மேலும் அறிய
Maha Kumbh 2025: மகா கும்பமேளா - 50 கோடியை கடந்த பக்தர்களின் எண்ணிக்கை!
Maha Kumbh 2025: பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் எத்தனை பேர் பங்கேற்றனவர் என்பது பற்றிய விவரத்தை காணலாம்.

கும்பமேளா புகைப்பட தொகுப்பு!
1/8

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை , மகா கும்பமேளா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆன்மீக கொண்டாட்ட நிகழ்வில் துறவிகள், ஆண்கள் , பெண்கள், குழந்தைகள், பண்டிதர்கள் மற்றும் பலர் குவிகின்றனர். கடந்த ஜனவரி 13 ஆம் தேதி, பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும்.
2/8

பிரயாக்ராஜில் தொடங்கிய மகா கும்பமேளா, பிப்ரவரி 26 புதன்கிழமை வரை தொடர்ந்து நடைபெறும். வரலாற்று ரீதியாக, கும்பமேளா புனித நீரில் நீராடுவதுடன், பாவங்களைப் போக்குவதற்கும், மோட்சத்திற்கான பாதையில் இறங்குவதற்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
3/8

இந்த மகா கும்பமேளா உலகின் மிகப்பெரிய மத நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் கொண்டாடப்படும் கும்பமேளாவானது, மூன்று புனித நதிகளான கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதியின் ( பூமிக்கு அடியில் பாயும் நதி ) சந்திக்கு இடமாக கருதப்படுகிறது
4/8

இந்தியா முழுவதிலும் இருந்தும் கும்பமேளாவிற்கு மக்கல் படையெடுத்து சென்று வருகிறார்கள். சாமானிய மக்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார்.
5/8

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டிவிட்டது
6/8

இந்த நிலையில், திங்கள்கிழமை(பிப். 17) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 54.31 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
7/8

ஒரே நாளில், 1.36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8/8

பிப்ரவரி, 26 -ம் தேதி முடிவடைய உள்ளது. அதற்குள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published at : 18 Feb 2025 02:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion