News Today Live: தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!
News Today LIVE in Tamil: தமிழ்நாடு, இந்தியாவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.
LIVE

Background
தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!
Corona Update : தமிழ்நாட்டில் 1,233 பேருக்கு கொரோனா தொற்று 15 பேர் உயிரிழப்பு!
#TamilNadu | #COVID19 | 16 Oct
— TNCoronaUpdates (@TNCoronaUpdate) October 16, 2021
Today/Total - 1,233 / 26,85,874
Active Cases - 15,022
Discharged Today/Total - 1,434 / 26,34,968
Death Today/Total - 15 / 35,884
Samples Tested Today/Total - 1,30,251 / 4,92,83,503**
Test Positivity Rate (TPR) - 1.0%#TNCoronaUpdate #TN pic.twitter.com/NT9qIscweL
நர்சரி பள்ளிகள் குறித்து வெளியான அறிவிப்பு தவறாக வெளிவந்துள்ளது - அமைச்சர் அன்பில் மகேஷ்
ப்ளே ஸ்கூல், எல்.கே.ஜி., யூ.கே.ஜி, உள்ளிட்ட நர்சரி பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளது என்றும் இது குறித்த தெளிவான அறிக்கை ஒரிரு நாட்களில் வெளியடப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீலகிரி, கோவை, தேனியில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், திருச்சி, கரூர் மாவட்டங்களிலும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை
ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க சசிகலா மரியாதை செலுத்தினார். அதிமுகவின் பொன்விழா நாளை தொடங்க உள்ள நிலையில் கண்ணீருடன் மரியாதை செலுத்தினார்.
சுதாகரன் சிறையில் இருந்து விடுதலையானார்
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து சுதாகரன் விடுதலையானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சுதாகரன் 89 நாட்களுக்கு முன்னதாகவே விடுதலை ஆகியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

