மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு  தமிழிழும் அர்ச்சனை செய்யப்பட்டு நடத்தப்படும் - அமைச்சர் சேகர் பாபு !

மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார் அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

சேகர் பாபு ஆய்வு
 
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசாமி திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு அதற்கான பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கும்பாபிஷேகத்திற்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, செய்து தருவதற்கான ஆலோசனைகளை கோயில் அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர் தலைமையில் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
 
 திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என சீமான் உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்துள்ளது குறித்த கேள்விக்கு   
 
சீமான் நிறைய பேசினார், அதையெல்லாம் சொல்ல மாட்டீர்களே என செய்தியார்களிடம் கேட்டு விட்டு தொடர்ந்து பதில் அளித்தார்.. இந்த ஆட்சி நடத்தப்பட்ட பிறகு தான் பழனி, வழக்கு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்படும். என, அறிவித்து பழனியில் தமிழிலும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இன்னார் சொல்லித்தான் நடத்தப்பட வேண்டும் என்று இல்லை. எங்கள் அறங்காவலர் குழுக்கள் ஆய்வு செய்து திருச்செந்தூரில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்த பிறகுதான் இது நடந்ததாக கூறுவதற்கும் தானாக கனிகின்ற கனியையும், எங்களது மந்திரச் சொற்களால் தான் கனிந்தது என்று கூறுவதைப் போல் உள்ளது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் தமிழில் அர்ச்சனை செய்யும், அர்ச்சகர்களுக்கு வரக்கூடிய கட்டணத்தில் 60 சதவீதத்தை வழங்கிய ஆட்சி. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் இதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாயகனுடைய கொள்கை. ஆகவே திருச்செந்தூரில் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு தமிழிழும் நடத்தப்படும் என தெரிவித்தார். திமுக அரசு சார்பில் அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது. 
 
முருக பக்தர் மாநாடு குறித்த கேள்விக்கு
 
அனைத்து உலக முருக பக்தர்கள் மாநாடு நடத்திய போது எந்த அரசியல் கட்சித் தலைவர்களையும் அழைக்கவில்லை. கட்சி சார்பிலே எந்தவிதமான பேட்டியும் தரவில்லை. மதச்சார்புடைய எந்தவிதமான அடையாளமும் அங்கு பயன்படுத்தப்படவில்லை. முழுக்க முழுக்க அறநிலையத்துறையின் பணி அது. அந்த மாநாட்டிற்கு வா என்று அழைக்கவில்லை. நாங்கள் ரசீது புத்தகத்தை அடித்துக் கொண்டு வசூலிக்கவில்லை. ரயிலை பயன்படுத்தி இலவசமாக கட்டண செலுத்தாமல் அனுமதிக்க வேண்டுமென கேட்கவில்லை. 27 நாடுகளில் இருந்து முருக பக்தர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு உண்மையான முருக பக்தர்கள் வந்தார்கள். இந்து அறநிலையத்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டிற்கு முதல்வர் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட மாநாடு முழுக்க முழுக்க முருக பக்தர்களால் நடத்தப்பட்ட மாநாடு. 
 
2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்
 
ஆனால் தற்போது நடக்க உள்ள மாநாடு அரசியல் நோக்கத்தோடு அரசியலில் லாபம் காண வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற மாநாடு.  இதுதான் மாநாடு  என்றால் பழனியில் நடைபெற்ற மாநாட்டிற்கு  என்ன பெயர் வைப்பது. இந்த ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற தாரக மந்திரத்தோடு செயல்படக்கூடிய முதல்வர் மதத்தால், மொழியால், இனத்தால் மக்களை பிரிக்க இந்த மண்ணிலே முதல்வர் அனுமதிக்க மாட்டார் அதன் முடிவு 2026 சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.

தலைப்பு செய்திகள்

மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் மத்திய அரசு 'நோ': தமிழக வளர்ச்சிக்குத் தடை?
மதுரை, கோவை மெட்ரோவுக்கு மீண்டும் மத்திய அரசு 'நோ': தமிழக வளர்ச்சிக்குத் தடை?
அரிசி விலை உயர்வு: மக்கள் கலக்கம், 'ஜனநாயகன்' கவலையில் முதல்வர் விஜய்? - ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம் !
அரிசி விலை உயர்வு: மக்கள் கலக்கம், 'ஜனநாயகன்' கவலையில் முதல்வர் விஜய்? - ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம் !
மதுரையில் நாளை மின்தடை (ஜூலை 28) : உங்கள் பகுதிக்கு பாதிப்பு உண்டா? உடனே செக் பண்ணுங்க !
மதுரையில் நாளை மின்தடை (ஜூலை 28) : உங்கள் பகுதிக்கு பாதிப்பு உண்டா? உடனே செக் பண்ணுங்க !
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!
மானாமதுரை வீர அழகர் கோயில் ஆடி பிரம்மோத்ஸவம்: சுந்தரராஜப் பெருமாள் திருக்கல்யாணம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
சி.வி.சண்முகம் தவெக-வுக்கு போறாரா? - உண்மையை உடைத்த ஆதரவாளர்... இபிஎஸ்ஸுக்கு விழுந்த செக்!
Udhayanidhi Vs TVK Govt.: “நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
“நாங்க மிசாவையே பாத்தவங்க, இந்த கைதுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்“ - தவெக அரசுக்கு உதயநிதி பதிலடி
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
2026 Upcoming Scooters: இன்னும் 6 மாசத்துல.. சந்தைக்கு வரப்போகும் 10 ஸ்கூட்டர்கள்! இ ஸ்கூட்டர் மட்டும் இத்தனையா?
Embed widget