மேலும் அறிய

"யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது.. மனசுல பட்டதை பேசுவோம்" பொங்கி எழுந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

தங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது என்றும் மனதில் பட்டதை பேசுவோம் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷியாவும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேலும் போர் நடத்தி வரும் நிலையில், உலகம் முழுவதும் கொந்தளிப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த இரண்டு போர்களும் உலகில் பல்வேறு விதமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொந்தளிப்பான சூழலில் உலக நாடுகள்:

போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என இந்தியா உள்பட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், சிங்கப்பூருக்கு சென்றுள்ள வெளிவிவகாரங்கள் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது, உணர்ச்சிமிக்க, மொழியியல் ரீதியாக வேறுபட்ட விஷயங்களை வெளிநாட்டு அதிகாரிகளுடன் அரசு அதிகாரிகள் எப்படி அணுகுகிறார்கள் என கேள்வி முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், "ராஜங்க ரீதியான உறவில், வெவ்வேறு நாடுகள் தங்கள் சொந்த கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் மற்றும் சில சமயங்களில் தங்கள் மொழி அல்லது கருத்துக்களை விவாதத்திற்கு கொண்டு வருகின்றன.

வித்தியாசமான பார்வைகள் இருப்பது இயற்கையே. ராஜதந்திரம் என்பது அதை சமரசம் செய்து ஒருவித உடன்பாட்டிற்கு வருவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதாகும். குழப்பம் இல்லாத போதும் சில சிக்கல்கள் வருவது உண்டு" என்றார்.

மனம் திறந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்:

இதை தொடர்ந்து, பயங்கரவாதம் குறித்து பேசிய மத்திய அமைச்சர், "எந்த மொழியில் சொன்னாலும், பயங்கரவாதி பயங்கரவாதிதான். பயங்கரவாதம் போன்றவற்றை மன்னிக்கவோ அல்லது பாதுகாக்கவோ அனுமதிக்காதீர்கள். ஏனென்றால், பயங்கரவாதம் குறித்து அவர்கள் வேறு விளக்கத்தை தருகிறார்கள்.

வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டிருக்கக்கூடிய இரண்டு தேசங்களுக்கு இடையே உண்மையாகவே சிக்கல்கள் இருக்கலாம். செய்த தவறுகளை மறைக்க நியாயம் கூட கற்பிக்கலாம். அந்த வித்தியாசத்தைக் கண்டறிந்து, அதை எப்படிச் சமாளிப்பது என்று ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் இந்தியா. எங்களுக்கு யாரும் அழுத்தம் கொடுக்க முடியாது. மனதில் பட்டதை பேசுவோம். நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம் என்றால், நாட்டின் குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டே முடிவுகளை எடுப்போம்.

அதிகமான இந்தியர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறுவதால், அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் கடினமான நிலையில் இருந்தால் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவது, அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. கடந்த மூன்று மாதங்களில் 1,000க்கும் மேற்பட்ட தேடல் பணிகளை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிக்க: Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Top 10 Headlines: மெஜாரிட்டி பெற்றது தவெக... ஷாக் கொடுத்த மோடி.. ஆர்சிபிக்கு புது கிரவுண்ட் - டாப் 10 செய்திகள்
Top 10 Headlines: மெஜாரிட்டி பெற்றது தவெக... ஷாக் கொடுத்த மோடி.. ஆர்சிபிக்கு புது கிரவுண்ட் - டாப் 10 செய்திகள்
Gold Tariff: காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
காலையிலேயே இடியை இறக்கிய மத்திய அரசு - தங்கம், வெள்ளி மீதான வரியை 15% உயர்த்தி அறிவிப்பு
சிலிண்டர் முன்பதிவு செய்தவர்களுக்கு அவசர தகவல்! OTP பகிர்வதில் இந்த தவறு செய்யாதீர்கள்.
சிலிண்டர் முன்பதிவு செய்தவர்களுக்கு அவசர தகவல்! OTP பகிர்வதில் இந்த தவறு செய்யாதீர்கள்.
LPG வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! 7 நாட்களில் விளக்கம் தரவில்லை என்றால் மானியம் நிறுத்தம்!
LPG வாடிக்கையாளர்களுக்கு புதிய அதிர்ச்சி! 7 நாட்களில் விளக்கம் தரவில்லை என்றால் மானியம் நிறுத்தம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

ரதன் பண்டிட்-க்கு பதவியா? ரவுண்டு கட்டிய விசிக கம்யூ உடனே பின்வாங்கிய CM விஜய்
குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay on NEET: “நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
“நீட் தேர்வை ரத்து செய்து +2 மதிப்பெண்களை வைத்து சேர்க்கை'' - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
Vijay Slams Udhayanidhi: மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
மக்கள் ஆதரவு இல்லையா.? புள்ளிவிவரத்துடன் உதயநிதியை வெளுத்து வாங்கிய முதலமைச்சர் விஜய்
VIJAY Vs UDHAYANIDHI: புஷ்பா அரசு என்று ஏளனம் பேசுவதா.? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய்; என்ன சொல்லியிருக்கார்.?
புஷ்பா அரசு என்று ஏளனம் பேசுவதா.? உதயநிதிக்கு தரமான பதிலடி கொடுத்த விஜய்; என்ன சொல்லியிருக்கார்.?
CV Shanmugam: ''தாழ்த்தப்பட்டவருக்கு முதல்வர் பதவி; திருமா வாய்ப்பை தட்டிவிட்ட ஈபிஎஸ்'' சீறிய சி.வி.சண்முகம்
CV Shanmugam: ''தாழ்த்தப்பட்டவருக்கு முதல்வர் பதவி; திருமா வாய்ப்பை தட்டிவிட்ட ஈபிஎஸ்'' சீறிய சி.வி.சண்முகம்
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Edappadi Palanisamy: அதிமுக-விற்கு புதிய பொதுச்செயலாளரா? பறிபோகிறதா எடப்பாடி பழனிசாமி பதவி?
Gold Silver Rate May 13th: காலையில் அதிரடி உயர்வு, மாலையில் அதிரடி குறைவு; தங்கம் இப்படி ஆட்டம் காட்டுதே.! இப்போ எவ்வளவு.?
காலையில் அதிரடி உயர்வு, மாலையில் அதிரடி குறைவு; தங்கம் இப்படி ஆட்டம் காட்டுதே.! இப்போ எவ்வளவு.?
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
Asra Garg IPS: உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கார்க் நியமனம்.. கரூர் வழக்கை விசாரிக்க வந்ததே இவர் தான்!
SP Velumani: அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
அதிமுகவில் எதிர்பாராத திருப்பம்; மீண்டும் சசிகலா, டிடிவி தினகரன்; எஸ்.பி. வேலுமணி கூறுவது என்ன.?
Embed widget