மேலும் அறிய

ஆண்டிப்பட்டி செவிலியர் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி

’’செவிலியர் செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளனர்’’

திண்டுக்கல் பாரதிபுரம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவர், திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள ஓட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி (46).  இவர், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து அவர், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் செல்வி வசித்து வந்தார். ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில ஆண்டுகளாக செல்வி மட்டும் தனியாக வசித்து வந்துள்ளார். அங்கிருந்தபடியே ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவர் பணிக்கு சென்று வந்துள்ளார். கடந்த மாதம் செல்வி வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில். உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பூஜை அறையில், ரத்த வெள்ளத்தில் செல்வி பிணமாக கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை மர்ம நபர் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது.


ஆண்டிப்பட்டி செவிலியர் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி

இதுகுறித்து ஆண்டிப்பட்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். செல்வியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் மற்றும் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியவர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அதன்படி கடந்த 10ஆம்  தேதியன்று, தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த கம்பம் அரசு மருத்துவமனை ஊழியர் ராமச்சந்திரபிரபு (34) என்பவரிடம் விசாரணை நடத்தினர். 


ஆண்டிப்பட்டி செவிலியர் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி

விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவரை மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். ஆனால் அவர், சென்ற 11ஆம் தேதி உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துக்காடு வனப்பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ராமச்சந்திரபிரபு மீது போலீசாருக்கு மேலும் சந்தேகம் அதிகரித்தது. இதைத்தொடர்ந்து ராமச்சந்திரபிரபு குறித்து விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 


ஆண்டிப்பட்டி செவிலியர் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி

கொலை செய்யப்பட்ட செவிலியர் செல்வியும், மருத்துவ பணியாளர் ராமச்சந்திரபிரபுவும் கடந்த 10 ஆண்டுக்கு முன்பு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் இருவரும் வெவ்வேறு மருத்துவமனைக்கு இடமாறுதல் ஆகினர். ஆனால் அவர்களுக்கிடையேயான தொடர்பு நீடித்துள்ளது. செல்வியிடம் கடனாக கொடுத்த பணத்தை தரும்படி ராமச்சந்திரபிரபு கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர் பணம் தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. 

சம்பவத்தன்று மதியம் 2 மணியளவில் செல்வியின் வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். இந்த காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அப்போது செல்விக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் செல்வியை அவர் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். கொலை நடந்த வீட்டில் பதிவான கைரேகையும், ராமச்சந்திரபிரபுவின் கைரேகையும் ஒத்து போனது. மேலும் செல்வியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை ராமச்சந்திரபிரபு எடுத்து சென்றுள்ளார். அதனை பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அவர் அடகு வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இருந்து நர்சு செல்வியை கொலை செய்தது, ராமச்சந்திரபிரபு தான் என்பதை போலிசார் உறுதிசெய்துள்ளனர்.

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்க

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
Chief Election Commissioner: புதிய விதிகளின் கீழ்..நாட்டின் முதல் தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் - யார் இந்த ஞானேஷ்குமார்?
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
”டங்கஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்துவிட்டு, சிப்காட்டா?” எதிர்க்கத் தொடங்கிய மதுரை மக்கள்..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
Salem Metro Train Project: ”சேலத்தில் மெட்ரோ ரயில்” எங்கே ? எப்போது? முழு விவிரம் இதோ..!
”பொதுச்செயலாளரிடம்  கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
”பொதுச்செயலாளரிடம் கேளுங்க.. அவர் வேலையை பார்த்தால் நல்லது!” எடப்பாடிக்கு செங்கோட்டையன் பதிலடி
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
முதலமைச்சர் வெட்கப்படனும்! பொய்யைச் சொல்லி பொழப்பு நடத்துறீங்க! அண்ணாமலை பேசியது ஏன்?
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
Share Market: சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி! இந்திய பங்குச்சந்தை நிலவரம்!
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
போலீசுக்கே பாலியல் தொல்லை; பழவந்தாங்கல் கொடூரத்திற்கு காரணம் ஒயின்ஷாப்பா? கோபத்தில் மக்கள்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.