மேலும் அறிய

Anna University Abuse: அண்ணா பல்கலை. வன்கொடுமை; கல்லூரி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம்- அமைச்சர் அதிரடி!

பல்கலைக்கழகங்களில்‌ பயிலும்‌ மாணவ மாணவிகளின்‌ பாதுகாப்பை உறுதிசெய்திட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்து பதிவாளர்களுடனான ஆய்வுக்‌ கூட்டம்‌ அமைச்சர்‌ செழியன்‌‌ தலைமையில்‌ நடைபெற்றது.

அண்ணா பல்கலைக்கழக வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி வளாகங்களில் இதெல்லாம் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகங்களில்‌ மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்‌, மாணவ மாணவிகளின்‌ பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மற்றும்‌ பல்கலைக்கழகங்களின்‌ செயல்பாடுகள்‌ குறித்த ஆய்வுக்‌ கூட்டம்‌ உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ முனைவர்‌ கோவி. செழியன்‌ தலைமையில்‌ இன்று (07.01.2025) நாமக்கல்‌ கவிஞர்‌ மாளிகையில்‌ நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ அமைச்சர்‌ தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்‌ இந்திய அளவில்‌ உயர்கல்வியில்‌ தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கும்‌ வகையில்‌ சீரிய திட்டங்களை வழங்கி செயல்படுத்தி வருகிறார்கள்‌. மாணவ மாணவிகளின்‌ கல்வித்‌ தரம்‌ உயர வேண்டும்‌, மாணவ மாணவிகள்‌ கல்வி கற்க பொருளாதாரம்‌ ஒரு தடையாக இருக்கக்‌ கூடாது என்பதை கருத்தில்‌ கொண்டு புதுமைப்‌ பெண்‌, தமிழ்ப்‌ புதல்வன்‌, நான்‌ முதல்வன்‌ போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்‌.

இந்திய அளவில்‌ மட்டுமல்லாது தமிழ்நாட்டை உலக அளவில்‌ உயர்கல்வியில்‌ சிறந்த முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும்‌ என்ற எண்ணத்தில்‌ உயர்கல்வித்‌ துறை சார்பில்‌ பல்வேறு முன்னெடுப்புகள்‌ செய்யப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ நடந்த விரும்பத்தகாத சம்பவத்தில்‌ துரித நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும்‌ அறிந்தே.

கூர்நோக்கு பகுதிகளைக் கண்டறிக

இதுபோன்ற சம்பவங்கள்‌ எந்தவொரு கல்வி நிறுவனத்திலும்‌, நிகழாமல்‌ இருப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கல்வி நிறுவனங்களில்‌ இரவு நேரங்களில்‌ அனைத்து பகுதிகளிலும்‌ மின்விளக்குகள்‌, கண்காணிப்பு கேமராக்கள்‌ இருப்பதை உறுதி செய்ய வேண்டும்‌. குறிப்பாக கூர்நோக்கு பகுதிகள்‌ கண்டறியப்பட்டு அங்கு மின்விளக்குகள்‌ மற்றும்‌ கண்காணிப்பு கேமராக்கள்‌ அமைக்கப்பட வேண்டும்‌.

 கட்டாய அடையாள அட்டை

கல்வி நிறுவன வாளகத்திற்குள்‌ உள்‌ நுழைபவர்கள்‌ மற்றும்‌ வெளியே செல்பவர்களின்‌ தகவல்கள்‌ பதிவேட்டில்‌ பராமரிக்கப்பட வேண்டும்‌. வளாகத்திற்குள்‌ கண்டிப்பாக மாணவர்கள்‌ பேராசியர்கள்‌, பணியாளர்கள்‌ அனைவரும்‌ அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்‌. அவசர காலங்களில்‌ உதவும்‌ வகையில்‌ தமிழ்நாடு காவல்‌ துறையால்‌ உருவாக்கப்பட்டுள்ள "காவல்‌ உதவி" செயலியின்‌ பயன்பாடு குறித்து மாணவ மாணவிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்‌.

கல்வி நிறுவனங்களில்‌ பாதுகாப்பு பணியில்‌ ஈடுபட்டுள்ள பாதுகாப்பு அலுவலர்கள்‌ இரவு நேரங்களில்‌ தொடர்‌ ரோந்து பணியில்‌ ஈடுபட வேண்டும்‌, பாதுகாப்பு நடவடிக்கைகளில்‌ மாணவ மாணவிகளின்‌ ஆலோசனையினையும்‌ பெற்று அவற்றை செயல்படுத்த வேண்டும்‌ உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மேலும்‌ எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, உயர்கல்வித்‌ துறையை மேலும்‌ செம்மைப்படுத்தவும்‌ பதிவாளர்களின்‌ ஆலோசனைகளை வரவேற்பதாகவும் அமைச்சர் செழியன் தெரிவித்தார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
ஜனவரி மாதம் மட்டும் மெட்ரோவில் இவ்வளவு பேர் பயணமா? வெளியான அதிகாரப்பூரவ தகவல்
TVK Vijay Follows Astrology?: ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
ஜோசியர் பிடியில் விஜய்.? 19-ன் மர்மம் என்ன.!? புலம்பும் தவெகவினர்...
Budget 2025 Highlights: தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
தமிழ்நாட்டிற்கு அல்வா... வருமான வரியில் சர்ப்ரைஸ்... பட்ஜெட் 2025-ன் சிறப்பம்சங்கள்...
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Budget 2025 Expenditure: மத்திய பட்ஜெட் - எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி? மொத்த வருவாய், செலவு விவரங்கள், கடன் இலக்கு?
Gold Rate on Budget Day: அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
அடங்க மறுக்கும் தங்கம்...பட்ஜெட் அன்றும் விலை உயர்ந்தது...
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Nirmala Sitharaman Saree: நிர்மலா சீதாராமன்..! வெள்ளை நிறம் தங்க சரிகை சேலை, உணர்த்துவது என்ன? சந்தோஷம் கிட்டுமா?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Budget 2025: மக்களே! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்! மக்களை மகிழ்விப்பாரா நிர்மலா சீதாராமன்?
Embed widget