மேலும் அறிய

Bakrid 2024 : களைகட்டும் பக்ரீத் பண்டிகை ஏற்பாடுகள்.. திருப்புவன சந்தையில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை ஜோர்

”நாட்டுக் கோழி கிலோ 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை, உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

Bakrid 2024: பக்ரீத் பண்டிகையை ஒட்டி, ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூபாய் ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றதாக சந்தை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பக்ரீத் பண்டிகை 2024

உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத்துக்கு தனி இடம் உண்டு. இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 10 ஆம் நாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இந்தாண்டு வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திருப்புவனம் கால்நடை சந்தையில் 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.

களைகட்டும் கால்நடை சந்தை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மெயின் ரோடு பகுதிகளில் வாரம் தோறும் செவ்வாய் அன்று கால்நடை சந்தை நடைபெறும். அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரை ஆடு, கோழி, வாத்து, வான் கோழி முயல் உள்ளிட்டவைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படும். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கால்நடைகளை மொத்தமாக வாங்கி செல்வார்கள். சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில்தான் கால்நடைகள் அதிகளவு வளர்க்கப்படுகிறது. பச்சேரி, மணல்மேடு, பெத்தானேந்தல் அல்லிநகரம், பழையனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடுகள் வளர்ப்பு பிரதான தொழிலாக இருந்து வருகிறது.

- Premji Amaran wife: இவங்க தான் பிரேம்ஜி மனைவி... மணப்பெண் புகைப்படத்தை வெளியிட்ட வெங்கட் பிரபு

விலைவாசி உயர்ந்தது

விவசாயிகள் தங்களது ஆடுகளை வாரச்சந்தையில் விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருவாயில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். தீபாவளி, ஆடி, சிவராத்திரி, ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட சுப தினங்களுக்கு கால்நடை சந்தை களை கட்டும். இதனால் பலரும் ஆடுகள் வாங்க சந்தையில் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை முதல் ஆடுகள் வரத்து அதிகளவு இருந்தது. காலை 8 மணி வரை 3ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. எடைக்கு ஏற்ப ஒரு ஆடு 15 முதல் 45 ஆயிரம் வரை ஆடு  விற்பனையாகின.

திருமணம், காதணி விழாக்களில் அசைவ விருந்திற்கு ஆட்டுக் கிடா வைத்து பயன்படுத்துவார்கள். தேவை அதிகரிப்பால் இந்த சமயத்தில் விலை அதிகரித்துள்ளது. இதே போல நாட்டுக் கோழிகளின் விலையும் உயர்ந்துள்ளது. நாட்டு கோழி கிலோ 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோழிகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 

பக்ரீத் பண்டிகை  விற்பனை எப்படி?

மேலும் இது குறித்து ஆடு வியாபாரிகள் கூறுகையில்...,”வரும் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருகிறது. இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டு, விலை அதிகரித்தது. ஆடுகளும் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், விற்பனை ரூபாய் ஒரு கோடிக்கு மேல் நடைபெற்றுள்ளது” என தெரிவித்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - சிறுபான்மையினர் மாணவர்கள் விடுதிகளில் தங்கிப் பயில விண்ணப்பிக்கலாம் - சேருவதற்கான தகுதிகள் என்னென்ன?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மோடிக்கு லேட்டாக வாழ்த்து சொன்ன பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.. என்ன மேட்டர்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget