மேலும் அறிய

மத்திய அரசு ஏற்றது... மாநில அரசு வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது - விக்கிரமராஜா

ஆன்லைன் நிறுவனங்கள் வந்த பிறகு 20% கடைகள் மூடப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் விக்கிரமராஜா, "தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் வரும் மே 5ம் தேதி 42வது வணிகர் தினத்தன்று, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பிஎஸ்.கோயல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மத்திய அரசு ஏற்றது... மாநில அரசு வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது - விக்கிரமராஜா

குறிப்பாக வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், கட்டிட வரி, மின்சார கட்டணம், லைசன்ஸ் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு பல்வேறு பிரச்னைகள் குறித்து பேச உள்ளோம். ஆன்லைன் வணிகம் வாயிலாக வணிகர்களின் வியாபாரம் 87 சதவீதம் சுரண்டப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் முழுமையாக எங்களின் வணிகத்தை அகற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் வணிக நிறுவனங்கள் சுமார் 10 லட்சத்திற்கும் மேல் கெட்டுப்போன பொருட்களை விற்பனை செய்வதாக தகவல் வந்துள்ளது. பலகோடி மதிப்பில் கெட்டுப்போன பொருட்களை வாங்கி ரீபேக் செய்து விற்பனை செய்கின்றனர். இதற்கான ஆதரங்களை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேகரித்து வருகிறது. 

சாமானிய வணிகர்களை பாதுகாப்பதற்கு மத்திய அரசும், மாநில அரசும் சிறப்பு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளோம். இது நிறைவேற்றாத போது, அகில இந்திய சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மூலமாக நாடு தழுவிய போரட்டம் நடத்த உள்ளோம். டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் போராட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. சாமானிய வணிகர்களுக்கு பாதுகாப்பு குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும்” என்றார். 

மத்திய அரசு ஏற்றது... மாநில அரசு வியாபாரிகளை ஏமாற்றிவிட்டது - விக்கிரமராஜா

தொடர்ந்து பேசிய அவர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை தொடர்பாக ஐந்து நாட்களுக்கு முன்பு அமைச்சர் மா சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து பேசி உள்ளோம். கடைசி சீல் வைப்பது, சாமானியர்கள் கடைகளில் ஆய்வு என்ற பெயரில் சில அதிகாரிகள் கையூட்டு பணம் வாங்குவது தடுத்து நிறுத்த வேண்டுமென வலியுறுத்தினோம். ஆன்லைன் நிறுவனங்கள் வந்த பிறகு 20% கடைகள் மூடப்பட்டுள்ளது. சாமானிய வணிகர்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அரசு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். ஆன்லைன் கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்களிக்க முடியாது. நாங்கள் தான் இந்த நாட்டின் வாக்காளர்கள். அமேசான், டி மாட் வாக்கு போட முடியாது. ஜிஎஸ்டி என்பது வியாபாரிகளுக்கு சோதனையாக உள்ளது. ஜிஎஸ்டி வந்த பிறகு வியாபாரம் செய்ய வேண்டுமா என்கின்ற அழுத்தம் வியாபாரிகளிடையே எழுந்துள்ளதாக தெரிவித்தார். வணிகர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பட்ஜெட்டில் தனி மனித வருமானம் ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக மாற்றி உள்ளார்கள். மாநில அரசு பட்ஜெட் வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது" என்று கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவைக்கு அடுத்த பெருமை உலகத்தரத்தில் செம்மொழி பூங்கா திறந்து வைத்த முதல்வர் | Coimbatore | Semmozhi Poonga
தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
1 லட்சம் பேருக்கு வேலை.. 43 ஆயிரம் கோடி முதலீடு.. 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் - மாஸ் காட்டிய தமிழக அரசு
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
தேர்வு கட்டணமும் கிடையாது... தேர்வும் கிடையாது: அருமையான சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
ABP Southern Rising Summit 2025 LIVE:  ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
ABP Southern Rising Summit 2025 LIVE: ஆரம்பத்தில் இலவசங்களை கொடுத்தே மார்கெட்டை பிடித்தேன் - ஆச்சி மசாலா நிறுவனர் பத்மாசிங் ஐசக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Embed widget