர். 

மீண்டும் அச்சுறுத்தல்:

இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உலகளவில் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. இது மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கடந்த கால கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தும், அதன் இழப்புகளில் இருந்தும் இன்னும் வெளியில் வராத மக்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர். 

உலகளவில் அதிகரித்து வரும் இந்த கொரோனாவை தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் 60-ஐ கடந்தது. மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிரிழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

முகக்கவசம் கட்டாயம்:

கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு தமிழக அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பலருக்கும் சளி, இருமல் போன்ற தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

தமிழ்நாட்டில் கோடைக் காலம் என்றாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதும், இனி வரும் நாட்கள் தமிழ்நாட்டில் மழையின் தாக்கம் அதிகளவில் காணப்படும் என்பதாலும் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு அதிகளவு உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இது கொரோனாவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திடக் கூடாது என்று சுகாதாரத்துறையினர் மிகுந்த கவனமாக உள்ளனர். இதன் காரணமாகவே, முகக்கவச அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

அச்சத்தில் மக்கள்:

அதேசமயம், கொரோனாவில் இருந்து தற்போதுதான் ஓரளவு மீண்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் கொரோனா அதிகரிப்பு, முகக்கவசம் கட்டாயம் போன்ற அறிவிப்பால் சற்று பீதி அடைந்துள்ளனர். மக்களின் முழு அச்சமும் மீண்டும் ஊரடங்கு நிலையை எதிர்கொண்டால் என்ன செய்வது? என்பதே ஆகும். ஊரடங்கு போன்ற மோசமான நிலையை எதிர்கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அடிப்படை கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget