மேலும் அறிய

அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

10 வது படிக்கும் தனது 16 வயது சகோதரியின் எதிர்காலத்திற்காகவும்  , குடும்ப வறுமை காரணமாகவும் தினமும்  விடியற்காலை 3  மணி முதல் இரவு 9 மணி வரை , காய்கறி மார்க்கெட்டில் அயராது உழைக்கும் 13 வயது சிறுவனின் உருக்கமான கதை .

"அப்பாவுக்கு பிறப்பில் இருந்தே இரண்டு காலும் ஊனம் , எங்க அப்பா வழி பாட்டி 'தாந்தோனி' தான்  சின்ன வயசுல இருந்து காய்கறி வியாபாரம் செஞ்சு எங்க அப்பாவ பார்த்துக்கிட்டாங்க . அதுக்கு அப்புறம் தான் , எங்க அப்பா காய்கறி வியபாரத்த முழுசா கத்துக்கிட்டு , வேலூர் டிஐஜி ஆபீஸ் எதிரே உள்ள பலவன்சத்துக்குப்பம் உழவர் சந்தையில் கடை வச்சி  வியாபாரம் செஞ்சிட்டு வந்தாரு , போன மாசம் கொரோனா அறிகுறி இருக்குனு இங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம் , டாக்டருங்க  அவரை செக் பண்ணிபாத்துட்டு , இது கொரோனவா இருக்கும்னு சொன்ன ரெண்டே.... நாலுல இறந்துட்டாரு . அப்பா ,பாட்டி இரண்டுபேருமே இறந்தது தெரிஞ்சி தினமும் கடன் காரங்க 'உங்க அப்பா 50 ஆயிரம் தரணும் , ஒரு லட்சம் தரணும்னு' வீட்டு வாசல்ல நின்னுகிட்டு மிரட்டுறாங்க . அதனால தான்,  அண்ணா அப்பா பார்த்த காய்கறி வியபாரத்த நான் பார்த்துக்குறேன் " என தனது சோக கதையை கூற ஆரம்பித்தார் 13 வயதாகும் யஷ்வந்த் .


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

 

யார் இந்த யஸ்வந்த் ?

வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பலவன்சத்துக்குப்பம் , ஒற்றை வாடி தெருவை சேர்ந்தவர் ஜெயசீலன் (47) ஊட்டச்சத்து குறைபாடுகளால் இரண்டு கால்களிலும் ஊனத்துடன் பிறந்த இவர் , தனது  தாய் தான்தோனி மற்றும் நண்பர்கள் உதவியுடன் பலவன்சத்துக்குப்பதில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்துள்ளார்  . இவருக்கு திருமணம் நடைபெற்று  இந்திரா (40)  என்ற மனைவியும் , ஜனனி என்ற 16 வயது நிரம்பிய மகளும் , யஸ்வந்த் (13) என்ற மகனும் உள்ளனர்  . ஜனனி , யஸ்வந்த் இருவரும் , அவர்கள் பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில்  எட்டாம் வகுப்பும் , பத்தாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர் .


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

இந்நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் தேதி கொரோனா அறிகுறிகளுடன் , வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட ஜெயசீலன் , அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் , அங்குள்ள மருத்துவர்கள் ஜெயசீலனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால்  சிகிச்சைக்கு ,பல லட்சங்கள் செலவாகும்  என்று கூறியதால் , வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 ஆம் தேதியே அனுமதிக்கப்பட்டார் .


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

மூச்சுத்திணறல் , இருமல் , உடல்வலி என அனைத்து கொரோனா அறிகுறிகளும் இருந்த நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் ஜெயசீலனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்  .


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

வெளிநோயாளிகள்  பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஜெயசீலன் மே மாதம் 13 ஆம் தேதி  மூச்சுத்திணறல் காரணமாக அரசு மருத்துவமனையிலேயே உயிர் இழந்தார் . அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்கு கூட பணம் இல்லாமல்  தவித்த ஜெயசீலனின் குடும்பத்தினர் , மாநகராட்சி நிர்வாகத்திடமே   ஜெயசீலனின் உடலை மரியாதை செய்வதற்காக ஒப்படைத்தனர் .


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

'பட்ட காலிலே படும்! கெட்ட குடியே கெடும் ! ' என்ற பழமொழிக்கு ஏற்றாற்போல் , அவர்களது குடும்பத்தில் காய்கறி வியபாரத்தின் அனைத்து நுணுக்கங்களையும் நன்கு அறிந்து , ஜெயசீலன் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்துக்கு ஆணிவேராய் இருந்த ஜெயசீலனின் தாய் தாந்தோனியும் , ஜெயசீலன் இறந்த அடுத்த 5 நாட்களில் உடல் நிலை பாதிப்பால்  உயிர் இழந்தார் .

இவர்கள் இருவரது மரணத்துக்கு பிறகு  , கடன் கொடுத்துதவர்கள் , கடனை திருப்பி தர கேட்டு , ஜெயசீலனின் மனைவி இந்தித்திராவின் கழுத்தை நெறிக்க தொடங்கியதால்  . வேறு வழியின்றி  13 வயது யஸ்வந்த் குடும்ப பொறுப்பை அவரது கையில் எடுத்து கொண்டார் . 


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

ABP நாடு செய்திக் குழுமம் அவரை சந்தித்து அவருடன் உரையாடிய பொழுது " எனக்கு நல்ல படிக்கணும் , எங்க அக்காவையும் நல்ல படிக்க வச்சு கல்யாணம் பண்ணி குடுக்கணும் , உடல் நிலை சரியில்லாத எங்க அம்மாவை கடைசி வரைக்கும்  நல்லா பாத்துக்கணும் அதுக்கு தான் அண்ணா , நான் இவளோ கஷ்டப்படுறேன் "  என தன்னம்பிக்கை கலந்த சோகத்துடன் கூறிய  யஸ்வந்த் , காலை 3 மணிக்கு எழுந்து அவர்களது வீட்டில்  இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வேலூர் "மாங்கா மாண்டி" மொத்த காய்கறி மார்க்கெட்டுக்கு அவரது அப்பா பயன்படுத்திய , மாற்றுத் திறனாளிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஸ்கூட்டரில் , காய்கறி வாங்குவது தொடங்கி , அதை அவர்களது கடையில் விற்றது போக மீதும் இருக்கும் , காய்கறிகளை அவர்களுது வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு டெலிவெரி செய்து , அன்றைய தினத்தின்  வியாபார கணக்குகளை  பார்த்து முடிக்கும் வரைக்கும் தனி ஒரு சிறுவனாக  இருந்து சமாளித்து வருகிறான் . 


அடுத்தடுத்து உயிரிழப்பு: 13 வயதில் காய்கறி வியாபாரத்திற்கு வந்த சிறுவன்!

இந்த ஏழ்மை நிலையிலும் , தன்னம்பிக்கையோடு குடும்ப பாரத்தை சுமக்கும் ,13  வயது சிறுவன் யஷ்வந்தை  அரசு அடையாளம் கண்டு , தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள 18  வயதிற்கு கீழுள்ள சிறுவர்கள்  கொரோனா பாதிப்பு திட்டத்தின் கீழ் வரும் அனைத்து சலுகைகளையும் வழங்கி , அவர்களது குடும்ப கடன் சுமைகளையும்  சரி செய்ய வேண்டும் என்று பலவன்சாத்துக்குப்பத்தை  சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் .

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
Trump on Hamas: ''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
Jamie Smith: தலைதூக்கும் இங்கிலாந்து.. ஜேமி ஸ்மித் அபார சதம்.. திணறும் இந்திய பவுலிங்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
TVK Vijay: நீங்க போறீங்களா.. இல்ல.. சினிமா பாணியில் மு.க.ஸ்டாலினை எச்சரித்த விஜய்!
Trump on Hamas: ''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
''ஹமாஸோட முடிவு இன்னும் 24 மணி நேரத்துல தெரிஞ்சுடும்''; ட்ரம்ப் கூறியது எதைப் பற்றி தெரியுமா.?
விஜய் அதிரடி முடிவு! 2026 தேர்தலில் தனித்து போட்டி? 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்! திமுக, பாஜகவுக்கு ஷாக்!
விஜய் அதிரடி முடிவு! 2026 தேர்தலில் தனித்து போட்டி? 234 தொகுதிகளிலும் ஒரே சின்னம்! திமுக, பாஜகவுக்கு ஷாக்!
சொல்லாததையும் செய்த டிஎன்பிஎஸ்சி; ஓராண்டில் 17,702 பேருக்கு அரசுப் பணி- கூடுதலாக 2,500 காலியிடங்களை நிரப்பத் திட்டம்!
சொல்லாததையும் செய்த டிஎன்பிஎஸ்சி; ஓராண்டில் 17,702 பேருக்கு அரசுப் பணி- கூடுதலாக 2,500 காலியிடங்களை நிரப்பத் திட்டம்!
TVK Vijay: விஜய் எடுத்த முடிவு.. சோகத்தில் அதிமுக.. ஹாப்பியில் திமுக - காரணம் இதுதான்
TVK Vijay: விஜய் எடுத்த முடிவு.. சோகத்தில் அதிமுக.. ஹாப்பியில் திமுக - காரணம் இதுதான்
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 50 வயது பள்ளி ஆசிரியர் கைது- கொடூரம் வெளியே தெரிந்தது எப்படி?
21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; 50 வயது பள்ளி ஆசிரியர் கைது- கொடூரம் வெளியே தெரிந்தது எப்படி?
Embed widget